10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-7- MOZHIYAI ALVOM

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 7 

மொழியை ஆள்வோம்

இளந்தமிழ் வழிகாட்டி 

---------------------------------------------------------------------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்விஆல்பிரட் ஐன்ஸ்டீன்

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில்

4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளதுவின்ஸடன் சர்ச்சில்.


மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக

1. மனக்கோட்டை         -  தேர்தலில் வேட்பாளர் ஆனவுடன் முதலமைச்சர் ஆகிவிடலாம்  


                                             என மனக்கோட்டைக் கட்டாதே ( கற்பனை )


2. கண்ணும் கருத்தும்     தமிழ்ச்செல்வன் கண்ணும் கருத்துமாய் படித்து போட்டித்


                                           தேர்வில் வென்றான். ( கவனம் )


3. அள்ளி இறைத்தல்      ஆடம்பரத்துக்கு  அள்ளி இறைத்து செலவு செய்தால்


                                            அத்தியாவசியத்திற்கு துன்பப்பட வேண்டும் ( மிகை செலவு )


4. ஆறப்போடுதல்          கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும் ( தள்ளிப்போடுதல் )


உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக

தாமரை இலை நீர்போல

என் நண்பன் தாமரை இலை நீர் போல பட்டும் படாமலும்

 பழகுவான்.

மழைமுகம் காணாப்

 பயிர்போல               

 

தாயை இழந்த கருணையன் மழைமுகம் காணாப் பயிர்

 போல வாடினான்.

கண்ணினைக் காக்கும்

 இமைபோல

தாய் தன் மகளை கண்ணினைக் காக்கும் இமைபோல

பாதுகாத்து வந்தாள்.

சிலை மேல் எழுத்து போல

இளமையில் கற்ற கல்வி சிலைமேல் எழுத்துப் போல

நிலையானது.

 

பொருத்தமான நிறுத்தற் குறியிடுக

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

விடை

சேர்ரகளின் பட்டப் பெயர்களில்கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன்எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்மலையமான்எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.


பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக

தம்பீ? எங்க நிக்கிறே?”

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்

அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப

நாளாச்சு !”

அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு

வர்றேன்.”

ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”

இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.! ஊருக்கு எங்கூட வருவாம்

பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.

விடை

தம்பி? எங்கே நிற்கிறாய்?

நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணே! எதிர்ப்புறம் உள்ள ஒரு தேநீர் கடையில்

இருக்கிறேன்..

அங்கே தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டு இரு. நான் விரைவாக

வந்துவிடுவேன்”

அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா ! அவனைப்

பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது”

அவன் பாட்டியுடன் வெளியூர் போயிருக்கிறான்.உங்கள் ஊருக்கு அவனைக்

கூட்டிக்கொண்டு வருகிறேன்”

சிறு வயதில் பார்த்தது அண்ணா! அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்”

இப்போது உயரமாக வளார்ந்துவிட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது! எங்களுடன்

வருவான் பார்!

சரி, கைப்பேசியை வை. நான் கிளம்பிவிட்டேன்”.

 

குறுக்கெழுத்துப் புதிர்

1 கா

லை

 

2 தே

மா

 

ள்

 

 

ணி

ர்

 

தி

 

டு

 

3கு

கா

ரை

த்

நே

4 மூ

ட்

கு

 

று

பா

கீ

ர்

ங்

5

க்

ழ்

ந்

ம்

ம்

ங்

கீ

ப்

கி

7 தி

ரு

மி

தொ

6 தே

 

8செ

க்

பா

ல்

ங்

9 தி

கை

 

10சி

 

ய்

 

11

லி

த்

தொ

12 கை

ங்

 

13மெ

 

ள்

 

ளை

த்

க்

14

ர்

யா

வை

15

ள்

னை

கி

ம்

ரு

16

 

 

17 பி

18வி

ளை

இடமிருந்து வலம்

1. சிறுபொழுதின் வகைகளுள் ஒன்று(2) – காலை

2. நேர் – நேர் – வாய்பாடு (2) – தேமா

11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று (5) – கலித்தொகை

14. மக்களே போல்வர்(4)- கயவர்.

