10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-7-MOZHIYODU VILAYADU

   

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 7 

மொழியோடு விளையாடு

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

மொழியோடு விளையாடு

கண்டுபிடித்து எழுதுக 
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள்
இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.....


ஒன்று

கொன்றன்ன இன்னா செய்யினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்

இரண்டு

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்காது எனின்

மூன்று

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய்

நான்கு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்காறு இயன்றது அறம்

ஐந்து

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

ஆறு

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

ஏழு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்

எட்டு

கோயில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பத்து

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்தத் தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்


சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக


கானடை

கான் அடைகாட்டைச் சேர்

கான் நடைகாட்டுக்கு நடத்தல்

கால் நடைகாலால் நடத்தல்

வருந்தாமரை

வரும் + தாமரைவருகின்ற தாமரை மலர்

வரும் + தா + மரைதாவுகின்ற மான் வருகிறது

வருந்தா + மரைதுன்புறாத மான்

பிண்ணாக்கு

பிள் + நாக்குபிளவுப்பட்ட நாக்கு

பிண்ணாக்குகடலை,எள் அரைக்கும் போது கிடைப்பது

பலகையொலி

பல + கையொலிபல கைகளால் சேர்ந்த ஒலி

பலகை + ஒலிபலகையால் ஏற்படும் ஒலி

 ட்ட

 

ஒளவையாரின் ஆத்திசூடி, பாரதியாரின் ஆத்திசூடி ஆகிய இரண்டின் பத்துத் 

தொடர்களை   ஒப்பிட்டு அதன் கருத்துகள் குறித்து எழுதுக.

ஒளவையார் ஆத்திசூடி

பாரதியார் ஆத்திசூடி

1. அறஞ் செய விரும்பு

  தருமம் செய்ய நீ விரும்ப வேண்டும்

அச்சம் தவிர் பயத்தினை போக்க வேண்டும்

2. ஆறுவது சினம்

கோபத்தைத் தவிர்க்க

ஆண்மை தவறேல் மனவலிமை இழக்காதே

3. இயல்வது கரவேல்

யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

இளைத்தல் இகழ்ச்சி பின் வாங்குதல் இகழ்வதற்கு உரியது.

4. ஈவது விலக்கேல்

ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

ஈகை திறன் கொடுத்தலை மனதில் கொள்

5. உடையது விளம்பேல்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.

உடலினை உறுதிசெய் உடம்பை திடமாக்கு

6. ஊக்கமது கைவிடேல்

எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

ஊண்மிக விரும்பு

உணவு உண்ண விரும்பு

7. எண் எழுத்து இகழேல்

எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

எண்ணுவ துயர்வு

உயர்வாக எண்ண வேண்டும்

8. ஏற்பது இகழ்ச்சி

இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

ஏறுபோல் நட நிமிர்ந்து செல்

9. ஐயம் இட்டு உண்

யாசிப்பவர்களுக்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.

ஐம்பொறி ஆட்சிகொள் ஐம்புலனையும் அடக்கி ஆள்

10. ஒப்புரவு ஒழுகு

உலக நடைமுறைகளை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

ஒற்றுமை வலிமையாம் ஒற்றுமையே பலம்


அகராதியில் காண்க.


ஆசுகவி

கொடுத்தப் பொருளைப் பற்றி உடனே பாடும் பாட்டு

மதுர கவி

சொற்சுவை,பொருட்சுவை நிரம்பிய பாட்டு

சித்திர கவி

சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு

வித்தாரகவி

விரித்துப் பாடும் பாட்டு

படிப்போம் ; பயன்படுத்துவோம்!


Happiness

மகிழ்ச்சி

Sceptor

செங்கோல்

Charity

ஈகை

Gratuity

பணிக்கொடை

Truth

வாய்மை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

 என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

திறன்பேசி என் ஆளுமையைப் பற்றி எழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

அடிமையாகாதே என்று

 

 

நிற்க அதற்குத் தக.


நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் 

நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ,உடன் பிறந்தவருடனோ எதிர் 

பாராமல் சச்சரவு ஏற்படுகிறது…. இந்த சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களை 

பேசுகிறோம்; கேட்கிறோம்;கை கலப்பில் ஈடுபடுகிறோம்; இது காறும் கற்ற அறங்கள் நமக்கு கைகொடுக்க வேண்டாமா? 

மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும்  
நன்மைகளையும் பட்டியலிடுக.

அறங்கள்

நன்மைகள்

                1. வீண் பழி சொற்கள் பேசாதிருத்தல்                        

                1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

                2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

                2. மன அமைதி பெறலாம்.

                3. உண்மை பேசுதல்

                3. நம் வாழ்வை உயர்த்தும்.

                4. உதவி செய்தல்

                4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

                5. அன்பாய் இருத்தல்

                5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 

அறிவை விரிவு செய்

 

அறமும் அரசியலும்

மு.வரதராசனார்

தமிழரின் தத்துவ மரபு

அருணன்

எண்ணங்கள்

எம்.எஸ்.உதய மூர்த்தி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post