10TH - TAMIL WORK BOOK - EAGLE VIEW

 குறு வினா ( இரண்டு மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

( உரைநடை,செய்யுள்,இலக்கணம் )

 

இயல் – 1

1. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

5 தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

மனப்பாடப் பகுதி

( இரண்டு  மதிப்பெண் )

( மாணவர்கள் மனப்பாடக்குறளின் பொருளையும் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் பொருளை கொடுத்து அதன் குறளை எழுதச் சொல்லியும் வினாக்கள் அமையும் )

திருக்குறள்

தொடங்கும் குறள்

முடியும் குறள்

1.      எப்பொருள்

1. விடல்

2.    பண்என்னாம்

     2. தரும்

     3.   முயற்சி

     3. செயல்

     4.   பொருளல்

     4. வினை

     5.  குற்றம்

     5. தது


மொழித்திறன் பயிற்சிகள்

( இரண்டு  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

கலைச்சொல் அறிக

 

கலைச்சொல் அறிக - தொகுப்பு

இயல் - 1

Vowel –

Consonant –

Homograph –

Monolingual –

Conversation –

Discussion -

இயல் - 4

Nanotechnology –

Biotechnology –

Ultraviolet rays –

Space Technology –

Cosmic rays –

Infrared rays -

இயல் - 7

Consulate –

Patent –

Document –

Guild –

Irrigation –

Territory -


 

மொழித்திறன் பயிற்சிகள்

( இரண்டு  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

அகராதியில் காண்க

அகராதியில் காண்க

இயல் - 1

அடவி-

அவல் –

சுவல் –

செறு –

பழனம் –

புறவு -

இயல் - 4

அவிர்தல் –

அழல் –

உவா –

கங்குல் –

கனலி -

இயல் - 7

மிரியல் –

வருத்தனை –

அதசி –

துரிஞ்சல் -


 

மொழித்திறன் பயிற்சிகள்

( இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

இவற்றில் சில வினாக்கள் ஐந்து மதிப்பெண்கள் வினாக்களில் கேட்கக்கூடும்

 

இயல் -1

அ ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:- ( 2 மதிப்பெண் )

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

ஆ ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக. ( 2 மதிப்பெண் )

( குவியல், குலை,மந்தை,கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

 

புல்

 

பழம்

 

ஆடு

 

இ ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக ( 2 மதிப்பெண் )

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

ஈ ) தொடர்களில் உள்ள தடித்த அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக. ( 2 மதிப்பெண் )

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

உ ) குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-

( 2 மதிப்பெண் )

        குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

ஊ )எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக. ( 2 மதிப்பெண் )

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

 

 

எறும்புந்தன் கையால் எண் சாண்

 

 

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

 

 

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

 

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணீ

 

 



 

பகுபத உறுப்பிலக்கணம் தருக ( இரண்டு மதிப்பெண் )

புத்தக வினாக்கள்            

 

1.     பொறித்த                 

2.   உரைத்த

3.   மலைந்து

4.   பொழிந்த

5.   கிளர்ந்த

 

சிறு வினா ( மூன்று மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

 

இயல் – 2

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்….. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது.இவ்வாறு ‘ நீர் ‘ தன்னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

2. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

 இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்

 

மனப்பாடப் பகுதி ( மூன்று மதிப்பெண் )

செய்யுள் – அடிபிறழாமல் எழுதுக.

 

அடிபிறழாமல் எழுதுக.

1. “ அன்னை மொழியே “ எனத் தொடங்கி “ பேரரசே “ என முடியும் பாவலரேறுப் பாடலை எழுதுக

1. “ தென்னன் “ எனத் தொடங்கி “ வாழ்த்துவமே “ என முடியும் அன்னை மொழிப் பாடலை எழுதுக.

2. “ சிறுதாம்பு “ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடலை எழுதுக.

2. “ விருந்தினனாக “ எனத் தொடங்கும் காசிக்காண்டப் பாடலை எழுதுக.

