9TH - NOTES OF LESSON - FEBRUARY - 1ST WEEK



நாள்                 :           01-02-2022 முதல்  05-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - முதல் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. புணர்ச்சி

                                              2. திருக்குறள்

கரு பொருள்:

·        சொற்களை பிரித்தும், சேர்த்தும் எழுதும் விதிகளை அறிதல்

·        புணர்ச்சி இலக்கண அடிப்படை விதிகளை அறிதல்

·        திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறல்

உட்பொருள்:

Ø  புணர்ச்சி என்பதனை அறிதல்

Ø  புணர்ச்சியில் நிலைமொழி, வருமொழி பற்றி அறிதல்

Ø  புணர்மொழியின் இயல்புகளை அறிதல்

Ø  புணர்ச்சியின் வகைகளை அறிதல்

Ø  உயிரீற்றுப் புணர்ச்சி

Ø  குற்றியலுகரப் புணர்ச்சி பற்றி அறிதல்

Ø  திருக்குறள் கூறும் வாழ்வியல் நெறிகளை அறிதல்

Ø  திருக்குறளின் நெறிகளை பின்பற்றுதல்

கற்றல் விளைவுகள் :

Ø  சொற்களில் உயிரீறு, மெய்யீறு அறிதல்

Ø  சொற்களில் உயிர் முதல், மெய்ம்முதல் அறிதல்

Ø  உடம்படுமெய்யுடன் சொற்களை இணைத்தல்

Ø  பத்தியில் காணும் சொற்களை பிரித்தும், சேர்த்தும் எழுத முற்படுதல்

Ø  குறள்களின் விளக்கம் அறிந்து வாழ்வில் பின்பற்றுதல்

Ø  கொடுக்கப்பட்ட பாடப்பகுதி குறள்களின் பொருள் உணர்தல்

 

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  பாலொடு நீர் சேர்வதால் என்ன நிகழும் என மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

Ø  உங்களுக்குப் பிடித்த திருக்குறள் என்ன? என மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

      வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

       புணர்ச்சி

·        புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். 

·        எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டு களோ , இன்னொரு சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு

·        புணர்ச்சியின் வகைகள் : இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி

·        விகாரப்புணர்ச்சி : 1. தோன்றல், 2. திரிதல்                  3. கெடுதல்

·        உயிரீற்றுப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி விதி அறிதல்

·        இலக்கண விதிகளை விதி வரு முறையில் விளக்குதல்

 திருக்குறள்:

·        சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும்வரை உள்ள நோய்.

·        அறிவில்லாதவனுக் கு அறிவுரை சொல்பவன் அறிவில்லாதவனாக மாறிவிடுவான்! 

·        கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை

·        ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார் 

ஆசிரியர் செயல்பாடு:

Ø    சொற்களின் புணர்ச்சியைத் தக்க சான்றுகளுடன் விளக்க முற்படுதல்

Ø    சொற்களில் உள்ள உயிரீறு , மெய்யீறு ,உயிர் முதல் ,மெய்ம்முதல் விளக்குதல்

Ø    புணர்ச்சி வகைகளுக்கு உள்ள வேறுபாடுகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

Ø    திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்

Ø    திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஏகதேச உருவக அணியினை விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

Ø    புணர்ச்சி ஆழ்ந்த மொழி அறிவுக்குத் துணைபுரியும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

Ø    சொற்களில் நிலைமொழி,வரு மொழியினை அறிதல்

Ø    ஈற்று எழுத்து மற்றும் வரு மொழி முதல் எழுத்தில் ஏற்படும் மாற்றமே புணர்ச்சி என அறிதல்

Ø    திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்

Ø    இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

கருத்துரு வரைபடம்

புணர்ச்சி


திருக்குறள்


வலுவூட்டல்:

                 விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  சொற்களில் காணப்படும் உயிரீறு, மெய்யீறு பற்றி அறிதல்

Ø  வருமொழியில் உள்ள உயிர் முதல், மெய்ம்முதல் பற்றி அறிதல்

Ø  புணர்ச்சி வகைகள் அறிதல்

Ø  மனப்பாடக் குறளை மன்னம் செய்தல்

 

மதிப்பீடு:

Ø  புணர்ச்சி என்றால் என்ன?

Ø  புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

Ø  இயல்புப் புணர்ச்சி என்றால் என்ன?

Ø  உலகப்பொதுமறை எது?

Ø  குடிமை என்றால் என்ன?

Ø  சான்றோர் எனப்படுவோர் யாவர்?

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post