மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 பிப்ரவரி , சிவகங்கை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
அ.
வணிகக் கப்பல்களும் , ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
2. |
ஆ. 3,1,4,2 |
1 |
3. |
அ. வேற்றுமை
உருபு |
1 |
4. |
ஈ. இலா |
1 |
5. |
இ. கல்வி |
1 |
6. |
இ. ஒயிலாட்டம்
இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது. |
1 |
7. |
இ.
உழவு, ஏர், மண், மாடு |
1 |
8. |
அ. அதியன், பெருஞ்சாத்தன் |
1 |
9. |
ஆ.
வினையெச்சத் தொடர் |
1 |
10. |
இ. சச்சிதானந்தன் |
1 |
11. |
ஆ.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை – உயர்திணை, அஃறிணை |
1 |
12. |
அ.
முல்லைப்பாட்டு |
1 |
13. |
ஈ.
அகன்ற உலகம் |
1 |
14. |
இ.
பாடு இமிழ் , கோடு கொண்டு |
1 |
15. |
ஆ.
வளைஇ |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு
கூறும் நீதின்மன்றம். |
2 |
18 |
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது. ü மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர். ü உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில்
கூறப்பட்டுள்ளது |
2 |
19 |
குலேச பாண்டியன் ,
இடைக்காடனார் |
2 |
20 |
தம்பி, அழாதே! அம்மா இப்போது வந்து விடுவார், வரும்போது
தின்பண்டங்கள் வாங்கி வருவார் |
2 |
21 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
ஒலித்து - ஒலி + த்+ த்+ உ; ஒலி - பகுதி; த்- சந்தி; த்- இறந்தகால இடைநிலை; உ - வினையெச்சவிகுதி |
2 |
23 |
அ. காப்புரிமை ஆ. புயல் |
2 |
24 |
அ. குறவர் மலையில் தேன் எடுத்தனர். ஆ.
நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். |
2 |
25 |
பாடுவதற்குத் தகுதியுடைய ஓர்
ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம்,
புகழ், கருணைமுதலியவற்றைப் போற்றிப் பாடுவது,
பாடாண்திணை (பாடு+ஆண்+திணை= பாடாண்திணை). |
2 |
26 |
அழைப்பு மணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார். |
2 |
27 |
அ. தொலைவில்
அமர்க ஆ. மீண்ட துயர் |
2 |
28 |
குறள்வெண்பாஎன்பது வெண்பாவின் பொது
இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும். |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
@ கதாசிரியர் ஊர்
திரும்புவதற்கு பன்னிரண்டணா போக மீதியைச் செலவு செய்தார். இரண்டணாவை
பிச்சைக்காரனுக்குத் தருமம் செய்தார். |
3 |
30 |
அ. கடவுச்சொல், கைரேகை. ஆ. காட்சியை அடையாளம் கண்டுஅதற்கேற்பத்
தகவமைத்துக் கொள்கிறது. இ. செயற்கை நுண்ணறிவு. |
3 |
31 |
காலப்போக்கில்
வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டன
. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில்
விருந்தினர்களைவரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும்வரை ‘திருமணஏற்பாட்டாளர்களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக்
காணமுடிகிறது |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü
நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü
ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று
நன்னனின் நாட்டை அடைக. ü
அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü
அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் |
3 |
|
33 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆகியவையும் ஆடட்டும்.முருகப்
பெருமானே செங்கீரை ஆடுக |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
தன்மையணி எவ்வகைப்பட்ட பொருளாக
இருந்தாலும் இயற்கையில் அமைந்தஅதன்உண்மையானஇயல்புத் தன்மையினைக்
கேட்பவர்களின்மனம் மகிழுமாறு உரியசொற்களை அமைத்துப்பாடுவது தன்மையணியாகும். சான்று: மெய்யிற்
பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்----- அணிப்பொருத்தம்: உடம்பு முழுக்கத் தூசியும்
விரித்தகருமையானதலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது
கண்ணீரும் கண்டஅளவிலேயேவையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான்.
