8TH - TAMIL - QUESTION BANK - 2,3,5,7 MARKS - PDF

 

எட்டாம் வகுப்பு

தமிழ் / பயிற்சிப்புத்தகம்

குறு, சிறு, நெடு, சிந்தனை வினாக்கள்

தமிழ்மொழி வாழ்த்து

குறுவினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

சிறுவினா

1. தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

சிந்தனை வினா

1. பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?


தமிழ்மொழி மரபு

குறுவினா

 1. உலகம் எவற்றால் ஆனது?

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

சிந்தனை வினா

 நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

தமிழ்வரிவடிவ வளர்ச்சி

குறுவினா

1. ஓவிய எழுத்து என்றால் என்ன?

2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

4. வீரமா முனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.

சிறுவினா

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக. நெடுவினா எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

சிந்தனை வினா

1. தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

2. தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.

எழுத்துகளின் பிறப்பு

சிறுவினா

1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

2. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

3. ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.

ஓடை

குறுவினா

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

சிறுவினா

1. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

சிந்தனை வினா

1. வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?


கோணக்காத்துப் பாட்டு

குறுவினா

 1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

சிறுவினா

1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

 2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை ?

சிந்தனை வினா

1. இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?


நிலம் பொது

குறுவினா

1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

2. நிலத்திற்கும் செவ் விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

3. எதனைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

 சிறுவினா

1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்? நெடுவினா

1.தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

சிந்தனை வினா

1.நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண் டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?

வினைமுற்று

சிறுவினா

 1. வினைமுற்று என்றால் என்ன?

2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

 4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?


திருக்குறள்

குறுவினா

1. சான்றோருக்கு அழகாவது எது?

2. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

3. ‘ புலித் தோல் போர்த்திய பசு ‘ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ  ன்பது  அரவர் எச்சத்தால் காணப்படும்.

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்டபின் அல்லது

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ______

  புலியின்தோல் ________ மேய்ந் தற்று.

2. விலங்கொடு _______ அனையர் ______

   கற்றாரோடு  ஏனை யவர்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது

வினைபடு பாலால் செவ்விதுஆங்கு

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

                    

நோயும் மருந்தும்

குறுவினா

1. நோயின் மூன்று வகைகள் யாவை?

2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

 

சிறுவினா

1. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

சிந்தனை வினா

1. துன்பமின்றி வாழ் நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?


வருமுன் காப்போம்

குறுவினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

சிறுவினா

1. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

சிந்தனை வினா

1. நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?


தமிழர் மருத்துவம்

குறுவினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

சிறுவினா

 1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

நெடுவினா

1. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

சிந்தனை வினா

1. நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

எச்சம்

சிறுவினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

2. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.

3. முற்றெச்சத்தைச் சா ன்றுடன் விளக்குக.

4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

கல்வி அழகே அழகு

குறுவினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

சிறுவினா

 நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

சிந்தனை வினா

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

புத்தியைத் தீட்டு

குறுவினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?

சிறுவினா

1. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

சிந்தனை வினா

1. உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

பல்துறைக் கல்வி

குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?

2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

3. திரு. வி. க., சங்க ப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.

சிறுவினா

1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.

2. அறிவியல் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?

நெடுவினா

1. காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக. சிந்தனை வினா

திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?

வேற்றுமை

சிறுவினா

1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

 2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?

3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

திருக்கேதாரம்

குறுவினா

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

சிறுவினா

திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

சிந்தனை வினா

விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

பாடறிந்து ஒழுகுதல்

குறுவினா

1. பண்பு, அன்பு ஆகியவைப் பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

சிறு வினா

1. நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

சிந்தனை வினா

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

குறுவினா

1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?

 2. மண்பாண்டம் , சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக.

3. பனையோலை யால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?

சிறுவினா

1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.

2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.

நெடுவினா

தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

சிந்தனை வினா

கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.

தொகைநிலை,தொகா நிலைத் தொடர்கள்

சிறுவினா

1. தொகை நிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

2. இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.