3. “ அடியேனே “ என முடியும் பெருமாள் திருமொழிப் பாடலை எழுதுக

3. “ அருளை “ எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடலை எழுதுக.

4. “ என்னா “ என முடியும் திருவிளையாடற்புராணப் பாடலை எழுதுக..

4. “ செங்கீரை “ என முடியும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை எழுதுக

5. “ தண்டலை “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக

5. “ வெய்யோன் “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.

6. “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.

6. “ மாற்றம் “ எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடலை எழுதுக.

 

நெடு வினா ( உரைநடை மற்றும் விரிவானம் நெடு வினா - எட்டு  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

( செய்யுள் நெடுவினா – 5 மதிப்பெண் )

இயல் – 4

1               ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

2             நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….

3             “ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் “ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.

 

 

கடித வினாக்கள் ( ஐந்து  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

 

1 மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

2 உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

3 பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழிநடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்

4 நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘  உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

 

 

நயம் பாராட்டுக ( ஐந்து  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

 

1 தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

  ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

  வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

  தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

          தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே

                                                          கா.நமச்சிவாயர்

2  “ கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

      அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

      உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

     இலையிலிட வெள்ளி எழும் “

                                                காளமேகப் புலவர்

___________________________________________________________________________________

மொழிபெயர்ப்பு ( ஐந்து  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

இயல் - 1

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

இயல் – 2

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

இயல் – 3

Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

 

நிற்க அதற்கு தக( ஐந்து  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

 

இயல் - 1

இன்சொல் வழி

தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

( ஐந்து  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

 

இயல்

காட்சி

இயல்

காட்சி

இயல்

காட்சி

1



4



7




 

பொதுக் கட்டுரை வினாக்கள் ( எட்டு  மதிப்பெண் )

புத்தக வினாக்கள்

1 குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

          இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

2 “ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

3 உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

 

செயல் திட்டத்திலிருந்து இடம் பெறும் வினாக்கள்

 ( இவை 3 மதிப்பெண் வினா வகையிலும், சில கடிதம் எழுதும் போக்கில் 5 மதிப்பெண் வினாவிலும் இடம் பெறலாம் )

____________________________________________________________________

1.      நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவையேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

2.    தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எழுதுக.

3.    உணவு,விருந்து சார்ந்த பழமொழிகளையும், விழிப்புணர்வு தொடர்களையும் எழுதுக.

4.    செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள் சில உலகினில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய குறிப்பு எழுதி வருக.

கற்பவை கற்றப்பின் – வினாக்கள்

( வினாத்தாளில் வினாக்கள் அமையும் விதம் இவ்வினாக்கள் 2,3,5,8 மதிப்பெண் வினாக்களில் கூட இடம் பெறலாம். பள்ளிக்கல்வித் துறை மூலம் வெளியிடப்பட்ட வினாக்களில் இவ்வகை வினாக்கள் இடம் பெற்றுள்ளது. ஆதலால் ஒவ்வொரு பாடத்திலும் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது )

 

இயல் – 1

1. “ நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

   ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

   கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

   இத்திறத்த எட்டுத் தொகை “

          இச்செய்யுளில் இடம் பெற்றுள்ள எட்டுத் தொகை நூல்களைப் பெயர்க் காரணத்துடன் விளக்குக.

2. “ எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு, ஐந்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவதற்கான உரைக் குறிப்பு எழுதுக.

3. பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களை எழுதுக.

          தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம் போக்கு, சுவல், அவல்

4. ஒரு பொருள் தரும் பலச் சொற்கள் சிலவற்றை எழுதுக.

எ.கா: சொல்லுதல் – பேசுதல், விளம்புதல், செப்புதல்,உரைத்தல்,கூறல்,இயம்பல்,மொழிதல்

5. சிலேடைப் பேச்சுகளை தொகுத்து எழுதுக.

6. மொழியின் சிறப்புகளைப் பாடும் கவிதைகளுள் உங்களுக்குப் பிடித்த கவிதையை எழுதுக.

7. உங்கள் நினைவில் நீங்கா இடம் பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக.

