8TH - NOTES OF LESSON - FEBRUARY - 1ST WEEK

 

நாள்                 :           01-02-2022 முதல்  05-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - முதல் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. தமிழ் மொழி வாழ்த்து

                                              2. தமிழ் வரி வடிவ வளர்ச்சி

கருபொருள்                            :

Ø  செய்யுளின் நயங்களை அறிதல்.

Ø  தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலையை அறிதல்

உட்பொருள்                           :

Ø  செய்யுளின் குறிப்புகள் அறிதல்

Ø  ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  செய்யுளில் காணப்படும் நயங்களை அறிதல்

Ø  தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலையை அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, தமிழ் வரி வடிவ வளர்ச்சி நிலை ( புத்தகம் – PDF)

கற்றல் விளைவுகள்                 :

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளின் பொருள் உணர்தல்

Ø  தாம் படித்தவற்றில் உள்ள நயங்களை எடுத்துரைத்தல்

Ø  தமிழ் எழுத்தின் வரி வடிவங்களினை அறிந்து தெளிதல்

Ø  தற்காலத்தில் பயன்படுத்தப்படும் முறையான எழுத்து வடிவங்களை பத்திரிக்கைகள், இதழ்கள்,கட்டுரைகள் போன்றவற்றில் அடையாளம் காணுதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  தமிழ் சொல் விளையாட்டு மூலம் பாடப்பொருளை ஆர்வ மூட்டல்

Ø  தமிழ் வரி வடிவ வளர்ச்சியின் தொகுப்பினைக் காண்பித்து அறிமுகம் செய்தல்

 

படித்தல்                                  :

Ø  செய்யுளினை சீர்ப் பிரித்து படித்தல்

Ø  செய்யுளினை இனிய ஓசையில் இராகமாகப் பாடுதல்

Ø  உரை நடைப் பகுதியினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø  புதிய சொற்களை அடையாளம் காணுதல்

நினைவு வரைபடம்                 :

                                                            தமிழ் மொழி வாழ்த்து



                                                            தமிழ் வரி வரிவ வளர்ச்சி



தொகுத்து வழங்குதல்             :

தமிழ் மொழி வாழ்த்து

Ø  ஆசிரியர் : சி. சுப்ரமணிய பாரதியார்

Ø  பன்முக ஆற்றல் : கவிஞர், எழுத்தாளர்,சிந்தனையாளர்,இதழாளர்,சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர்

Ø  பாராட்டுப் பெயர்கள்:         சிந்துக்கு தந்தை

·        செந்தமிழ்த் தேனீ

·        புதிய அறம் பாட வந்த அறிஞன்

·        மறம் பாட வந்த மறவன்

Ø  நடத்திய இதழ்கள்  : இந்தியா, விஜயா

Ø  தமிழ் மொழி எக்காலத்துக்கும் நிலைபெற்று வாழ்க

Ø  ஏழ்கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தமிழ் மொழி வாழ்க

Ø  எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்க தமிழ் மொழி வாழ்க

Ø  வானம் உள்ள வரை எல்லாப் பொருண்மைகளை அறிந்து மென்மேலும் தமிழ் மொழி வாழ்க.

Ø  நயங்கள் : எதுகை, மோனை, இயைபு

Ø  ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து

Ø  அச்சுக்கலை தோன்றிய பிறகு தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

Ø  கல்வெட்டுகள் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் ,கிடைக்கின்றன

Ø  செப்பேடுகள் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

Ø  பாறைகளில் வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது.

Ø  வட்டெழுத்து, தமிழ் எழுத்து, கண்ணெழுத்து

Ø  தமிழ் எழுத்துகளில் சீர் திருத்தம் செய்தவர்கள் : 1. வீரமா முனிவர், 2. பெரியார்

வலுவூட்டல்                             :

Ø  தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறி வலுவூட்டல்

Ø  செய்யுளில் உள்ள நயங்களைக் கூறி வலுவூட்டல்\

Ø  தமிழ் வரி வடிவ வளர்ச்சி நிலையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு வலுவூட்டல்.

Ø  தமிழ் இன்று கணினி வழியாகவும் உள்ளதைக் கூறி வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  பாரதியார் நடத்திய இதழ்கள் ___________, _____________

Ø  தமிழ் எங்கு நிலைக் கொண்டு வாழ்கிறது?

Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை, இயைபு நயங்களைக் கூறுக.

Ø  பாரதியாரை செந்தமிழ்த் தேனீ எனப்  புகழ்ந்தவர் யார்?

Ø  ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ___________

Ø  செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

Ø  பாறைகளில் எவ்வகையிலான எழுத்துகளை எழுத முடியாது?

குறைதீர் கற்றல்                      :

Ø    பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø    பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்.

Ø   எதுகை நயம் அறிதல், மோனை நயம் அறிதல், இயைபு நயம் அறிதல்

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

தொடர் பணி                          :

Ø  மாணவர்கள் தமிழ்மொழியைப் போற்றக் கூடிய வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்களை எழுதி வருதல்

Ø  பழைய வரி வடிவம் மற்றும் புதிய வரி வடிவம் அட்டவணையை எழுதி வருக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post