10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-7-2 MARK

   

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 7  

குறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------

குறுவினா


1. குறிப்பு வரைக:- அவையம்


v  அறம் கூறும் மன்றங்கள்


v  துலாக்கோல் போல் நடுநிலையானது


v  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.


2. காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை

 உணர்த்தும் கருத்து யாது?


தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.


3. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.


v  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள்


 கொண்டது குறள் வெண்பா.


v  முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

        .கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

                      மெய்ப்பொருள் காண்ப தறிவு.


4. சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?


v  நீர் வளம் பெருக்குதல்


v  நில வளம் கண்டு உணவுப் பெருக்கம் காணுதல்


v  உணவை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்


5. பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் 

குறிப்பிடுகிறார்?


v  அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post