எ.கா : உள்ளங்கை நெல்லிக்கனி போல – உவமை

8. கொடுக்கப்பட்டத் தலைப்புகளில்  தமிழ்ச்சொற்களை மட்டும் பயன்படுத்தி வகுப்பறையில் பேசுவதற்கு ஏற்ற உரைக்குறிப்பினை எழுது

தலைப்பு : நேரம்                           தவிர்க்க வேண்டிய சொல் : கடிகாரம்

9. தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்து தொடர்மொழிகளாக்குக.

          தேன், நூல், பை. மலர், வா

10. வினை அடியை விகுதிகளுடன் இணைத்து தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண், சிரி, படி, தடு

எ.கா : காண் – காட்சி, காணுதல், காணல், காணாமை

11. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.

அண்ணன் : எங்கே செல்கிறாய்? ( தொடர்மொழி )

தம்பி : ______ ( தனிமொழி )

அண்ணன் : _______ _______ ( தொடர்மொழி )

தம்பி : ________ ________ ( தொடர்மொழி )

அண்ணன்: __________ ( தனிமொழி )

தம்பி : __________ __________ ( தொடர்மொழி )

அண்ணன் :

தம்பி :

பள்ளிக்கல்வித் துறை மூலம் 2019-  2020 ஆம் கல்வியாண்டில் வெளியிடப்பட்ட ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து தொகுக்கப்பட்ட வினாக்கள்.

_________________________________________________________________________

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

ஒரு மதிப்பெண் வினாக்கள்

மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.

பிரிவு – 1

1.      ‘ காலம் கரந்த பெயரெச்சம்’ என்பது ____________

அ) வினைத்தொகை             ஆ) உம்மைத்தொகை 

இ) பண்புத்தொகை              ஈ) அன்மொழித்தொகை

2.    .எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்_____

அ) எள்கசடு     ஆ) பிண்ணாக்கு                 இ) ஆமணக்கு           ஈ) எள்கட்டி

3.    தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது _________________

அ) தொழிற்பெயர்                 ஆ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்          

இ) முதனிலைத் தொழிற்பெயர் ஈ) வினையாலணையும் பெயர்

4.    ’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும் ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும் ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

5.    கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

அ) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

இ) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

ஈ) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

6.    கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்       ஆ) யோசேப்பு           இ) அருளப்பன்           ஈ) சாந்தா சாகிப்

7.     ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்                   ஆ) கூவிளம் புளிமா நாள்                

இ) தேமா புளிமா காசு                     ஈ) புளிமா தேமா பிறப்பு

8.    சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.

அ) பூஞ்சோலைகள் – அரும்புகள்                  ஆ) மலை – எறும்புகள் – தேன்

இ) பூஞ்சோலையில் – வண்டுகள் – தேன்      ஈ) கானகம் – வண்டுகள் - நீர்

9.    எழுகதிர்,முத்துப்பல் – இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே _______

அ) வினைத்தொகை,பண்புத்தொகை            ஆ) உவமைத்தொகை,வினைத்தொகை

இ) உவமைத்தொகை, வினைத்தொகை        ஈ) வினைத்தொகை, உவமைத்தொகை

10.   சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா   ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா   ஈ) கலிப்பா

 

மாதிரி வினாத்தாள் - தொகுப்பு

( இரண்டு  மதிப்பெண் )

 

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.

பிரிவு – 1

( செய்யுள் ,உரைநடை குறு வினாக்கள் )

1.      ‘ காய்மணி யாகு முன்னர் காய்ந்தெனக் காய்ந்தேன் ‘ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

2.    தமிழ்ச்சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.

3.    நமக்கு உயிர் காற்று

காற்றுக்கு வரம் மரம் – மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – ‘ இது போன்று உலக காற்று நாள் ‘ விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

4.    மெய்கீர்த்திக் குறித்து தாங்கள் அறிந்த இரண்டு கருத்துகளை எழுதுக.

