SLM DT-9TH-TAMIL-2ND MID TERM - AK - 2024

 

 சேலம் – இரண்டாம் இடைத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                     மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 6

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ) மாமல்லபுரம்

1

2.

இ) முல்லை

1

3.

ஈ) எதிர்மறை வினையெச்சம் , உவமைத்தொகை

1

4.

ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்     

1

ஆ. பாடலடி வினாக்கள்

5

ஆ) பாரதிதாசன்

1

6

ஆ) கல்வி, களர்நிலம்                  இ) புதல்வர்கள், பெண்கள்

1

பகுதி-  2 – பிரிவு – 1  எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க

7

v  திருக்குறள்

v  பரமார்த்த குரு கதைகள்

2

8

இசைத்தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

2

9

சிறுவர்கள்  பாலைக்காய்கள் வெடிக்குமாறு கோலினால் அடித்து விளையாடினர்.அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் பறந்தோடின.

2

10.

சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர் சாகும் வரை உள்ள நோய்

2

11

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.  

2

பிரிவு – 2  எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க

12.

இடிகுரல் – உவமைத்தொகை

பெருங்கடல் – பண்புத் தொகை

2

13

அ) மூன்று வகைப்படும்

ஆ) தோன்றல், திரிதல், கெடுதல்

2

14

அ) கடி            ஆ) சால

2

15

அ) குடைவரைக் கோவில்        ஆ) கருவூலம்

2

16

அ) கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்

ஆ) நேற்று தென்றல் காற்று வீசியது

2

பகுதி - 3

பிரிவு – 1 – எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க

 

17

அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.

3

18

Ø  சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர்.

Ø  சென்னை மாகாண சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர்.

Ø  சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி.

Ø  சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்.

Ø  சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர்

Ø  .புதுக்கோட்டையில் 30.7.1886-இல் பிறந்த முத்துலட்சுமி, தமிழக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்.

Ø  பெண்ணுரிமைக்காக போராடியவர்களில் முதன்மையானவர். பெண்களுக்கு ஓட்டுரிமையைப் போராடிப்பெற்றவர்.

Ø   பன்னெடுங் காலமாக இருந்துவந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டம் இயற்ற வழிவகுத்தவர் என இவரின் சாதனைகள் ஏராளம்.

3

19

முழு உருவச் சிற்பங்கள் : சிற்ப உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும்.

புடைப்புச் சிற்பங்கள் : உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி  அமைக்கப்பட்ட சிற்பங்கள்

3

20

·         விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள்.

·         கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர்.

·         கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

·         இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது.

3

21

கைபிடி – கையைப் பிடி  

 இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி

கைப்பிடி – கையால் பிடி

 மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி

3

 

பிரிவு - 2

 

22.அ

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு*.                   - காரியாசான்

3

22.ஆ

கல்லிடைப் பிறந்த ஆறும்

 கரைபொரு குளனும் தோயும்

முல்லைஅம் புறவில் தோன்று

முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

 நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி

வஞ்சியும் மருதம் பூக்கும்                    -  புலவர்.குழந்தை

3

பகுதி - 4

23.

குறிஞ்சி :

·         அருவிகள் பறை போல் ஒலி எழுப்பும்.

·         பைங்கிளிகள் தமிழிசை பாடும்.

·         மயில்கள் தோகை விரித்தாடும்.

·         இதனை குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

·         குறிஞ்சி நிலம் எங்கும் மணம் கமழ்ந்து இருக்கும்.

முல்லை :

·         நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும், வண்டுகளும் பாடும்.

·         ஆயர்கள் முக்குழல் இசையால் மேயும் பசுக்களை ஒன்று சேர்ப்பர்

·         முதிரை,சாமை,குதிரைவாலி,நெல் இவற்றை குன்று போல் குவித்து வைப்பர்.

பாலை :

·         செந்நாய் கடுமையான வெயிலில் நின்று தனது நிழலில் குட்டிகளை இளைப்பாறச் செய்யும்

·         சிறுவர்கள் பாலைக்காயை கோலினால் அடிக்கும் சப்தம் கேட்டு பருந்துகள் அச்சத்தோடு பறந்தோடும்

மருதம் :

·         காஞ்சி,வஞ்சி மலர்கள் பூத்து மணம் பரப்பும்.

·         வைக்கோற் போர் மீது ஏறி சிறுவர்கள் தென்னை இளநீரை பறிப்பர்.

நெய்தல்

·         பவளங்களையும், முத்துகளையும் மலைபோல் கடற்கரையில் குவித்து வைப்பர்.

·         காற்றில் சிறகினை உலர்த்திய தும்பி பெண்ணின் முகத்தை நோக்கிப் பறக்கும். இது முழுநிலவைக் கருமேகம் தொடர்ந்து செல்லும் காட்சி போல் உள்ளது.

4

24 .

v  காட்சிக்கு ஏற்ப விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

4

25.

 

வினாவிற்குப் பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

4

பகுதி-5 – எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க

26.

மூவலூர் இராமாமிர்தம்

o   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

o   எழுத்தாளர்

o   திராவிட இயக்க செயல்பாட்டாளர்

o   தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

o   தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.

முத்து லட்சுமி :

o   தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

o   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

o   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

·         சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி

·         அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

நீலாம்பிகை அம்மையார்

o   மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்

o   தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.

o   தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன இவர் எழுதிய நூல்கள்.

6

27

·         இசை மொழியினைக் கடந்தது.

·         ஆங்கில மொழி அறிந்தவர் போல்ஸ்கோ

·         வக்கீல் மணி வீட்டிற்கு நாதசுவர வித்துவான் மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்.

·         வக்கீல் மணி தன்னுடைய சங்கீத கோஷ்டி 25 பேரையும் அறிமுகம் செய்தார்.

·         நாதசுர வித்வான் ஆலாபனம் செய்து, கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         போல்ஸ்காவின் முகத்தில் புன் முறுவல். கண்களில் ஆனந்த கண்ணீர்.

·         நாதசுர வித்துவான் அடுத்து ‘ சாமா ராகம் ‘ பாடினார்.

·         போல்ஸ்காவின் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது.

·         அடுத்து சாந்தமுலேகா என்னும் கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         இந்த இராகத்தில் போல்ஸ்கா லயித்துப் போய்விட்டான்.

·         போல்ஸ்கா, நாதசுர வித்வான் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ கடவுள் நர்த்தனமாடுகிற விரலுக்கு முத்தமிடுகிறேன்’ என்றான்.

·         இக்கதையின் மூலம் இசைக்கு நாடு,மொழி,இனம் என்பது இல்லை என்பதை உணரலாம்.

 

6

28

அனுப்புநர்

         ரா. முகிலன்

        மாணவச்செயலர்,

        10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

        அரசினர் உயர்நிலைப்பள்ளி,

        கோரணம்பட்டி,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

பொருள் :- பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டுதல் - சார்பு

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

நாள் : 01-09 -2021                             தங்கள்  உண்மையுள்ள

இடம் : கோரணம்பட்டி                                     ரா. முகிலன்                                                                     (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

பெறுதல்

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001.

6

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post