மேலிருந்து கீழ்

1. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது(5) – கார்காலம்

2. மொழிஞாயிறு (9) – தேவநேயப்பாவனர்

3. நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல் (5)- குறுந்தொகை

4. கழை என்பதன் பொருள்(4) – மூங்கில்

7. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் (4) – திங்கள்

10. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு (4) – சிங்கம்

12. கைக்கிளை என்பது புறத்திணைகளுள் ஒன்று (4)

வலமிருந்து இடம்

15. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – ஆசிரியர் (4) – ஒளவையார்

16. மதிமுகம் உவமை எனில் முகமதி (5) – உருவகம்

கீழிருந்து மேல்

5. விடையின் வகைகள் (3) – எட்டு

6. வீரமாமுனிவர் இயற்றிய நூல் (5) – தேம்பாவணி

8. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் (4) – செங்கீரை

9. முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று (6) – திருக்குறள்

13. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது (7) – மெய்க்கீர்த்தி

17. 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று (7) – பிள்ளைத்தமிழ்

18. செய்தவம் – இலக்கணக் குறிப்பு (5) – வினைத்தொகை


கடிதம் எழுதுக.

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில்


நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய


அலுவலருக்கு கடிதம் எழுதுக.


அனுப்புநர்

          அ அ அ அ அ,


          100,பாரதி தெரு,


          சக்தி நகர்,  சேலம் – 636006.


பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,


          மின்வாரிய அலுவலகம்,


,         சேலம் – 636001.


ஐயா,


பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு


          வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள்

 பழுதடைந்துள்ளன. இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள்

 ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த்

 தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                             நன்றி.

இடம் : சேலம்                                                                                                                   இப்படிக்கு,

நாள் : 04-03-2025                                                                                        தங்கள் உண்மையுள்ள,                                                                                                           

                                                                                                                                        அ அ அ அ அ.


                    


உறை மேல் முகவரி:

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,               சேலம் – 636001.

கவிதையைப் படித்து, அதன் உரையாடல் வடிவத்தைத் தொடர்ந்து எழுதுக.

மகள் சொல்லுகிறாள்

அம்மா என் காதுக்கொரு தோடுநீ

   அவசியம் வாங்கி வந்து போடு!

சும்மா இருக்க முடியாதுநான்

     சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!

தாய் சொல்லுகிறாள்

காதுக்குக் கம்மல் அழகன்றுநான்

    கழறுவதைக் கவனி நன்று

நீதர் மொழியை வெகுபணிவாய்நிதம்

          நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!

மகள் மேலும் சொல்லுகிறாள்

கைக்கிரண்டு வளையல் வீதம்நீ

          கடன்பட்டுப் போட்டிடினும் போதும் !

பக்கியென் றென்னை யெல்லோரும்என்

          பாடசாலையிற் சொல்ல நேரும் !

தாய் சொல்லும் சமாதானம்

வாரா விருந்து வந்த களையில்அவர்

          மகிழ உபசரித்தல் வளையல்!

ஆராவமுதே மதி துலங்குபெண்ணே

அவர்சொல்வ துன்கைகட்கு விலங்கு!

பின்னும் மகள்

ஆபர ணங்கள் இல்லை யானால்என்னை யார் மதிப்பார் தெருவில் போனால் கோபமோ அம்மா இதைச் சொன்னால்என்  குறைதவிர்க்க முடியும்

அதற்குத் தாய்:

கற்பது பெண்களுக்கா பரணம்கெம்புக்

          கல்வைத்த, நகைதீராத ரணம்!

கற்ற பெண்களை இந்த நாடுதன்

கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு.






