பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 7
நெடு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------
நெடுவினா
1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம்
பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
குறிப்புச்சட்டம் |
முன்னுரை |
கருணையன் துயரம் |
தாயை இழந்த வலி |
கருணையன் அறியாதவை |
முடிவுரை |
முன்னுரை :
தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து
தனித்து இருக்கும் துயரம் பெரிது. வீரமாமுனிவர், கருணையன் தன் தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற
உவமைகளாலும், உருவக
மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு காண்போம்.
கருணையன் துயரம்
v பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.
v கருணையன் அன்னை உடல் மீது மலரையும், கண்ணீரையும் பொழிந்தான்
v கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர் போல உள்ளது.
தாயை இழந்த வலி
v அம்பினால் உண்டான வலி போல் உள்ளது.
v கருணையனைத் தவிக்க விட்டுச் சென்றார்.
கருணையன் அறியாதவை
v பசிக்கான வழி தெரியாது.
v
உயிர் பிழைக்கும்
வழி அறியேன்
v உடலின் தன்மை அறியேன்
v உணவைத் தேடும் வழி அறியேன்
v காட்டில் செல்லும் வழி அறியேன்
v இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.
முடிவுரை
துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின்
முகவரிகள். சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, வீரமாமுனிவர், கருணையன் தன்
தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு
காண்டோம்.
2. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர்
செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
குறிப்புச்சட்டம் |
முன்னுரை |
திருமந்திரம் |
திருகோட்டியூர்
திருக்கோவில் |
திருமந்திரம்
பகிர்தல் |
பூரணரிடம்
விளக்கம் |
முடிவுரை |
முன்னுரை :
ஞானிகள் தலைமுறைக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள். அந்த
ஞானிகளும் தமக்கு கிடைத்ததை மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களும் இன்பமுற வாழ
நினைப்பவர்கள் ஞானிகள். அப்படிப்பட்ட ஒருவரான இராமானுசரைப் பற்றி இக்கட்டுரையில்
நாம் காணலாம்.
திருமந்திரம்
v இராமானுசர் தன் தண்டும் கொடியுமாக உள்ள கூரேசர்,
முதலியாண்டாரை அழைத்துக் கொண்டு பூரணரிடமிருந்து
திருமந்திரத்தை பெறுகிறார்.
v திருமந்திரத்தை மூவர் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது.
மீறினால் உங்களுக்கு நரகம் கிட்டும் என்ற கட்டளையுடன் பூரணர்
கூறுகிறார்.
திருகோட்டியூர் திருக்கோவில் :
v இராமானுசர் மக்களுக்கு பிறவிப்பிணி நீக்கும் அருமருந்தான
திருமந்திரத்தை கூறுவதற்கு ஆயத்தமானார்.
v கோவில் மதில் சுவரின் மேல்
நின்றுக் கொண்டார்.
திருமந்திரம்
பகிர்தல் :
v தமக்கு கிடைத்த திருமந்திரமானது தங்களின் பிறவிப்பிணியை
போக்கக் கூடியது என மக்களுக்கு கூறுகிறார்.
v இராமானுசர் தமக்கு கிடைத்த திருமந்திரத்தை அனைவருக்கும்
கூறி அவர்களின் பிறவிப்பிணியைப் போக்கினார்.
v எவரும் செய்ய இயலாத காரியத்தை செய்து மனித
இன்னுயிர்களை காத்தார்.
பூரணரிடம்
விளக்கம் :
v இராமானுசர், பூரணரிடம், தாங்கள் கூறிய திருமந்திரம் எனக்கு
மட்டுமே பயன் கிட்டும்.
v அருமந்திரத்தை அனைவருக்கும் கூறினால், உழன்று பேதை வாழ்வு
வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின்
பிறவிப்பிணியை நீங்கி பேறு பெறுவார்கள்.
v இதனால் நான் மட்டுமே தண்டனை கிடைக்கப் பெற்று நரகத்தைச்
சேர்வேன்.
v என் மக்கள் அனைவருக்கும் நலம் கிட்டும் எல்லோரும் நலமுடன்
வாழ்வார்கள்.
