10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-5-THIRUKKURAL-ADDITIONAL QUESTIONS

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 5

திருக்குறள்

கூடுதல்   வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________



கூடுதல் திருக்குறள் அணி வினாக்கள்


1. சொல் பின்வருநிலை அணி ( குறள் எண் – 5 )

        

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல் 


பின்வருநிலை அணி ஆகும்.


அணிப் பொருத்தம்

        

‘ பொருள் ‘ என்னும் சொல் வேறு பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் சொல் பின்வருநிலை 


அணி எனப்படும்.


2. உவமையணி ( குறள் எண் – 8, 10, 20 )


Ø  ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது 


உவமை அணி.


Ø  உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம் பெறும்.


Ø  உவமை உருபு வெளிப்படையாக வரும்.


அணிப் பொருத்தம் – ( குறள் எண் – 8 )


உவமை     -      குன்றின் மேல் ஏறி நின்று யானைப் போர் காண்பவன்


உவமேயம்  -      தன் கைப்பொருள் கொண்டு ஒரு செயலைச் செய்வன்


உவம உருபு -      அற்று


அணிப் பொருத்தம் – ( குறள் எண் – 10 )

        

உவமை     -      பகைவர்கள் கைக்கூப்பி வணங்குவது

          

உவமேயம்  -       பகைவர்கள் கண்ணீர் சிந்தி அழுவது

          

உவம உருபு -       போல


அணிப் பொருத்தம் – ( குறள் எண் – 10 )

          

உவமை     -       கரும்பைக் கசக்கிப் பிழிவது

          

உவமேயம்  -       கயவர்களிடம் பெறும் உதவி

          

உவம உருபு -       போல்

 

3. சொற்பொருள் பின்வருநிலை அணி ( குறள் எண் – 15 )

       

செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் 


பின்வருநிலை அணி ஆகும்.


அணிப் பொருத்தம்

          

‘ இன்மை ‘ என்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் 


இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை பயின்று வந்துள்ளது.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post