5.    கொடை என்பது ஓர் அறம் என்பதனை ஒளவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

6.    எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன்  கூறிய காரணம் ஒன்றைக் குறிப்பிடுக.

7.     மெய்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?

8.    முல்லை நிலத்திலிருந்தும், மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

9.    மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

10.   ‘ கரம்பிடும்பை இல்லார் ‘ – இத்தொடரின் பொருளை வள்ளுவர் வழி நின்று கூறுக.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1.      தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக் கூறுகளைக் கொண்டுள்ளது.

2.    ஒயிலாட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன,

3.    நாயக்கர் ,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.

4.    அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்சங்கம் ‘ வாழை இலை விருந்து விழாவை ‘ ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது.

ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்

கட்டாய வினா ( திருக்குறள் )

1.      ‘ செயற்கை ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

2.    பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.

3.    மலைமேல்  பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப் போரைக் காணும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

(இலக்கணம் , மொழித்திறன் பயிற்சிகள் )

1.      குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

2.    இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ) தொடு – தோடு     ஆ) மலை – மாலை

      3.  தணிந்தது – பகுபத உறுப்பிலக்கணம் தருக

      4.  புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

      5.     குறிப்பைப் பயன்படுத்தி விடைத் தருக.

          குறிப்பு : எதிர்மறையான சொற்கள்      அ. அருகில் அமர்க                ஆ) மீளாத்துயர்

1.      கலைச்சொல் தருக:-            அ) HOMOGARPH                ஆ) VOVEL

2.    சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன்,மணி,மழை,மேகலை

3.    நாள்காட்டியில் ஞாயிற்றுக் கிழமை இருபதாம் நாள் எனில் அந்த வாரத்தில் புதங்கிழமையும் , சனிக்கிழமையும் எந்த நாள்கலில் வரும் என்பதனை தமிழெண்களில் எழுதுக.

ஞாயிற்றுக்கிழமை     -        20

புதன் கிழமை           -        -----

சனிக்கிழமை           -        ------

4.    தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளிய திருத்தி எழுதுக.

அ) இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை.கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும்.பாதிரிப்பூ குடிநீருக்குத் தண் மணத்தை ஏற்றும்.

ஆ) மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரே தொடராக்குக.

5.    வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

-                   

மாதிரி வினாத்தாள் - தொகுப்பு

( மூன்று  மதிப்பெண் )

 

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

மூன்று மதிப்பெண் வினாக்கள்

-          மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.

பிரிவு – 1

( உரைநடை சிறு வினாக்கள் )

1       சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்கு எடுத்துக்காட்டு தந்து விளக்குக.

2     உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

3     படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து மூன்று குறிப்புகளை எழுதுக

4     சோலைக் ( பூங்கா ) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஒரு சிறு உரையாடல் அமைக்க.

5     காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்துகள் மூன்றினை எழுதுக.

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

 

1.      தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

 

அ) ஆவூர் மூழங்கிழாரின் போர் அறம் யாது?

ஆ) போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

இ) யாருக்கெல்லாம் தீங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும்

 

2.    சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன,

 

அ) பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?

ஆ) நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ) நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?

பிரிவு – 2

( செய்யுள் சிறு வினாக்கள் )

1.      தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவனவற்றைச் சுருக்கமாக எழுதுக.

2.    கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

3.    வைத்தியநாதபுரி முருகன்,அணிந்திருக்கும் அணிகலன்களுடன் குழந்தையாகச் செங்கீரை ஆடிய நயத்தினை விளக்குக.

4.    வாளித்தண்ணீர்,சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புப்படுத்தி சிறு பத்தி ஒன்று அமைக்க.

5.    மன்னன், இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?

6.    முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.பா.ரா “ ஏர் புதிதா?” கவிதையில் கவி பாடுகிறார்?

கட்டாய வினா

1.      “ தூசும் துகிரும் ஆரமும் அகிலும் “ – எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக

2.    “ அன்னை மொழியே “ எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக

3.    “ அன்னை மொழியே “ எனத் தொடங்கி ‘ பேரரசே ‘ என முடியும் அன்னை மொழியே பாடலை எழுதுக.