முடிவுரை :
இராமானுசர் சுயநலம் பாராது. எல்லோரும் இன்புறிருக்க அருமந்திரத்தை
மக்களுக்கு அளித்த குணம் போற்றத்தக்கது. தன்னிடம் இருப்பதை
மற்றவர்களுக்கு கொடுத்து அதில் இன்பம் காண்பதே இன்பமாகும். இவரைப்
போன்று உலக மக்கள் அனைவரும் செயல்பட்டால், உலகமே இன்பமாகும்.
3.பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம்
ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி
வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
சேலம்,
03-03-2025.
அன்புள்ள மாமாவுக்கு,
நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள்
பள்ளித் திடலில் பணப் பை ஒன்று கிடந்தது. உடனடியாக நான் தலைமை
ஆசிரியரிடம் ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில்
தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி
ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது. வீட்டில் அனைவரிடமும்
இதை கூறவும்.
நன்றி,வணக்கம்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அ அ அ அ அ அ அ .
பெறுதல்
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி தெரு,
நாமக்கல்.
4. குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல – உப்பைப் போல
இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப்
பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை
மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன்
மகிழ்ச்சி.
இடம் : பள்ளி, வகுப்பறை
பங்கேற்பாளர்கள் :
தமிழாசிரியர், வளர்தர்ஷினி, ரித்திஷ்கா, கனிஷ்கா,
வளர்தர்ஷினி : கயல், தாரணி நமது தமிழ் ஆசிரியர் அன்றைய வகுப்பில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூற வந்தார். அதற்குள் மணிஅடித்துவிட்டது. இன்று நாம் அவரிடம் முதலில் கேட்டிடுவோம்.
கயல்
: ஆம்,
வந்தவுடன் கேட்கலாம்.
மாணவிகள் : வணக்கம்.
ஐயா,
தமிழாசிரியர் : வணக்கம் மாணவர்களே, எல்லோரும் உணவு
உண்டீர்களா?
மாணவர்கள் : உண்டோம் ஐயா.
வளர்தர்ஷினி : ஐயா நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க
வேண்டும் என்பதனை கூற வந்தீர்கள். அதற்குள் மணி அடித்துவிட்டது.
இப்போது கூறுங்கள்.
ரித்திஷ்கா, கனிஷ்கா:
ஆமாம். ஐயா.
தமிழாசிரியர் : ஆம்.
மூன்று உதாரணங்களுடன் கூறுகிறேன். கேளுங்கள்
மாணவிகள்
: கூறுங்கள் ஐயா.
தமிழாசிரியர் : 1. மாணவர்கள் கொக்கைப் போல இருக்க வேண்டும்.
காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொறுமை அவசியம்.
வளர்தர்ஷினி
: ஐயா,
இனிமேல் நாங்கள் அவசரப்படமாட்டோம்.
தமிழாசிரியர் : அடுத்து, இரண்டாவது கோழியைப் போல குப்பையைக்
கிளறினாலும். தனக்கான உணவினை மட்டும் உட்கொள்வது போல
சமூகத்தில் கெட்டது இருந்தாலும், நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.
ரித்திஷ்கா : ஆமாம் ஐயா, நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக்
கொண்டு எங்கள் பண்பினை வளர்த்துக் கொள்வோம்.
தமிழாசிரியர் : மூன்றாவதாக உப்பைப் போல உணவில் உப்பின்
சுவையை நாக்குஉணர்வதை போல , ஒவ்வொருவரின்
வெளித்தோற்றத்தைக் காணாது அவரின் குணநலன்களை ஆராய்ந்து
உணர்ந்து பழக வேண்டும்.
கனிஷ்கா : சரி ஐயா, இனிமேல் குணநலன்களை மட்டுமே
பார்க்கிறோம்.
மாணவிகள் : ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள்
இவ்வாறே நடந்து கொள்வோம். நன்றி ஐயா.