10TH-TAMIL-HALF YEARLY EXAM -PUDUKKOTTAI-ANSWER KEY-2024

பத்தாம் வகுப்பு

அரையாண்டுத் தேர்வு - 2024

தமிழ்

புதுக்கோட்டை  மாவட்டம்

விடைக்குறிப்பு

 புதுக்கோட்டை – அரையாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                  மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ) மணிவகை

1

2.

இ) இரண்டு

1

3.

அ) வேற்றுமை உருபு

1

4.

இ) பாரதியார்

1

5.

அ) மாலை

1

6.

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

1

7.

ஆ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

1

8.

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

1

9.

ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்

1

10.

ஆ) தளரப்பிணைத்தால்

1

11.

ஈ) சிலப்பதிகாரம்

1

12 .

இ) முல்லைப்பாட்டு

1

13 .

ஆ) நப்பூதனார்

1

14 .

ஆ) சக்கரம்

1

15

இ) உரிச்சொல் தொடர்

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

·         வசனம் + கவிதை = வசன கவிதை.

·         உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

1

1

17.

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

2

18.

·         கவிஞர்       பெயர்ப் பயனிலை

·         சென்றார்     வினைப் பயனிலை

·         யார்?            - வினா பயனிலை

2

19

இலை,தாள், தோகை,ஓலை, சண்டு, சருகு

2

20

Ø  பாசவர்வெற்றிலை விற்போர்.

Ø  வாசவர்நறுமணப் பொருள் விற்போர்.

Ø  பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்.

Ø  உமணர்உப்பு விற்பவர்

2

21.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

v  வேங்கைமரம்தனிமொழி.

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி.

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2

23

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

1

1

24.

அ) கோவை                          ஆ) குடந்தை

2

25

பதிந்து – பதி + த்(ந்)+த்+

பதிபகுதி   த் – சந்தி த் -ந் ஆனது விகாரம்

 த்இறந்த கால இடைநிலை

– வினையெச்ச விகுதி

1

1

26

அ) செவ்விலக்கியம்

ஆ) மனித நேயம்

1

1

27

அ) திணை வழு

ஆ) கால வழு

1

1

28

வரும் + தாமரைவருகின்ற தாமரை மலர்.

வரும் + தா + மரைதாவுகின்ற மான் வருகிறது.

வருந்தா + மரைதுன்புறாத மான்.

2

பகுதி – 3 – பிரிவு - 1

29

அ) ம.பொ.சிவஞானம்

ஆ) சட்டமேலவை உறுப்பினர், தலைவர்

இ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

1

1

1

30

Ø  கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார்.

Ø  “ தமிழ் வளர்ச்சித் துறை “ எனப் புதியதாக ஒரு துறையை உருவாக்கினார்.

Ø  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைத்து அரசு விழாக்களிலும் தொடக்கப் பாடலாக பாடச் செய்தார்.

Ø  2010 இல் கோவையில் “ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை “ நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.

3

31

·         ஓரளவு மேம்படுத்துகின்றன.

·         மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·         மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

மனிதன் இயந்திரத் தனமான வாழ்வை வாழ்கின்றான்

3

பகுதி -3 / பிரிவு - 2

32

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன் என்பது உவமை சுட்டும் செய்தி.

3

33

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது.

3

34அ

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.         கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

34ஆ

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

எழுகதிர்

வினைத்தொகை

வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து இன்பம் எழுகதிராய் வரும்.

முத்துப்பல்

உவமைத் தொகை

அவள் முத்துப்பற்களால் சிரித்தாள்.

கீரிபாம்பு

உம்மைத் தொகை

நளனும் அவனும் கீரியும் பாம்பும் போல பகையுடனே இருக்கிறார்கள்.

3

36

சீர்

அசை

வாய்பாடு

வன்-கண்

நேர்+ நேர்

தேமா

குடி-காத்-தல்

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

கற்-றறி-தல்

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

ஆள்–வினை-யோ

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

டைந்-துடன்

நேர்+ நிரை

கூவிளம்

மாண்-ட

நேர்+ நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

பிறப்பு

3

37

அணி விளக்கம் :   தீவகம் – விளக்கு

விளக்கு அனைத்து இடங்களிலும் வெளிச்சம் தருவது போல செய்யுளின் ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை தருவது.

எ.கா:

சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து

அணிப்பொருத்தம்:

இதில் சேந்தன என்ற சொல் சிவந்தன என்ற பொருளில் செய்யுளின் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் கொள்ளமுடிகிறது.

3

பகுதி - 4

38

·         விருந்தினரை வியந்து வரவேற்றல்

·         நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்

·         முகமலர்ச்சியுடன் நோக்க்குதல்

·         வீட்டிற்குள் வருக என வரவேற்றல்

·         அவர் மனம் மகிழும்படி பேசுதல்

·         அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்

·         அவர் விடைபெற்றுச் செல்லும் போது வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல்.

·         முகமன் கூறி வழியனுப்புதல்

5

38ஆ

Ø  மயில்கள் அழகுற ஆடுகிறது.

Ø  தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.

Ø  மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.

Ø  குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல உள்ளது.

Ø  அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.

Ø  வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசை போல இருக்கிறது.

5

39அ

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

திருக்குறள்

நூலின் மையப் பொருள்:

        மனித வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டுள்ளது.

மொழிநடை:

        யாவருக்கும் புரியும் வண்ணம் இரண்டு அடிகளால் எழுதப்பட்டது.

வெளிப்படுத்தும் கருத்து:

          உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை வெளிப்படுத்துகிறது.

நூலின் நயம்:

        ஏழு சீர்களால் எதுகை, மோனை நயங்களுடன் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

        133 அதிகாரங்களையும். அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என 1330 குறள்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்கூறு:

          உலகின் பல மொழிகளில் இந்நூல் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

நூல் ஆசிரியர்:

திருவள்ளுவர்.

5

39ஆ

அனுப்புநர்

அ அ அ அ அ,      

100,பாரதி தெரு,

சக்தி நகர்,

சேலம் – 636006.

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள்,

மின்வாரிய அலுவலகம்,

சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இடம் : சேலம்                                                         இப்படிக்கு,

நாள் : 04-03-2024                                   தங்கள் உண்மையுள்ள,                                                                                 அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள்,

மின்வாரிய அலுவலகம்,

சேலம் – 636001.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

காற்று என் தேவையை பற்றி எழுது என்றது

மனிதன் என் தவிப்பைப்  பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்.

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்.

5. பிறருக்கு நன்மை செய்வேன்

5

42ஆ

சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. உழவனின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி, பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

 

 

 

பகுதி - 5

43

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார்.

·         மன்னன் அதனை பொருட்படுத்தாமல்  இகழ்ந்தார்.

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்.

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்.

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள   வேண்டினான்.

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்.

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்.

முடிவுரை :

        மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

8

43ஆ

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி ,நிலவளம் கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்.

( குறிப்புச்சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு இவை போன்ற கருத்துகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

8

44அ

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்.

Ø உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள்.

Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.

Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான். யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது என்பதனை அறிய முடிகிறது.

8

44ஆ

 

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்.

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்.

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்.

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

45அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும், கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

        விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் மார்ச் 17,1962 இல் பிறந்தார்.

          பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி :       கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல்  

                   துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·      1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·      சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·           2003இல் ஜனவரி 16ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல் மீண்டும் பயணம் செய்தார்.

·           பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்.

விருது:

·           பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·           2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

        மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

8

45ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

நாட்டு விழாக்கள்

விடுதலைப் போராட்ட வரலாறு

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு, உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன், தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

CLICK HERE

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post