10TH-TAMIL-2MARK QUESTIONS COLLECTION - PDF

   

பத்தாம் வகுப்பு

தமிழ் 

பத்தாம் வகுப்பு / தமிழ்

 இரண்டு மதிப்பெண் வினாக்கள்

( புத்தக வினாக்கள் )

மெல்லக் கற்போர் பகுதி

இயல் – 1                                                                                                                 அமுத ஊற்று

1. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

v  வேங்கைமரம்தனிமொழி

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

v  சீவக சிந்தாமணி       

v  குண்டலகேசி

v  வளையாபதி

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

v    ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

v    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.- தவறு

v    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

காரணம்:

v  தாறு என்பது வாழைக்குலை

v  சீப்பு என்பது வரிசையான பழங்கள்

4. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

v  உடுப்பதூஉம் உண்பதூஉம்இன்னிசை அளபெடை.

v  செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும்   அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .

இயல் - 2

உயிரின் ஓசை                                                                                                  முல்லைப்பாட்டு

1. நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

v  மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம்

v  மரம் நடுவோம்; காற்றை பெறுவோம்

2. வசன கவிதைகுறிப்பு வரைக.

          உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

3. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

v  .தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்

v  தயிரை உடைய குடம்கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

4.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

·         தம்பி அழாதே! உனக்கு அப்பா பொம்மைகள் வாங்கி வருவார்

·         உனக்கு நிறைய திண்பண்டங்கள் வாங்கி வருவார்

5. மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

        மாஅல் – திருமாள்

          மாஅல் – செய்யுளிசை அளபெடை

இயல் – 3

கூட்டாஞ்சோறு                                                                                            காசிக்காண்டம்

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

·         வருக, வணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்

2. ‘ தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி ‘ என்பது இலக்கியச் செய்தி.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

·         விருந்தோம்பலுக்கு செல்வம் இன்றையாமையாதது இல்லை.

·         விருந்து கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தால் போதும்

3எழுது என்றாள்என்பது விரைவு காரணமாகஎழுது எழுது என்றாள்என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

உவகைக் காரணமாக சிரித்துச்சிரித்துப் பேசினார்

4. ‘ இறடிப் பொம்மல் பெறுகுவீர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

        மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

5. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

·         கவிஞர்           பெயர்ப் பயனிலை

·         சென்றார்        வினைப் பயனிலை

·         யார்              - வினா பயனிலை

 

இயல் – 3

திருக்குறள்                                                                                                          திருவள்ளுவர்

1. “ நச்சப் படாதவன்செல்வம்இத்தொடரில் தடித்த சொல்லுக்குப் பொருள் தருக.

          நச்சப் படாதவன்       -       பிறருக்கு உதவி செய்யாதவன்

2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

   கோடிஉண் டாயினும் இல்இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

           கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் -       இன்னிசை அளபெடை

3.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.     

)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்

1)ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது

2)உயிரினும் ஓம்பப்படும்

)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்

3)நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

விடை:

)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப்படும்

)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது - நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

) எய்துவர் எய்தாப் பழிஇக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

) கூவிளம் தேமா மலர்        ) கூவிளம் புளிமா நாள்                  ) தேமா புளிமா காசு  ) புளிமா தேமா பிறப்பு

இயல் – 4

நான்காம் தமிழ்                                                                                    பெருமாள் திருமொழி

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா : செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

 1. கண்காணிப்பு காமிராக்கள்           2. நவீன திறன்பேசி

2. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன்இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

          உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

        மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி விளக்குக,

நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று

5. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.       

இயல் – 5

 மணற்கேணி                                                                                                       நீதிவெண்பா

1. “ கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல் “

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

கழிந்த பெரும் கேள்வியினான் – குசேல பாண்டியன்

காதல் மிகு கேண்மையினான் – இடைக்காடனார்

2..செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்

3. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர் – பகுதி

த்(ந்) – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி

4. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?

  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியாவினா

மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? – ஐய வினா

இயல் – 6

நிலா முற்றம்                                                                    முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள்,கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்:

Ø    நிலம்                      காடு

Ø    பெரும் பொழுது           - மழைக்காலம்

Ø    சிறுபொழுது              - மாலை

கருப்பொருள்:

Ø  உணவு - வரகு


2. “நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக:-

        சேகர் தான் பார்த்த அர்ஜூனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக அவனிடம் கூறினான்.

 

3. உறங்குகின்ற கும்பகன்னஎழுந்திராய் எழுந்திராய்

காலதூதர் கையிலேஉறங்குவாய் உறங்குவாய்

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

·                . கும்பகர்ணனே எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!

·                கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய்.

4. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்  சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.

5. கீழ் வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்

வ்முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

வெற்பர்கள் மலையில் உழுதனர்.

தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

இயல் – 6

திருக்குறள்                                                                                                            திருவள்ளுவர்

1. கரப்பிடும்பை இல்லார்இத்தொடரின் பொருள் கூறுக:-

        கரப்பிடும்பை இல்லார்தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர்.

2. தஞ்சம் எளியர் பகைக்குஇவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

சீர்

அசை

வாய்பாடு

தஞ்/ சம்

நேர்நேர்

தேமா

எளி/ யர்

நிரைநேர்

புளிமா

பகைக்/ கு

நிரைபு

பிறப்பு

3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறிளின் கருத்து என்ன?

          ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

4. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்தால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

v  கூரான ஆயுதம் - உழைத்ததால் கிடைத்த ஊதியம்.

v  பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் உழைத்ததால் கிடைக்கும் ஊதியமே ஆகும்.

இயல் – 7

விதை நெல்                                                                                                        சிலப்பதிகாரம்

1. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர்சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

·         பாசவர்வெற்றிலை விற்போர்

·         வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·         பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·         உமணர்உப்பு விற்பவர்

2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

        அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்

3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

·         பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்

·         உணவுக்கானப்  பணத்தில் புத்தகம் வாங்குதல்

4. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

5. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

          பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி

சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –.பொ.சி

பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி,சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்..பொ.சி

இயல் – 8

பெருவழி                                                                                                            காலக்கணிதம்

1. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

  உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

) அடியெதுகையை எடுத்தெழுதுக..

) இலக்கணக் குறிப்பு எழுதுக- கொள்க,குரைக்க

அடிஎதுகை:    கொள்வோர்ள்வாய்

இலக்கணக் குறிப்பு: கொள்க,குரைக்கவியங்கோள் வினைமுற்று

2. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

Ø  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா.

Ø  .கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

          மெய்ப்பொருள் காண்ப தறிவு

3. குறிப்பு வரைக:- அவையம்

Ø  அறம் கூறும் மன்றங்கள்

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

4. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்

5. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கும்,துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியது.

இயல் – 9

 அன்பின் மொழி                                                                                                   தேம்பாவணி

1. தீவக அணிகளின் வகைகள் யாவை?

Ø  முதல் நிலைத் தீவகம்

Ø  இடை நிலைத் தீவகம்

Ø  கடை நிலைத் தீவகம்

2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டுஇத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு. நான் எழுதுவதற்கு காரணமும் உண்டு.

3. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.

4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.கா: அன்புக்கு அறன், பண்புக்குப் பயன்

5. ‘ வாழ்வில் தலைக்கனம்’, ‘ தலைக்கனமே வாழ்வு ‘ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

சித்தாளுவின் வாழ்வினைக் கூறுகிறார் நாகூர் ரூமி.

CLICK HERE TO THIS PDF

PLS WAIT FOR 15 SECONDS

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

WWW.TAMILVITHAI.COM                                                      WWW.KALVIVITHAIGAL.COM

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post