7TH-TAMIL-3RD TERM-EXAM-2024 - ANSWER KEY

 

 சேலம் – மூன்றாம் பருவத் தேர்வு  -2024

ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                            மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                               5×1=5

1.

ஆ.மாரி

1

2.

இ.பாண்டிய

1

3.

அ.மருந்து

1

4.

ஆ.மலை + அளவு

1

5

இ. அறக்கதிர்

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                              5×1=5

6

நாற்று

1

7

உண்மை

1

8

முதுமை

1

9

ஒப்புரவு

1

10

குயில்

 

III) பொருத்துக                                                                                                              4×1=4

11

இன்சொல்

1

12

ஈகை

1

13  

வன்சொல்

1

14

உண்மை

1

IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி                                                              6×2=12

15 .

அங்கவை, சங்கவை

2

16 .

நாற்று பறிக்கும் போது நண்டு பிடித்தனர்

2

17

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

2

18

பிறருக்கு கொடுத்து மகிழ்வது

2

19.

நீர், நிலம், மலை, காடு

2

20.

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கு உரியது.

2

21 .

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே எனத் தோன்றும்படி கூறுவது உருவக அணி.

எ.கா. முகமலர்

2

22

ஒன்றன் பெயரைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்.

2

23

தமது கல்வியைவிட நாட்டின் விடுதலை மேலானது என எண்ணி காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துக் கொண்டார்

2

V. எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி                                                              2×3=6

24

Ø  நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்

Ø  நாற்று பறித்தல்

Ø  நாற்று நடுதல்

Ø  நீர் பாய்ச்சுதல்

Ø  அறுவடை செய்தல்

Ø  போரடித்தல்

Ø  நெல் பெறுதல்

3

25

·         இனிய சொல் விளைநிலம்

·         ஈகை என்பது விதை

·         உண்மை பேசுதல் என்னும் எரு

·         அன்பு என்னும் நீர் பாய்ச்சுதல்

3

26

Ø  இந்தியாவின் விடுதலைக்குப்பின் ஆட்சி மொழித் தேர்வுக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

Ø  பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால் அது தமிழ்மொழிதான் என உறுதியாக கூறுவேன்.

Ø  இலக்கிய செறிவுகொண்ட தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழி. எனவே தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்

3

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                             4+2= 6

27

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு – நீர் உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முன்றிலோ இல்    - முன்றுறை அரையனார்

4

28

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

 சேராது இயல்வது நாடு

2

VII. கடிதம் எழுதுக                                                                                                      1 × 5 = 5

29

02-01-2024

ஈரோடு

அன்புள்ள மாமாவிற்கு,

          வணக்கம். இங்கு அனைவரும் நலம். நீங்கள் அனைவரும் நலமா?. எங்கள் ஊரில் 15-01-2024 முதல் 17-01-2024 வரை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டும் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த முறை நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் அவசியம் திருவிழாவில் கலந்துக் கொள்ள வேண்டும். உங்கள் வரவை எதிர்ப்பார்த்துக் காத்து இருக்கிறோம்.

                                      நன்றி.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

இரா.முகில்

உறை மேல் முகவரி.

பெறுதல்

        இரா. கார்த்திகேயன்,

          20, பாரதியார் தெரு,

          கம்பர் நகர்,

          சேலம் – 636015.

5

 

VIII. கட்டுரை எழுதுக                                                                                                    1×7= 7

30

என்னைக் கவர்ந்த நூல்

திருக்குறள்

முன்னுரை :-

        தமிழ் மொழியில் ஆயிரங்கணக்கான நூல்கள் இருப்பினும் என்னைக் கவர்ந்த நூல் திருக்குறள். இந்த திருக்குறள் நூலின் சிறப்புகளை இக்கட்டுரையில் நாம் காணலாம்.

நூல் அமைப்பு

        திருக்குறள் குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள். அதாவது ஒவ்வொருக் குறளிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

அதிகாரங்கள் :

        திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. மொத்தம் 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது.

அறத்துப்பால் : இல்லறவியல், துறவறவியல் , ஊழியல்

பொருட்பால் : அரசியல், அங்கவியல், ஒழிபியல்

இன்பத்துப் பால் : களவியல், கற்பியல்

சிறப்புகள்

·         திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை

·         திருக்குறள் முதன் முதலாக அச்சிடப்பட்ட ஆண்டு 1812.

