காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 21- 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -7 - விடுதலை திருநாள் - பகுதி 3
( நேற்றைய 20-01-2022 நாளது பாடத்தின் தொடர்ச்சிக் காரணமாக அதே பணித்தாளினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது )
1. வானில் முழுநிலவு அழகாகத் __________ அளித்தது.
அ. தயவு - ஆ. தரிசனம் இ. துணிவு ஈ. தயக்கம்
2. இந்த __________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
அ. வையம் ஆ. வானம் இ. ஆழி ஈ. கானகம்
3. ‘ சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________
அ. சீவ + நில்லாமல் ஆ. சீவன் + நில்லாமல் இ. சீவன் + இல்லாமல் ஈ. சீவ + இல்லாமல்
4. ‘ விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________
அ. விலம் + கொடித்து ஆ. விலம் + ஒடித்து இ. விலன் + ஒடித்து ஈ. விலங்கு + ஒடித்து
5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்____________
அ. காட்டைஎரித்து ஆ. காட்டையெரித்து இ. காடு எரித்து ஈ. காடுயெரித்து
6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்___________________
அ. இதந்தரும் ஆ. இதம் தரும் இ. இதத்தரும் ஈ. இதைத்தரும்
7. சீவன் என்பதன் பொருள் _________________
அ. உயிர் ஆ. உண்மை இ. உலகம் ஈ. உறக்கம்
8. அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர் _________________
அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. மீ.இராசேந்திரன்
9. சபதம் என்பதன் பொருள் யாது?
அ. சூளுரை ஆ. உண்மை இ. உலகம் ஈ. உறக்கம்
10. மோகித்து என்பதன் பொருள் ___________________
அ. உயிர் ஆ. விரும்பி இ. உலகம் ஈ. உறக்கம்
இணையத் தேர்வு
பணித்தாள் - PDF