10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-7-3 MARK

   

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 7

சிறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

சிறு வினா.


1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்

தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.


v  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை

 விளம்பரப்படுத்தக்கூடாது.

v  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம்

 காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல்

 தலைவர்களுக்குப் பொருந்தும்.

v  உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வது போல

 மனிதர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும்.


2. வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.


v வாய்மை சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.


v வாய்மை பேசும் நா உண்மையான நா


§  பொய்யாச் செந்நா


§  பொய்படுபறியா வயங்கு செந்நா


v  இன்பத்தின் கதவைத் திறப்பதும், துன்பத்தின் கதவைத் திறப்பதும்

 நாக்கு தான்.


3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?


v  உயிர் பிழைக்கும் வழி அறியேன்


v  உடலின் தன்மை   அறியேன்


v  உணவைத் தேடும் வழி அறியேன்


v  காட்டில் செல்லும் வழி அறியேன்


v  தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிக்கிறேன்.


v  தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டும் அறிவேன்.


4. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.


v  அகவல் ஓசை பெற்று வரும்.


v  ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்.


v  ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.


v  வெண்டளை,கலித்தளை விரவி வரும்.


v  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்.


v  ஏகாரத்தில் முடிவது சிறப்பு.


5. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற

தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான

 உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

 ( குறிப்புசுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள்

 இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே

 சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )


v  சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள்


 இயற்றப்பட்டிருந்தாலும் அதைப் பின்பற்றுதல் வேண்டும்.


v  பொது போக்குவரத்துப் பயன்பாடு.


v  மரம் வளர்த்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.


ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய மாற்றம்

 வேண்டும்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post