8TH - TAMIL -TERM -1-UNIT -1- FA(B) - QUESTION - PDF

 

எட்டாம் வகுப்பு

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                               நாள் : 29-06-22

பாடம் : தமிழ் மொழி வாழ்த்து                        மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     5×1 = 5

1. மக்கள் வாழும் நிலப்ப குதியைக் குறிக்கும் சொல் _____.

அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி


 2. ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _______.

அ) என் + றென்றும் ஆ) என்று + என்றும் இ) என்றும் + என்றும் ஈ) என் + என்றும்


3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _______.

 அ) வான + மளந்தது ஆ) வான் + அளந்தது இ) வானம் + அளந்தது

ஈ) வான் + மளந்தது


4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____

அ ) அறிந்ததுஅனைத்தும் ஆ) அறிந்தனைத்தும் இ) அறிந்ததனைத் தும் ஈ) அறிந்துனைத்தும்


5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ ) வானம்அறிந்து ஆ) வான்அறிந்த இ) வானமறிந்த

ஈ) வான்மறிந்த


ஆ)  தமிழ் மொழி வாழ்த்து பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக                                                            5×1 = 5

1.

2.

3.

4

5

 

 

 

எட்டாம் வகுப்பு

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                               நாள் : 01-07-22

பாடம் : தமிழ் மொழி மரபு                                      மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     4×1 = 4

1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.

அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்

2. இயற்கையை ப் போற்றுதல் தமிழர் __________.

அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு

3. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _________.

அ) இரண்டு + திணை ஆ) இரு + திணை இ) இருவர் + திணை ஈ) இருந்து + திணை

4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _________.

அ) ஐம் + பால் ஆ) ஐந்து + பால் இ) ஐம்பது + பால் ஈ) ஐ + பால்

ஆ) சொல்லுக்கான பொருளை எழுதுக:-                              6×1 = 6

1. விசும்பு        -

2. இரு திணை -

3. வழாஅமை   -

4. மரபு           -

5. திரிதல்       -

6. செய்யுள்      -

 

 

 எட்டாம் வகுப்பு

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                               நாள் : 05-07-22

பாடம் : தமிழ் வரிவடிவ வளர்ச்சி                    மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     7×1 = 7

1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது.

அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை     ஈ) நுண்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து          ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.

அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார்  இ) வ.உ. சிதம்ப ரனார்

 ஈ) பெருஞ்சித்திரனார்

4. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை _____ என்பர்

அ) ஒலி நிலை   ஆ) ஒலி எழுத்து நிலை   இ) ஓவிய எழுத்து   ஈ) வரிவடிவம்

5. “ ஸ “ என்பது _____ மொழி

அ) தமிழ்            ஆ) வடமொழி                இ) உருது         ஈ) இந்தி

6. பாறைகளில் செதுக்கும் போது _______ பயன்படுத்த முடியாது.

அ) நேர் கோடு   ஆ) வளைகோடு                        இ) புள்ளி எழுத்து          

ஈ) வட்டெழுத்து

7. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க _____ கண்டுபிடித்தான்

அ) கருவி           ஆ) மொழி          இ) எழுத்து        ஈ) இலக்கணம்

ஆ) கோடிட்ட இடத்தை நிரப்புக.:-                                                                               3×1 = 3

 1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்

_ _ _ _ _ என அழைக்கப்பட்டன.

2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ______

 

3..நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் ________

பயன்படுத்தப்படுகிறது.

 

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                               நாள் : 08-07-22

பாடம் : எழுத்துகளின் பிறப்பு                        மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     6 ×1 = 6

1. இதழ்களை க் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____. அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ,

 2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.

அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு

3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.

அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து

4. நாவின் நுனி அண்ணத் தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.

அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட், ண் ஈ) ப், ம்

5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.

அ) ம் ஆ) ப் இ) ய் ஈ) வ்

6.உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் _________ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

அ) கழுத்து         ஆ) மார்பு           இ) மூக்கு          ஈ) தலை

ஆ) பொருத்துக.                                                           4 ×1 = 4

1.க், ங் - நாவின் இடை, அண்ணத்தின் இடை

2.ச், ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

3.ட், ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி

4. த், ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி


இந்த நான்கு  வினாத்தாளினையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க கீழ் உள்ள DOWNLOAN  என்பதனையும் அழுத்தவும். இந்த நான்கு வினாத்தாளும் இரு தாளில்

 கிடைக்கப் பெறும். பொருட்செலவும், காகிதப் பயன்பாடும் குறையும்.

தமிழ்மொழி வாழ்த்து , 

தமிழ் மொழி மரபு, 

தமிழ் வரி வடிவ வளர்ச்சி, 

எழுத்துகளின் பிறப்பு


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post