10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-5 -3 MARK

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 5 

சிறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

சிறு வினா

1. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன்

   எழுதுக.

v  சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன.


v  விரிந்த தாமரை மலர்கள் விளக்குகள் போல் தோன்றுகின்றன.


v  மேகங்கள் மத்தள ஒலியாய் எழுகின்றன.


v  குவளை மலர்கள், கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.


v  அலைகள், திரைச்சீலைகளாய் விரிகின்றன.


v  வண்டுகள், மகர யாழின் தேனிசைப் போல ரீங்காரம் பாடுகின்றன.


2. கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.

கறங்கு போல விற்பி டித்த கால தூதர்

 கையிலே

காற்றாடி போல எல்லா இடங்களிலும்

 திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனின் 

தூதர் கையிலே

தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர

 யாழின் வண்டுகள் இனிது பாட

 நீர் நிலைகள் எழுப்பும் அலைகள்,

 திரைச்சீலைகளாய் விரிகின்றன. 

வண்டுகள், மகர யாழின் தேனிசைப் போல 

ரீங்காரம் பாடுகின்றன.

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும்

 வில்லாளோ

யானைகள் கொண்ட படையைக் கண்டு 

புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற 

வில்வீரனோ நான்.


3. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை

   எழுதுக.

v  கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார்.


v  “ தமிழ் வளர்ச்சித் துறை “ எனப் புதியதாக ஒரு துறையை உருவாக்கினார்.


v  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைத்து அரசு விழாக்களிலும் தொடக்கப்


 பாடலாக பாடச் செய்தார்.


v  2010 இல் கோவையில் “ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை “ நடத்தி தமிழின்


 பெருமையை உலகறியச் செய்தார்.


4. கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும்

 நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள்

நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும்

தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

 

v  கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல்

 போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன.

 

v  மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத்

தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

 

v  நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில் 

நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post