இராணிப்பேட்டை– திருப்புதல் தேர்வு-2-2025
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 மதிப்பெண்கள் - 15 | |||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் | |||||||||||||||||||||||||||||||||||||
1. | ஆ. தேவநேய பாவாணர் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
2. | ஈ) அண்ணன் தம்பி | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
3. | அ) வழு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
4. | அ) அரும்பு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
5. | ஆ) இராமன் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
6. | இ) முல்லை | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
7 | இ) உழவு,ஏர்,மண்,மாடு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
8 | ஈ) 12 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
9 | ஆ) அதியன்; பெருஞ்சாத்தன் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
10 | அ) கருணையன்; எலிசபெத்துக்காக | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
11 | அ) தலைவிதி | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
12 | இ) பரிபாடல் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
13 | ஆ) கீரந்தையார் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
14 | ஆ) சிறப்பு | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
15 | அ) தண்பெயல், மீண்டும் | 1 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 2 – பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
16 | பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
17. | Ø அறிவைத் திருத்தி சீராக்குவோம். Ø கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
18. | Ø மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
19 | · பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல். · உணவுக்கானப் பணத்தில் புத்தகம் வாங்குதல். | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
20 | v கூரான ஆயுதம் - உழைத்ததால் கிடைத்த ஊதியம். பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் உழைத்ததால் கிடைக்கும் ஊதியமே. | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
21. | குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
பிரிவு – 2 – பிரிவு - 2 |
| ||||||||||||||||||||||||||||||||||||||
22 | தெய்வம் : முருகன், நீர் : காட்டாறு | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
23 | அ) கொடு என்பதற்கு கோடு என எழுதினான். ஆ) இயற்கை என்பதற்கு செயற்கை என எழுதினான். ( வேறு விடை பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
24. | அ) புதுவை ஆ) தஞ்சை | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
25 | அ) மீட்டுருவாக்கம். ஆ) மெய்யெழுத்து | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
26 | அ) ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆ) மீறினால் அமுதமும் நஞ்சு | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
27 | மாஅல் – திருமால். மாஅல் – செய்யுளிசை அளபெடை | 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
28 | மயங்கிய – மயங்கு + இ (ன்) + ய் + அ மயங்கு – பகுதி இ(ன்) – இறந்த கால இடைநிலை; ‘ன்’-புணர்ந்து கெட்டது. ய் – உடம்படு மெய்அ – பெயரெச்சவிகுதி | 2 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 – பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
29 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
30 | அ) மீண்டும் மீண்டும் ஆ) தொடர்ந்து பெய்த மழை இ) ஐம்பூதங்கள் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
31 | · நிகழ்கலை பற்றியும், அவர் தம் கலைத்திறன் பற்றியும் பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி -3 / பிரிவு - 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
32 | இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது. | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
33 | · அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன. · இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன. · நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன. · காதுகளில் குண்டலமும், குழையும் அசைந்தாடுகின்றன. | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
34அ |
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. -குலசேகராழ்வார் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
34ஆ |
மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!. கண்ணதாசன் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 3 | |||||||||||||||||||||||||||||||||||||||
35 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
36 |
| 3 | |||||||||||||||||||||||||||||||||||||
37 | அணி விளக்கம் : தீவகம் – விளக்கு விளக்கு அனைத்து இடங்களிலும் வெளிச்சம் தருவது போல செய்யுளின் ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை தருவது. எ.கா: சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து அணிப்பொருத்தம்: இதில் சேந்தன என்ற சொல் சிவந்தன என்ற பொருளில் செய்யுளின் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் கொள்ளமுடிகிறது. தீவக அணி வகைகள்: Ø முதல்நிலை தீவகம், Ø இடைநிலைத் தீவகம் Ø கடைநிலைத் தீவகம் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி - 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
38அ | Ø பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக. Ø கருணையன் அன்னை உடல் மீது மலரையும், கண்ணீரையும் பொழிந்தான் Ø கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர் போல உள்ளது. Ø அம்பினால் உண்டான வலி போல் உள்ளது. Ø கருணையனைத் தவிக்க விட்டுச் சென்றார். Ø பசிக்கான வழி தெரியாது. Ø இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது. | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
38ஆ | குறிப்புச்சட்டம்
