10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-5-THIRUKKURAL-3 MARK

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 5

திருக்குறள்

சிறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

 சிறு வினா  


1.  வள்ளுவம், சிறந்த அமைச்சருக்கு கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் 

வழி விளக்குக.

v  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும்

முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக

அமைகிறது.

v  மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் 

கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும். 

v  இயற்கையான நுண்ணறிவும் ,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது 

v  ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் 

நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

 

2. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

    மேவன செய்தொழுக லான் – இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை 

    விளக்குக.

        அணி :

                செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக

                    வருவது வஞ்சப் புகழ்ச்சி அணி.

          எ,கா :

                   தேவர் அனையர் கயவர் அவரும்தாம்


                   மேவன செய்தொழுக லான்


          அணிப்பொருத்தம் :

                தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்வது போல, கயவர்களும் தாம்

 விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர்.இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப்

 புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post