10 TH - KALVITV - 31-01-2022 - TAMIL - THEMBAVANI

     https://tamilrk-seed.blogspot.com


காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           31- 01- 2022           

வகுப்பு                    பத்தாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       தேம்பாவணி

காணொளி

இனிய இராகத்தில் மனப்பாடப்பாடல்




பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1.தேம்பாவணியை இயற்றியவர் _____________

அ) ஜி.யு.போப்           ஆ) கெல்லட்      இ) வீரமாமுனிவர்         ஈ) ஜான்மர்பி 

 

2. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி__________

அ) வீரமாமுனிவர்   ஆ) ஜி.யு.போப்        இ) சீசர்               ஈ) அருளப்பன்

 

3) வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் அருளப்பனுக்கு இட்ட பெயர்_____________

அ) செழியன்            ஆ) இனியன்     இ) கருணையன்             ஈ) பொன்னன்

 

4) வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது கற்றுக் கொண்டார்?

அ) இரண்டு      ஆ) மூன்று                     இ) நான்கு               ஈ) ஐந்து

5 ) வீரமாமுனிவர் எதற்காக உருது கற்றுக் கொண்டார்?

அ) பன்மொழி புலமைக்காக    ஆ) கட்டுரை எழுத  இ) காப்பியம் படைக்க                ஈ)  திருச்சி மன்னரிடம் உரையாட

6 ) இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்________________

அ) துறவு                                     ஆ) தூய துறவி        இ) எழுத்தாளர்                       ஈ) கவிஞர்

7 ) இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச் சொல்__________________

அ) உருது                                ஆ) சமஸ்கிருதம்       இ) வடமொழி                      ஈ) பாரசீகம்

8 ) தேம்பாவணி எந்த நூற்றாண்டு படைக்கப்பட்டது?

அ) 17                                       ஆ) 16                     இ) 18                                    ஈ) 19    

9 ) திருச்சியை ஆண்ட மன்னர் __________________

அ) தாதாசாகிப்                        ஆ) அபு சலீம்            இ) சந்தா சாகிப்                    ஈ) நவாப் 

10 ) கான்சுடான்சு சோசப் பெசுகி என்ற இயற்பெயர் கோண்டவர்________________

அ) ஜி.யு.போப்           ஆ) கெல்லட்      இ) வீரமாமுனிவர்         ஈ) ஜான்மர்பி 

11 ) வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல்_______________________

அ) சதுரகராதி                        ஆ) பரமார்த்தக் குருகதைகள்                இ) தேம்பாவணி       ஈ) தொன்னூல் விளக்கம் 

12 ) தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _____________

அ) 3415                                 ஆ) 3515                              இ) 3615                    ஈ) 3715

13 ) தேம்பாவணி என்பது ஒரு _________________

அ) காவியம்         ஆ) பெருங்காப்பியம்                        இ) சிறு காப்பியம்                 ஈ) நாவல்

14 ) தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை ______________

அ) 63                       ஆ) 40                     இ) 36                    ஈ) 15    

15 ) தேம்பா + அணி = தேம்பாவணி எனப்பிரித்தால் பொருள் தருவது _________________

அ) தேன் போன்ற பாடல்கள்                     ஆ) வாடாத மாலை                 இ) வாடிய மாலை    ஈ) தேன் போன்ற கவிதை

இணைய வழித் தேர்வு

பணித்தாள் - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post