·         திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14000

·         திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள

விரும்பக் காரணம் :

        திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்குத் தேவையான அறத்தை வழங்குகிறது. மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என இலக்கணம் வகுத்துள்ளது.

முடிவுரை

        உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை நம்மில் அனைவரும் வீட்டிலும் இருக்க வேண்டும். திருக்குறளை மனிதர்களுக்கான புனித நூலாக அங்கீகரிக்க வேண்டும்

7

30

முன்னுரை

        உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தவராகக் கருதுவதே உயர்ந்த மனிதப் பண்பு ஆகும். அறிவுடைய சான்றோர்கள் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். உதவும் போது தமக்கு இழப்பு ஏற்படினும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இக்கருத்தை விளக்கும் உண்மை ஒளி என்னும் கதையை காண்போம்.

கதைச் சுருக்கம்:

கதை மாந்தர்கள் : ஜென் குரு, மாணவர்கள்,திருடன்

 குரு மாணவர்களிடம் உண்மையான ஒளி எது என்பதைப் பற்றி பாடம் புகட்டுகிறார்.

          பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே. வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். உங்களிடம் ஒரு கேள்வி “ இருள் கலைந்து வெளிச்சம் வந்து விட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள் ?” என குரு மாணவர்களிடம் கேட்கிறார்.

          மாணவர்கள்,” தொலைவில் நிற்கும் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் எனவும், இன்னொருவர் “ தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா?, அரசமரமா?” எனக் காணும் பொழுது எனக் கூறுகிறார்கள்.

          குரு, “ ஒரு மனிதரைக் காணும் போது இவர் என் உடன் பிறந்தவர் என்று நீங்கள் உணர்வது தான் உண்மையான ஒளி “ அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது. உள்ளுக்குள் ஒளி இல்லையெனில்  வெளிச்சம்கூடக் காரிருள் தான்.

          சாலை ஓரத்தில் ஒருவன்  மயங்கி கிடக்கிறான். பசியால் மயங்கி விழுந்துவிட்டேன் என அவன் கூறினான். குரு அவனை தன் குதிரை மீது அமர வைத்து அழைத்துச் செல்ல விளைகிறார். அவன் குதிரையின் மீது அமர்ந்த உடனே குதிரையை வேகமாக விரட்டினான்.

          குருவிற்கு புரிந்துவிட்டது அவன் திருடன். குதிரையை திருடத்தான் இப்படிச் செய்திருக்கிறான் என தான் ஏமாந்து விட்டதை உணர்கிறார். குதிரை இல்லாமல் செல்ல முடியாது என உணர்ந்து குதிரை சந்தைக்குச் செல்கிறார். அங்கே அந்த திருடனைக் காண்கிறார். அவன் தோளைத்  தொடுகிறார்

          திருடனிடம் “ யாரிடமும் சொல்லாதே “ எனக் கூறுகிறார். திருடன் , “ எதை ? , ஏன் ? “ என கேட்கிறான். குதிரையை நீயே வைத்துக் கொள், ஆனால் உனக்கு எப்படி கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே எனக் கூறுகிறார்.

          திருடன், இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என நினைக்கிறார் போலிருக்கிறது என எண்ணுகிறான்.

          குரு, “ குழந்தாய் நீ நினைப்பது எனக்குப் புரிகிறது. எதிர்காலத்தில் யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட அவர்களுக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள் புரிகிறதா?  குறுகிற தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்து விடக் கூடாது. இதை நீ தெரிந்து கொள் “ எனக் கூறுகிறார்.

7

IX. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                     5×2=10

31

அ. கண்ணை இமை காப்பது போல

ஆ. பசு மரத்தாணிப்போல

1

1

32

அ. நாகம், பட்டினம், பட்டி

 ஆ. செங்கல்,பட்டு, கல்

2

33.

அ. வேளாண்மை                           ஆ. எளிமை

2

34

அ. எங்கு                                       ஆ. யார்

2

35

அ. எனது குறிக்கோள்   மருத்துவர் ஆவது   

ஆ. சிந்தித்து செயல்பட வேண்டும்

2

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.

விரைவில் ஏழாம் வகுப்பிற்கான முப்பருவ வழிகாட்டி கிடைக்கும்.

விபரங்களுக்கு எண்களில் தொடர்புக் கொள்ளவும்.

 KINDLY WAIT FOR 10 SECONDS

TO GET DOWNLOAD 


 


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post