
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025 (வினாத்தாள்)
1. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________
2. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________
4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே __________
5. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ____
6. பலகை – என்பது
7. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்கள்
8. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.\nஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.\nஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.\nமேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டுக
9. “ கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க\nஉள்வாய் வார்த்தை உடம்பு தொடாது ” – பாடல் அடிகளில் வியங்கோள் வினைமுற்றுகளைத் தேர்க
10. சொல் வளத்தை உணர்த்த உதவும் பெயர்களில் நெல் வகை அல்லாத பெயரைத் தேர்க ___
11. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களில் பாவலரேறு சுட்டுவன கருத்துகளில் இல்லாத ஒன்றைத் தேர்க
12. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது – இத்தொடரில் உள்ள இளம்பெயர் வகைச் சொல்லைத் தேர்க____________
13. அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது – இவை அனைத்தும் யாம் அறிவோம். இக்கூற்றில் எதிர்மறை தொழிற்பெயராக மாற்றக் கூடிய சொற்களைத் தேர்க.
14. நாட்டுவளமும் சொல் வளமும் தொடர்புடையன எனக் கூறுபவர்
15. மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து – என்னும் பாடலை எழுதியவர்
16. 'தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை\nதேரும் சிலப்பதி காறமதை' – இவ்வடியில் பிழையாக உள்ள சொற்களின் சரியான சொற்களைத் தேர்க.
17. கூட்டப் பெயரைக் காண்க: புல்
18. சரியாக அமைந்த வினையாலணையும் பெயர் கொண்ட தொடரைக் காண்க
19. 'கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.' இத்தொடரில் வினைமுற்றுக்கான சரியான வினையாலணையும் பெயரைக் காண்க.
20. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான். இத்தொடரில் ‘வறுமை’ என்பதற்கு அதே பொருளுடையப் பொருத்தமான சொல்லைக் காண்க.
21. பொருந்தா ஒன்றைத் தேர்க\nஅ) உலகம் - 1) பூமி\nஆ) புகழ் - 2) புகழ்ச்சி\nஇ) துணைவி - 3) மனைவி\nஈ) பசு - 4) ஆ
22. மழை முகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர். தொடரில் முகில், மஞ்ஞை, களி சொற்களுக்கு அதே பொருளுடைய வேறு சொற்களைக் காண்க
23. 'தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே\nதென்னாடு விளங்குகிறத் திகழுந்தென் மொழியே' – இவ்வடிகளை இயற்றியவர்
24. 'தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே\nதென்னாடு விளங்குகிறத் திகழுந்தென் மொழியே' – இவ்வடிகளில் உள்ள இயைபுச் சொற்களைக் காண்க
25. 'ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே\nஉணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே' – இவ்வடிகளில் உள்ள சீர் எதுகைச் சொற்களைக் காண்க.
26. நாற்றிசையும் செல்லாத நாடில்லை – இத்தொடரில் உள்ள தமிழெண்ணையும், எண்ணுப்பெயரையும், காண்க
27. சரியாக பொருந்திய ஒன்றைத் தேர்க\nஅ) எண் சாண் – ௩ → மூன்று\nஆ) ஐந்து சால்பு – ௫ → ஐந்து\nஇ) நாற்றிசை – ௨ → இரண்டு\nஈ) ஆயிரம் அமரிடை – ௧ → ஒன்று
28. ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது _____________
29. அடவி – இச்சொல்லின் பொருள் _____________
30. பள்ளம் என்ற பொருளுடையச் சொல்லைக் காண்க____
31. பொருத்துக.\nஅ) புறவு - 1) பள்ளம்\nஆ) பழனம் - 2) மேடு\nஇ) சுவல் - 3) வயல்\nஈ) அவல் - 4) காடு\nசரி வரிசையைத் தேர்க
32. பொருத்துக.\nஅ) VOWEL - 1) ஒரு மொழி\nஆ) CONSONANT - 2) ஒப்பெழுத்து\nஇ) HOMOGRAPH - 3) மெய்யெழுத்து\nஈ) MONOLINGUAL - 4) உயிரெழுத்து\nசரி வரிசையைத் தேர்க
33. 'நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்' என்ற நூலை எழுதியவர்__________
34. 'தவறின்றித் தமிழ் எழுதுவோம்' என்ற நூலின் ஆசிரியர்______________
35. பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர்___________
இந்தப் பக்கம் வினாத்தாள் மாதிரியானது — மாணவர்கள் பார்வையிடத் திருத்தமற்ற பதில்களை தேர்ந்தெடுக்கலாம்.
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025
Question: 1 / 35
10s
குறிப்பு: "Pause" மூலம் timer தற்காலிகமாக நிறுத்தலாம்; பதில் தேர்வு செய்தாலே feedback வரும். இறுதியில் மதிப்பெண் மற்றும் பதில்மேல்விளக்கம் கிடைக்கும்.