 3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

திருக்குறள்

குறுவினா

1. நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படை க்கும் வழி யாது?

2. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

3. அரசன் தண்டிக்கும் முறை யாது?

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

வளம் பெருகுக

குறுவினா

1. பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?

2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

சிறுவினா

1. உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

சிந்தனை வினா

உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

மழைச்சோறு

குறுவினா

1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?

2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

சிறுவினா

1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?

சிந்தனை வினா

மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?

கொங்கு நாட்டு வணிகம்

குறுவினா

1. மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

3. ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

சிறுவினா

1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?

2. கரூர் மாவட்டம் பற்றிய செய் திகளைச் சுருக்கி எழுதுக.

நெடுவினா

கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுவணிகம் குறித்து எழுதுக.

சிந்தனை வினா

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

புணர்ச்சி

சிறுவினா

1. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

2. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

படைவேழம்

குறுவினா

1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?

2. கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?

3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?

சிறுவினா

சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?

சிந்தனை வினா

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவை யானவை எவை எனக் கருதுகிறீர்கள்?

விடுதலைத் திருநாள்

குறுவினா

 1. பகத்சிங் கண்ட கனவு யாது?

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

சிறுவினா

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

சிந்தனை வினா

நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

 

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

குறுவினா

1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?

2. திரைத் துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?

3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.

சிறுவினா

1. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படை யாக அமைந்த நிகழ்வை எழுது

2. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?

நெடுவினா

எம்.ஜி.ஆரின் பண்புநலன்களை விளக்கி எழுதுக..

 சிந்தனை வினா

சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

1. சுட்டுத் திரிபு - __________________________.

2. திசைப் பெயர்கள் - __________________________.

3. பெயரெச்சம் - __________________________.

 4. உவமைத் தொகை - __________________________.

5. நான்காம் வேற்றுமை விரி - __________________________.

 6. இரண்டாம் வேற்றுமை தொகை - __________________________.

7. வினைத் தொகை - __________________________.

 8. உருவகம் - __________________________.

9. எழுவாய்த் தொடர் - __________________________.

10. எதிர்மறைப் பெயரெச்சம் - __________________________.

சிறுவினா

1. சந்திப்பிழை என்றால் என்ன?

2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.

3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.


ஒன்றே குலம்

குறுவினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

சிறு வினா

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

சிந்தனை வினா

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?


மெய்ஞ்ஞான ஒளி

குறுவினா

1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

சிறுவினா

1. குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

சிந்தனை வினா

ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?

 

அயோத்திதாசர் சிந்தனைகள்

குறுவினா

1. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?

2. ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வா று இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

சிறுவினா

1. அயோத்திதாசரின் இதழ்ப்ப ணி பற்றி எழுதுக.

2. அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

நெடுவினா

வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.

சிந்தனைவினா

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?

யாப்பு இலக்கணம்

சிறுவினா

1. இருவகை அசைகளையும் விளக்குக.

2. தளை என்பது யாது?

3. அந்தாதி என்றால் என்ன?

4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

திருக்குறள்

குறுவினா

1. எது பெருமையைத் தரும்?

2. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?

 4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

உயிர்க்குணங்கள்

குறுவினா

1. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

2. மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?

சிறுவினா

மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?

சிந்தனை வினா

மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்கவேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?

இளைய தோழனுக்கு

குறுவினா

 1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

2. தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

சிறுவினா

1.பூமி எப்போது பாதையாகும்?

சிந்தனை வினா

வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சட்டமேதை அம்பேத்கர்

குறுவினா

1. அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.

3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

சிறுவினா

1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

2. அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.

நெடுவினா

 பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக

சிந்தனை வினா

பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

அணி இலக்கணம்

சிறுவினா

1. பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.

2. வேற்றுமை அணி என்றால் என்ன? <

3. இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?

WAIT FOR 15 SECONDS
DOWNLOAD THIS PDF
நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post