4.    ‘ மாற்றம் எனது மானிடத் தத்துவம் ‘ எனத் தொடங்கி ‘ தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!’ என முடியும் காலக் கணிதப் பாடலை எழுதுக.

5.    “ ஒலித்து அழுவ போன்றே “ – என முடியும் தேம்பாவணிப் பாடலை எழுதுக.

பிரிவு – 3

( இலக்கண சிறு வினாக்கள் )

1.      தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

2.    தீவக அணியை விளக்கி, மூவகை தீவக அணிகளையும் குறிப்பிடுக.

3.    கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை விளக்குக.

4.    கண்ணே கண்ணுறங்கு!

  காலையில் நீயெழும்பு!

  மாமழை பெய்கையிலே

  மாம்பூவே கண்ணுறங்கு!

  பாடினேன் தாலாட்டு!

  ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

4     தன்மையணி என்பதனை விளக்கி, அதன் வகைகளை குறிப்பிடுக.

அலகிட்டு வாய்பாடு காண்க.

நேர்

நிரை

1. குறில் தனித்து

1. இரு குறில் இணைந்து

2.. குறில் ஒற்று இணைந்து

2. இரு குறில் ஒற்று இணைந்து

3. நெடில் தனித்து

3. குறில் நெடில் இணைந்து

4. நெடில் ஒற்று இணைந்து

4. குறில் நெடில்ஒற்று இணைந்து

 

ஓரசைச்சீர்

ஈரசைச் சீர்

மூவசைச் சீர்

நேர் - நாள்

நேர் – நேர் - தேமா

நேர் – நேர் - நேர்  - தேமாங்காய்

நேர் – நேர் - நிரை  - தேமாங்கனி

நிரை - மலர்

நிரை – நேர் - புளிமா

நிரை – நேர் -நேர் – புளிமாங்காய்

நிரை – நேர் -நிரை – புளிமாங்கனி

நேர்பு - காசு

நிரை – நிரை – கருவிளம்

நிரை – நிரை –  நேர் -கருவிளங்காய்

நிரை – நிரை –  நிரை -கருவிளங்கனி

நிரைபு – பிறப்பு

நேர் – நிரை – கூவிளம்

நேர்–நிரை– நேர் -கூவிளங்காய்

நேர்–நிரை–நிரை -கூவிளங்கனி

எ.கா : உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்

          கல்லார் அறிவிலா தார்

 

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

உல – கத் - தோ

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

2

டொட் - ட

நேர் – நேர்

தேமா

3

வொழு - கல்

நிரை - நேர்

புளிமா

4

பல – கற் - றும்

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

5

கல் -லார்

நேர் - நேர்

தேமா

6

அறி - விலா

நிரை - நிரை

கருவிளம்

7

தார்

நேர்

நாள்

இக்குறள் “ நாள் “ எனும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

குறிப்பு : திருக்குறளில் 4 அசை சீர்கள் வராது.

          திருக்க்குறளில் மூவசைச்சீரில் காய் சீர் மட்டுமே வரும். கனிச்சீர் வராது.

          திருக்குறளில் ஓரசைச்சீர் இறுதி சீரில் மட்டுமே வரும்.

1.      பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

2.    உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

3.    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்

( பாடப்பகுதியில் உள்ள அனைத்து திருக்குறளுக்கும் பயிற்சி மேற்கொள்வது சாலச்சிறந்தது )

மாதிரி வினாத்தாள் - தொகுப்பு

( ஐந்து  மதிப்பெண் )

 

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

ஐந்து மதிப்பெண் வினாக்கள்

-          மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்.

