10TH - KALVI TV -21-01-2022 - KALAKKANITHAM

      https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           21- 01- 2022           

வகுப்பு                    பத்தாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் -8- காலக்கணிதம்

காணொளி

இனிய இராகத்தில் மனப்பாடப்பாடல் வரிகள்


பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. பொன்னினும் விலைமிகு பொருளென்செல்வம்-என்று கண்ணதாசன் குறிப்பிடுவது

அ) செல்வம்                            ஆ) கவிதை                                          இ) பொருள்                           ஈ) அறம்

2. இயம்புவதென் தொழில்-பிரித்தெழுதுக

அ)இயம்பு+என்+தொழில்          ஆ)இயம்புவ+தென்+தொழில்                   இ)இயம்புவது+என்+ தொழில்  

ஈ) இயப்புவது + என் + தொழில்

3. கண்ணதாசனால் பண்டோர் எனக் குறிப்பிடப்பட்டோர்

அ)கம்பர்,பாரதியார்,பாரதிதாசன்           ஆ)வள்ளுவர்,இளங்கோ,கபிலர்                 இ)பாரதியார், அவ்வையார், சுரதா        ஈ)நாமக்கல் கவிஞர், கவிமணி, கம்பர் 

4. ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும் அவனும் யாருமே அறிந்தவை- இதில் கண்ணதாசன் அவன் என்று குறிப்பிடுவது

அ) உழைப்பாளி      ஆ) அரசன்                                            இ) இறைவன்                                         ஈ) வணிகன்

5. பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன் - இவ்வடியில் பதவி வாள் என்பது

அ)ஆயுதம்               ஆ) படைக்கலன்                                     இ) ஆட்சியதிகாரம்                                 ஈ)கூர்மையான கருவி 

6. இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது - இத்தொடரில்  இறந்து எனும் சொல்------- என்னும் பொருளில் வந்துள்ளது.

அ) சாதல்                ஆ)தளர்ந்து                                           இ) குறைந்து                                         ஈ) சிதைந்து

7.  கண்ணதாசனின் இயற்பெயர்

அ)சுப்பையா            ஆ) முத்தையா                                       இ) வேணுகோபாலன்                             ஈ) சுப்புரத்தினம்

8. கண்ணதாசன் பிறந்த ஊர்

அ)சிறுகூடல்பட்டி     ஆ) வடுகபட்டி                                       இ) புளியம்பட்டி                                      ஈ) சேடப்பட்டி

9. கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல் 

அ)ஆறு மனமே ஆறு  ஆ)அண்ணன் என்னடா                        இ)கலங்காதிரு மனமே                           ஈ)வீடுவரை உறவு

10. கண்ணதாசன் திரைப்படப் பாடல்களின் மூலம்  மக்களிடையே கொண்டு சேர்த்தது

அ) அரசியலை         ஆ) ஆன்மீகத்தை                                   இ) இன்பத்தை                                       ஈ) மெய்யியலை 

11. )சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் நூல்

அ)மாங்கனி            ஆ)ஆட்டனத்தி ஆதிமந்தி                        இ)சேரமான் காதலி                               ஈ)இயேசு காவியம் 

12. கண்ணதாசன் அட்சயப் பாத்திரம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?

அ)தத்துவம்             ஆ) கொள்கை                                       இ) ஞானம்                                            ஈ) பண்பாடு

13. கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாகக் குறிப்பிடுபவை

அ)தன் நூல்களை    ஆ) உரைகளை                                     இ) இதழ்களை                                       ஈ) வளமார் கவிகளை 

14. புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது

       இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது -இவ்வடிகளில் அமைந்த முரண்

அ)என்னுடல்,என் மனம் ஆ) புல்லரிக்காது,இறந்துவிடாது                      இ)புகழ்ந்தால்,இகழ்ந்தால்                ஈ)புகழ்ந்தால்,என் மனம் 

15. வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன் எனக்கூறியவர்

அ) பாரதியார்         ஆ) கண்ணதாசன்                                                இ) பாரதிதாசன்                     ஈ) வாணிதாசன் 


இணைய வழித் தேர்வு

 

பணித்தாள் - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post