அவளது சொல், தன்செவியில் கேட்டவுடன்
உயிரைநீத்தான். கண்ணகியின்துயர் நிறைந்த
தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி
எனப்படும். |
3 |
||||||||||||||||||||||||
36 |
வினா
6 வகைப்படும். அவை: 1. அறி
வினா 2. அறியா
வினா 3. ஐய
வினா 4. கொளல்
வினா 5. கொடை
வினா 6. ஏவல்
வினா |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும்
உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். (அல்லது) ஆ)
திரண்ட கருத்து, மையக்கருத்து, தொடை நயம், அணி நயம், சந்த
நயம், சொல் நயம் ஆகிய நயங்களுள் ஏற்புடையவற்றை
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
39 |
ஆ) ü
அனுப்புநர் ü
பெறுநர் ü
ஐயா,பொருள் ü
கடிதத்தின் உடல் ü
இப்படிக்கு ü
இடம்,நாள் ü
உறைமேல் முகவரி என்ற
அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü
இடம், நாள் ü
விளித்தல் ü
கடிதத்தின் உடல் ü
இப்படிக்கு ü
உறைமேல் முகவரி என்ற
அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ) நமது பதில்: இயற்கையோடு இயைந்த உணவுப் பழக்கத்தை
நாம் கைவிட்டதாலேயே பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பாரதத்தை நோக்கிப்
படையெடுக்கின்றன. கடலை உருண்டையும், கல்கோனாவையும்,
பதநீரையும், சோளப் பணியாரத்தையும், தினைப் பாயாசத்தையும், குதிரைவாலி
கொழுக்கட்டையையும் நாம் கைவிட்டதனாலேயே இன்று பலவித கொள்ளை நோய்களுக்கு
ஆட்பட்டுக் கிடக்கிறோம். வளர்ச்சி, வேகம், கணினியுகம் என்று மாறி வரும் உலகில்
இயற்கையை அழித்து முன்னேற முற்படுகிறோம். அமெரிக்க நிறுவனங்களுக்காக இங்கிருந்து
கொண்டு நடு இரவில் வேலை பார்ப்பதால் பலர் மனநோயாளிகளாவே மாறி விடுகின்றனர்.
தூக்கமின்மையால் பல மோசமான பழக்க வழக்கங்களுக்கும் ஆட்படுகின்றனர். இந்நிலை மாற
அளவோடு எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியான உணவுகளை உண்டு சரியான நேரத்திற்கு
உறங்கி, உடற்பயிற்சியும் செய்தால் வாழ்வு வளம் பெறும்.
விரைவு உணவகங்களில் விற்கப்படும் உணவுகளையும், பொட்டலப்படுத்தப்பட்ட
உணவுகளையும் தவிர்த்தால் நோயின்றி வாழலாம். ஆ) மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம்
தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது. தேவி: யாருக்கு
தெரியும்? எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும்
படைக்கலாம். மலர்: நான்
படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை
உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான
செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும். |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல்
வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன்
பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த
வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். (அல்லது) ஆ) முன்னுரை: ஆயக்கலைகள்
64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு
சூழலால் குறைந்து வருகின்றன. நிகழ்கலையின் வடிவங்கள்: பொதுவாக
நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும்
இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும். இவ்வகை கலைகள்
பல்வேறு வழிகளில் ஆடல் பாடல்களோடு நடைபெறும். சிறப்பும், பழைமையும் வாழ்வியல்
நிகழ்வில் பிரிக்க முடியாத, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை
மூலம் அறிய முடிகிறது. பொம்மலாட்டம்,
கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற
இக்கலைகள் எல்லாம் நம்முன்னோர் காலத்தில் இருந்த பழமை வாய்ந்த கலைகளாகும். குறைந்து வருவதற்கான காரணங்கள்: நாகரிகத்தின்
காரணமாகவும், கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத
காரணத்தாலும், திரைத்துறை வளர்ச்சியினாலும் இக்கலைகள்
குறைந்து வருகின்றன. வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன நம்
இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் நல்ல வாழ்வியல் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி,
கலைகளையும், கலைஞரையும் பாராட்டுவோம். முடிவுரை: நாமும்
நிகழ்கலைகளைக் கற்று, கலைகளை அழியாமல் காப்போம். |
8 |
44 |
அ.
பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக. (அல்லது) ஆ. முகில்: வணக்கம் ஐயா! |
8 |
45 |
அ)
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம்
காண்போம். தமிழின் தொன்மை: Ø தமிழின்
தொன்மையைக் கருதி கம்பர் “என்றுமுள
தென்தமிழ்” என்றார். Ø கல்
தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø ஆங்கில
மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø வீரமாமுனிவர்
தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø தமிழ்
தாத்தா உ.வே.சாமிநாதன்
அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.
தமிழின் சிறப்புகள்: Ø தமிழ்
இனிமையான மொழி. பல
இலக்கிய, இலக்கணங்களை
கொண்ட மொழி. Ø இயல்,இசை,நாடகம்
என முத்தமிழ் உடையது. Ø தமிழ்
மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம்
கண்டோம். ஆ) முன்னுரை: நமது
சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது.
மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா?
அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். விசும்பின்
துளியும் பசும்புல் தலையும்:
”விசும்பின் துளிவீழின் அல்லால்
மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது" என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க
இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. வெப்பமயமாதலும்
நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக
உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும்
மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று
மாசு:
”உங்கள் சுவாசத்தை நிறுத்தும் முன்
காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்” மக்கள் தொகைப் பெருக்கம்,
மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு,
வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள்,
பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும்
நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி,
காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம். பசுமையைக்
காப்போம்: ”மரம் தான் மரம் தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று
இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி
பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது
ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில்
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும். மரமும்
மழையும் வரமும் உயிரும்: 'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி' ஒவ்வொரு மரமும் பல்லாயிரம்
உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர்
அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப்
பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும். முடிவுரை: இயற்கைவளங்கள் தொடர்ந்து
மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என
அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா
பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி.
மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம். |
8 |