( செய்யுள் நெடு வினாக்கள் )

வினா எண் : 38

1       நதியின் பிழையன்று

நறும்புனலின்மை அன்றே

          பதியின் பிழையன்று

                   பயந்த நம்மைப் புரந்தான்

          மதியின் பிழையன்று

                   மகன் பிழையன்று மைந்த

          விதியின் பிழை நீ

                   இதற்கென்னை வெகுண்டதென்றன்             - கம்பன்

 

          நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

          நதிசெய்த குற்றம் இல்லை

          விதிசெய்த குற்றம் இன்றி

          வேறு – யாரம்மா !                                             - கண்ணதாசன்

          கவிச் சக்கரவர்த்தியின் கவிதையையும், கவியரசின் கவிதையையும் ஒப்பிட்டுக் கருத்துகளை எழுதுக.

2     சிலப்பதிகார மருவூர்ப் பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

3     இறைவன்,புலவர் இடைக்காடனார் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

4     முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை அழகுற விவரிக்க.

5     ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது.அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

கடித வினா

வினா எண் : 39

உறவு முறைக் கடிதம்

 

1       ஓட்டுநர்  உரிமம் பெற்றுள்ள உறவினருக்கு, முக்கியச் சாலை விதிகளை விளக்கி,அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்திக் கடிதம் ஒன்று எழுதுக.

2     ‘ மரம் இயற்கையின் வரம் ‘ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

3     நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி,உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.

கடித வினா

வினா எண் : 39

விண்ணப்பக் கடிதம்

1.      உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

2.    உங்கள் தெருவில் பழுதடியந்துள்ள மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகளைப் பொருத்துமாறு மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

3.    நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

4.    “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “  - குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி,அதனைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக/நயமிகுத் தொடர்களில் எழுதுக

வினா எண் : 40









படிவங்கள்

வினா எண் : 41

1.      கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்க.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவம்

2.    மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவம்

3.    நூலக உறுப்பினர் படிவம்

நிற்க அதற்குத் தக/மொழிப்பெயர்ப்பு

வினா எண் : 40

1.      நம் பழம்பெருமையையும்,வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்களான கல்வெட்டுகள்,கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் காணப்படும். அவற்றைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற ஐந்து செயல்களைப் பட்டியலிடுக.

2.       The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

3.    இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்கும் நிலையில், நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.

 

மாதிரி வினாத்தாள் - தொகுப்பு

( எட்டு  மதிப்பெண் )

 

பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019-  2020

எட்டு மதிப்பெண் வினாக்கள்

-          மீத்திற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கொடுத்து பொதுத் தேர்வுக்கு அவர்களை ஆயத்தப்படுத்த ஏதுவாக இருக்கும்..

( உரை நெடு வினாக்கள் )

வினா எண் : 43

1.      நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

2.    வீட்டில் திண்ணை அமைத்த காரணம்,விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.

3.    ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா?வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் ‘ பற்றி விவரித்து எழுதுக.

( விரிவான நெடு வினாக்கள் )

வினா எண் : 44

1.      குறிப்புகளைக் கொண்டு நாடகம் ஒன்றை எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும். கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி

2.    நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா:

இடம் : பள்ளிக் கலையரங்கம்                                                     நாள் : 08-03-2019

 

                   கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – சிறப்பு விருந்தினர் இதழாளர் – கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத்தலைவரின் நன்றியுரை.

 பொதுக் கட்டுரை

வினா எண் : 45

 

1.  குமரிக் கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து , அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

2. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொது வாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மக்கத்தான பணி – முடிவுரை

1.      குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

முன்னுரை – மனித வாழ்வு அறம் சார்ந்தது – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம் - முடிவுரை

2.    நீங்கள் சென்று வந்த அரசு பொருட்காட்சியில் அறிவிப்பு – அமைப்பு – சிறு அங்காடிகள் – நிகழ்த்தப்பட்ட கலைகள் – பேச்சரங்கம் – அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு கட்டுரை எழுதுக.