முன்னுரை : கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். மன்னனும் இடைக்காடனும் · மன்னன் குசேலப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார். · மன்னன் அதனை பொருட்படுத்தாமல் இகழ்ந்தார். · புலவன் அங்கிருந்து வெளியேறினார். இறைவனிடம் முறையிடல் · இடைக்காடன் இறைவனிடம் முறையிடல். · மன்னன் தன்னை இகழவில்லை. · இறைவனான உன்னை இகழ்ந்தான். இறைவன் நீங்குதல் · இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார். · வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார். மன்னன் முறையிடல் : · மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான். · இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள வேண்டினான். புலவனுக்குச் சிறப்பு செய்தல் · மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல். · இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான். முடிவுரை : Ø மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார், | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
39அ | அனுப்புநர், பெறுநர் ஐயா, ,பொருள்: கடித விளக்கம் இப்படிக்கு இடம் : . நாள் : உறை மேல் முகவரி: பெறுநர் | 1 1 2 1 1 | |||||||||||||||||||||||||||||||||||||
39ஆ |
நூலின் தலைப்பு: திருக்குறள் நூலின் மையப் பொருள்: மனித வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டுள்ளது. மொழிநடை: யாவருக்கும் புரியும் வண்ணம் இரண்டு அடிகளால் எழுதப்பட்டது. வெளிப்படுத்தும் கருத்து: உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை வெளிப்படுத்துகிறது. நூலின் நயம்: ஏழு சீர்களால் எதுகை, மோனை நயங்களுடன் எழுதப்பட்டுள்ளது. நூல் கட்டமைப்பு: 133 அதிகாரங்களையும். அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என 1330 குறள்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புக்கூறு: உலகின் பல மொழிகளில் இந்நூல் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. நூல் ஆசிரியர்: திருவள்ளுவர். | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
40 |
| 5 | |||||||||||||||||||||||||||||||||||||
41 | கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
42அ |
| 5 | |||||||||||||||||||||||||||||||||||||
42ஆ | பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண் மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து ,சுகந்தம் வீசின. காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. | 5 | |||||||||||||||||||||||||||||||||||||
பகுதி - 5 | |||||||||||||||||||||||||||||||||||||||
43அ | ‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் ‘ குறிப்புச் சட்டம்
முன்னுரை :- ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். ஊர்திகளில் வெளிப்பாடு : எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம் · போக்குவரத்து நெரிசல் குறையும். · பயண நேரம் குறையும். · எரிபொருள் மிச்சமாகும். கல்வித்துறையில் : கல்வித்துறையில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே கண்டு கற்கலாம். பிறச் செயல்பாடுகள்: · மனிதர்களிடம் போட்டியிடலாம். · பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை வழங்கலாம். · சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் இயந்திர மனிதன் கண்டுபிடிக்கலாம். முடிவுரை : செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் மனிதர்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது. | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
43ஆ |
| 8 | |||||||||||||||||||||||||||||||||||||
44அ | குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : · சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. · பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : · மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். · மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். · பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். · உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள். · மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை · மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. · ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேண்டும்”. என கூறி புதிய நம்பிக்கையை உண்டாக்குகிறார். · மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது. கல்வி · மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள். · சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. · அதில் “ இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது. உதவிக்கரம் · மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி. · அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். · அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள். மேல்படிப்பு · மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது. · மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம். | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
44ஆ |
முன்னுரை: கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம். குப்புசாமி: Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன். Ø உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள். Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி. Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி. பக்கத்து வீட்டுக்காரர்: Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர். Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார். Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது. Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார். முடிவுரை: எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான். யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது என்பதனை அறிய முடிகிறது. | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45அ |
முன்னுரை: மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம். நாட்டு விழாக்கள்: சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். விடுதலைப் போராட்ட வரலாறு: வெள்ளையனே வெளியேறு, உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு: மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும். முடிவுரை: நாட்டினை உயர்த்துவேன், தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.
| 8 | |||||||||||||||||||||||||||||||||||||
45ஆ |
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 30 ரூபாயும் என நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும், தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும், இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். | 8 | |||||||||||||||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்
KINDLY WAIT FOR 10 SECONDS