10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-6- BIG QUESTION


   

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 6

நெடு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

----------------------------------------------------------------------------------------------------------------------------

நெடுவினா


1. நாட்டு விழாக்கள்விடுதலைப் போராட்ட வரலாறுநாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு 


குறிப்புகளைக் கொண்டு ஒரு  பக்கஅளவில்மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்என்ற


தலைப்பில் மேடை உரை எழுதுக.

 

குறிப்புச் சட்டகம்

                முன்னுரை

            நாட்டு விழாக்கள்

            விடுதலைப் போராட்ட வரலாறு

            நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

                முடிவுரை


முன்னுரை:

        நாட்டு விழாக்கள்,  விடுதலைப் போராட்ட வரலாறு,  நாட்டின் 

        முன்னேற்றத்தில் மாணவர்பங்கு , குறிப்புகளைக் கொண்டுமாணவப் 

        பருவமும் நாட்டுப் பற்றும்என்ற தலைப்பிலான  மேடை உரை பற்றி 

        இக் கட்டுரையில் காணலாம்.


நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு 

        தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி 

        நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.


விடுதலைப் போராட்ட வரலாறு:

         வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற 

        போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.


நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:


   மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர்

 இயக்கம்இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில்

 இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல்

 பட வேண்டும்.


முடிவுரை:


        நாட்டு விழாக்கள்,  விடுதலைப் போராட்ட வரலாறு,  நாட்டின் 

    முன்னேற்றத்தில் மாணவர்பங்கு , குறிப்புகளைக் கொண்டுமாணவப்

    பருவமும் நாட்டுப் பற்றும்என்ற தலைப்பிலான  மேடை உரை பற்றி இக்

    கட்டுரையில் கண்டோம்.


2. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக 

வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:-


குறிப்புச்சட்டம்

முன்னுரை

மருவூர்ப்பாக்க வணிகவீதி

இக்கால வணிக வளாகங்கள்

முடிவுரை

முன்னுரை :-

        சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக

       வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு காண்போம்.

மருவூர்ப்பாக்க வணிக வீதி :-

v  தானியக் கடைத் தெருக்கள்


v  நேரடி வணிகம்


v  இலாப நோக்கமற்றது


v  கலப்படம் இல்லாதது


v  தரம் உண்டு.விலை குறைவு


v  தனித்தனியே வணிக வீதிகள்


v  பொருட்களை ஒவ்வொரு தெருவுக்கும் சென்று வாங்க


 வேண்டும்.


v  நேர்மையுடன் வணிகம்


v  பண்டங்கள் கொடுத்தும் பொருட்கள் வாங்கப்பட்டது.


v  தேவையான பொருட்கள் மட்டும் வாங்கப்பட்டன.


இக்கால வணிக வளாகங்கள்


v  தனித்தனி அங்காடிகள்


v  இடைத் தரகர்கள் அதிகம்


v  இலாபம் மட்டுமே முக்கியம்


v  கலப்படம் கலந்துள்ளது


v  தரம் குறைவு,விலை அதிகம்


v  அனைத்து வணிகங்களும் ஒரே இடத்தில் உள்ளன.


v  தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.


v  நேர்மையை கண்காணிக்க சி.சி.டி.விக்கள் பொருத்தப்பட்டுள்ளது.


v  பணம் கொடுத்து பொருட்கள் வாங்க வேண்டும்.


v  தேவையற்ற பொருட்களும் வாங்கும் சூழல் உள்ளது.


முடிவுரை :

        சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக

      வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு கண்டோம்.


3. எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன்,


கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு


ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.


குறிப்புச்சட்டம்

முன்னுரை

எம்.எஸ்.சுப்புலட்சுமி

பால சரஸ்வதி

ராஜம் கிருஷ்ணன்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

சின்னப்பிள்ளை

முடிவுரை

 


முன்னுரை :


        சமூகம் உயர்வடைய தமது பங்களிப்பைக் கொடுத்து சாதனைப்


 பெண்மணிகளாக திகழும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம்


 கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோரின்


 சமூகப் பணிகள் பற்றிக் காண்போம்.