 

 அலகுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்கள்

                                               

  வகுப்பு : 10                                                                                  அலகு : இயல் -1

பாடம்    : தமிழ்                                                                             மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                            6×1=6

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

) இலையும்,சருகும்   ) தோகையும் சண்டும்   ) தாளும் ஓலையும்   ) சருகும் சண்டும்

2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

) எந் + தமிழ் + நா     ) எந்த + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா          ) எந்தம் + தமிழ் + நா

3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________

) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ)கேட்டவர்;பாடிய         ) பாடல்;கேட்டவர்

4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________

)குலைவகை       ) மணிவகை   )கொழுந்துவகை ஈ) இலை வகை

5.சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……                                                          

)பாரதியார்  )ஜி.யு.போப்      ).சச்சிதானந்தன்      )பாவலரேறு

6. ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ----

அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ. பெரும் வணிகமும் பெரும் கலன்களும்     

இ. ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ. வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்                                                          

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                4×1=4

. ‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

 மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “

7.             இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. நற்றிணை           ஆ. முல்லைப்பாட்டு     இ. குறுந்தொகை        ஈ.தனிப்பாடல் திரட்டு

8.            பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி

அ. இரட்டுற மொழிதல் அணி    ஆ, தீவக அணி   இ. வஞ்சப்புகழ்ச்சி அணி       ஈ. நிரல் நிறை அணி

9.            தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது

அ. சங்கப் பலகை       ஆ. கடல்         இ. அணிகலன்          ஈ. புலவர்கள்

10.           தொழிற்பெயர் அல்லாத சொல்

அ. துய்ப்பதால்            ஆ. அணிகலன்          இ. மேவலால்            ஈ. கண்டதால்

III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                  3×2=6

11. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. தமிழுக்கு கருவூலமாய் விளங்குவது பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை என்னும் நூல்.

ஆ. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியவர் தேவநேய பாவாணர்

12. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

  முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

13. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                  4×2=8

14. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

15. கலைச்சொல் தருக:- அ. HOMOGRAPH      ஆ. VOWEL

16. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

17. மொழி பெயர்ப்பு:-

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                                          2×3=6

   பிரிவு -1

18.” புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது” – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி அருகில் அல்லூரில் “ திருவள்ளுவர் தவச்சாலை “ அமைத்தார். அவர் விழிகளை இழக்க நேரிட்டாலும் தாய்த் தமிழை இழந்து விடக்கூடாது என்பதற்காக திரு.வி.க-வை போல் இமை மூடிய படி எழுதுவும் ஆற்றலைக் கற்றுக் கொண்டார்.இவர் பற்பல நூல்கள் எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம்,தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு,குண்டலகேசி உரை,யாப்பருங்கலம் உரை,புறத்திரட்டு உரை,காக்கைப்பாடினிய உரை,திருக்குறள் தமிழ் மரபுரை,தேவநேயம் முதலியன இவரின் தமிழ்பணியை தரமுயர்த்திய நல்முத்துகள்.

அ. தாய்த்தமிழை இழக்கக் கூடாது என்பதற்காக இளங்குமரனார் செய்த செயல் யாது?

ஆ. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியை தரமுயர்த்திய நூல்கள் யாவை?

இ. திருவள்ளுவர் தவச்சாலையை இளங்குமரனார் எங்கு நிறுவினார்?

20. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                                            2×3=6

வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

21. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?

22.”அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது, புரிந்தது,புரியாதது,பிறந்தது,பிறவாதது” இவை அனைத்து யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்கு தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றில் தடித்த எழுத்துகளில் இருக்கும் வினைமுற்றுகளை தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

23. “ அன்னை மொழியே “ பாடலை அடிமாறாமல் எழுதுக.

VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                                         1×4=4

24. . அ.) நயம் பாராட்டுக:-                                                     

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

          தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ் மொழியே

                                                கா.நமச்சிவாயர்

( அல்லது )

ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

 

 

 

 

 

 


VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                                            2×5=10

25.அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை ஒரு பக்க அளவில் எழுதுக.

 (அல்லது )

ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தினையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சினை ஒன்றினை உருவாக்குக.

26. அ)  சான்றோர் வளர்த்த தமிழ் எனும் தலைப்பில் ஒரு பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை எழுதுக.