மகள் : என் காதிற்கு ஒரு தோடு வேண்டும் அம்மா. இதை நீங்கள் வாங்கி வந்து எனக்கு


போட்டுவிட வேண்டும். நான் காதிற்கு தோடு போடாமல் இருக்க மாட்டேன்


தாய் : காதுக்குக் கம்மல் அழகல்ல. நான் கூறுவதைக் கவனித்துப் பணிவானச் சொற்களையும்


 நல்ல கருத்துகளையும் உன் காதுக்கு அணியாக அணிந்து கொள்.


மகள் :  கைக்கிரண்டு வளையலாவது கடன் பட்டு போட்டு விடு.


           பக்கி வளையல் இல்லையா?   என பள்ளியில் ஏளனம் செய்ய நேரிடும். 

தாய் :   விருந்தினரை வரவேற்பது சிறந்த வளையல். அவர்கள் கூறுவது கைவிலங்கு.


மகள்: ஆபரணம் இல்லையெனில் தெருவில் போனால் யார் மதிப்பார்கள் என்னை? இதைச்


 சொன்னால் கோபம் வருகிறது உனக்கு. என் குறையைக் குறைக்கமாட்டாய்.


தாய்:    கற்பது தான் பெண்களுக்கு ஆபரணம். நகைகள் தீராத ரணம். கற்ற பெண்களை இந்த


 நாடு அன்போடு கண்ணில் ஒற்றிக் கொள்ளும்.


நயம் பாராட்டுக.

        கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

                குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

        ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

                உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

        மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

                மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

        ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

                ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.            - வள்ளலார்.

திரண்ட கருத்து:

        கோடையில் இளைப்பாற உதவும் மரமாகவும்,அதன் நிழலாகவும், கனியாகவும்

 இருப்பவனே! ஓடையில் ஓடும் சுவைதரும் நீராகவும், மலர்ந்த மணமலராகவும், மெல்லிய

 பூங்காற்றாகவும் திகழ்பவனே! விளையாட்டுப் பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவா! பலர்

 கூடும் பொது இடத்தில் நடனம் ஆடுகின்ற இறைவா! என் பாமாலையை ஏற்று அருள் புரிவாயாக

 என வள்ளலார் இறைவனை வணங்குகிறார்.


மையக் கருத்து :

         எல்லாமுமாகத் திகழும் இறைவனை வாழ்த்தி வணங்குவதே இப்பாடலின் மையக்

          கருத்து.


சொல்  நயம் :

        குளிர்தருவே,தருநிழலே,சுகந்த மணமலரே ,மெல்லிய பூங்காற்றே ஆகிய அழகான

சொற்கள் பாடலுக்கு நயம் கூட்டுகின்றன.

 பொருள் நயம் :

        சுகந்த மணமலரே. மென் காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே, ஆடையிலே

 எனை மணந்த மணவாளாஆகிய சொற்கள் ஆழமான பொருளை உடையன.


சந்த நயம் :


        இப்பாடல் பாடுவதற்கு ஏற்ற சந்த நயத்துடன் அமையப் பெற்றுள்ளது.


மோனை நயம் :

        முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

          கோடை                 -        கொள்ளும் வகை

          மேடையிலே                 மென்காற்றிலே


எதுகை நயம் :

        முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

          கோடையிலே        -        டையிலே

          ந்த                  -        சுந்த


முரண் நயம் :

        முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.

          கோடையிலே         X       குளிர்தருவே


இயையு நயம் :

        பாடலில் இறுதி எழுத்தோ. அசையோ, சீரோ, இயைந்து வருவது இயைபு நயம்.

        கனியே                 -        மலரே

காற்றே                  -        பயனே


அணிநயம் :

        இப்பாடலில் இறைவனை மரமாகவும், நிழலாகவும்,கனியாகவும், தண்ணீராகவும்,

மணமலராகவும், பூங்காற்றாகவும்,சுகமாகவும் உருவகம் செய்து பாடியுள்ளமையால்,

இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.


பா வகை :

        எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பா வகையைச் சார்ந்துள்ளது.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post