எம்.எஸ்.சுப்புலட்சுமி :


v  ஐ.நா அவையில் செவ்வியல் இசையைப் பாடியவர்.


v  இசைப்பேரரசி என்று நேரு பெருமகனரால் அழைக்கப்பட்டவர்.


v  ‘ இரகுபதி இராகவ இராஜாராம் ‘ காந்தியடிகளை சந்தித்த போது பாடினார்.


v  1954 இல் ஹெலன் கெல்லரால் பாராட்டப்பட்டவர்


v  1963 -இங்கிலாந்திலும், 1966 இல் -ஐ.நா அவையிலும் பாடினார்


v  1974 – இல் மகசேசே விருது


பால சரஸ்வதி :


v  ஐரோப்பா, அமெரிக்கா முதலிய வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்தியவர்.


v  ‘ கிழக்கு மேற்கு சந்திப்பு ‘ நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு நடனம் ஆடியவர்.


v  பரத நாட்டியக் கலையை உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தார்.


இராஜம் கிருஷ்ணன் :


v  கற்பனையாக எழுதாமல் களத்திற்கு சென்று மக்களிடம்


 செய்திகளைத் திரட்டி எழுதுபவர்.


v  கரிப்பு மணிகள் “ – தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின்


 உவர்ப்பு வாழ்க்கையை எழுதினார்.


v  குறிஞ்சித் தேன்” – நீலகரி, படுகர் இன மக்களின் வாழ்வியல்


 மாற்றங்களைக் குறித்து எழுதினார்.


v  அலைவாய் கரையில் “ – கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்.



v  கூட்டுக் குஞ்சுகள் “ – குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி எழுதினார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் :


v  மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்.


v  காந்தியடிகளுடனும், வினோபா பாவேயுடன் பணியாற்றியவர்.


v  இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்.


v  உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கி வேளாணமை


 இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம்


வர ஏற்பாடு செய்தவர்.


சின்னப்பிள்ளை :


v  பெண்கள் குழுவை ஆரம்பித்தவர்.


v  பெண்கள் குழு மூலம் நடவு, அறுவடை, களையெடுப்பு போன்ற


 வேலைகளைச் செய்து, வருகிற பணத்தை சரிசமமாக பிரித்துக்


 கொடுத்தவர்.


v  வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேர்த்து வேலையைக்


 கொடுத்து, அவர்கள் குடும்பத்துக்கு உதவியாக இருந்தவர்.


v  சுனாமி பாதிப்பு வந்த போது ஊரெல்லாம் சென்று மீட்புப்


 பணிகளை செய்தவர்.


v  மாண்புமிகு முதன்மை அமைச்சரால் பெண் ஆற்றல் விருது


 பெற்றவர்.

முடிவுரை :

        சமூகம் உயர்வடைய தமது பங்களிப்பைக் கொடுத்து சாதனைப்

பெண்மணிகளாக திகழும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம்

கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோரின்

சமூகப் பணிகள் பற்றிக் கண்டோம்.

4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.


மகளிர் நாள் விழா


இடம்பள்ளிக் கலையரங்கம்                                                     நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்  தலைமையாசிரியரின்

 வரவேற்பு  இதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின்

 வாழ்த்துரைமாணவத் தலைவரின் நன்றியுரை.


மகளிர் நாள் விழா - அறிக்கை

          எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.

மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:

          கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் 

மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா 

தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு:

        தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் 

வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய 

வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை:

        இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் 

உந்து சக்தியாக அமைந்தது.

v  மகளிரின் சிறப்புகள் 

v  மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள் 

v  சுய உதவிக்குழுக்களின் பங்கு

v  மகளிர் கல்வி    போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன.  

ஆசிரியர்களின் வாழ்த்துரை: 

        ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் 

பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என 

வாழ்த்துரை வழங்கினார். 

மாணவத் தலைவரின் நன்றியுரை: 

        மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும், தலைமை  ஆசிரியருக்கும், 

ஆசிரியர்களுக்கும், மாணவர்கள் மற்றும் அவர் தம்   பெற்றோருக்கும் நன்றி கூறினார். 

மகளிர் நாளில் உறுதி மொழி  எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post