( அல்லது )

     ஆ.) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்

 

வகுப்பு : 10                             இரண்டாம் இடைப் பருவத் தேர்வு             அலகு : இயல் 4,5,6

பாடம்    : தமிழ்                                                                             மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                            5×1=5

1. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                            ஆ) சீலா                   இ) குலா                            ஈ) இலா

2 இது செய்வாயா? என்ற வினாவிற்கு நீயே செய் எனக் கூறும் விடை________

அ) மறை விடை                   ஆ) ஏவல் விடை         இ) நேர் விடை                    ஈ) சுட்டு விடை

3. இடையில் அணியக் கூடிய அணிகலன் ___________

அ) சுட்டி                            ஆ) சிலம்பு                இ) சூழி                            ஈ) அரைநாண்

4. கலவைச் சொற்றொடரைக் காண்க:-

கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்___________

அ) கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால் கூடியிருந்த மக்கள் அமைதியாயிரார்.

ஆ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

இ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார் என்பதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

ஈ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி கூட்டத்திலிருட்ந்தவர்களை அமைதிப்படுத்தி  வைத்தார்.

5. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?

அ) பெரிய கத்தி          ஆ) இரும்பு ஈட்டி        இ) உழைத்ததால் கிடைத்த ஊதியம்   ஈ) வில்லும் அம்பும்                                                     

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                                            3×1=3

“ ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?

வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?

தோழமை என்று அவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ?

“ ஏழைமை வேடன் இறந்திலன் “ என்று எனை ஏசாரோ?                                                             

.6 இப்பாடல் இடம் பெற்ற நூல் ___________

அ. முல்லைப்பாட்டு     ஆ. கம்பராமாயணம்    இ. காசிக்காண்டம்               ஈ. மலைபடுகடாம்

7. இலக்கணக் குறிப்பு தருக:- நெடுந்திரை

அ. வினைத்தொகை    ஆ. பண்புத்தொகை     இ. தொழிற்பெயர்                 ஈ. அன்மொழித்தொகை

8. “ வேடன் “ என்பது இங்கு யாரை குறிக்கிறது?

அ. கம்பர்                  ஆ. இராமன்              இ. இலக்குவன்                   ஈ. குகன்

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:-                                                      3×2=6

( வினா எண் : 12 கட்டாயமாக விடையளிக்க வேண்டும் )

9. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. கரகாட்டத்தின் துணையாட்டமாக மயிலாட்டம் கருதப்படுகிறது.

ஆ. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர்.

10. மருத்துவத்தில் மருந்துடன் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

11. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

  சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

12. ‘செயற்கை ‘ எனத் தொடங்கும் குறளை எழுதுக.

IV) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-                                                                 3×2=6

13. இன்னாசிரியர் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்.அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார்.புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். – இத்தொடரை தொடர் சொற்றொடராக மாற்றுக.

14. கலைச்சொல் தருக:- அ. SYMBOLISM                 ஆ. BIOTECHNOLOGY

15. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன். – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

16. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

 

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                                                  2×3=6

( வினா எண் – 19 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )

பிரிவு -1

17. உங்களுடன் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

18.வைத்தியபுரிநாத முருகன்  குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

19. “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்

                                      ( அல்லது )

  “ வெய்யோன் “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                                           2×3=6

19. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

20. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

     புல்லார் புரள விடல் – அலகிட்டு வாய்பாடு காண்க.

21. வினாவின் வகைகளையும், விடையின் வகைகளையும் கூறுக.

VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                                     2×4=8

22. அ) “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ – குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த தலைமை ஆசிரியருக்கு ஒப்புதல் பெற வேண்டி கடிதம் எழுதுக.

(அல்லது )

ஆ. புதிதாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசிப் பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக

23 அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

 

( அல்லது )

ஆ)  அறிவழகனின்  23 வயது மகன் அன்பழகன், இளங்கலை தமிழ் படித்து போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக 50, பாரதியார் தெரு, வ.உசி,].நகர்,சேலம் மாவட்டம் -636006 என்ற முகவரியில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர  விரும்புகிறார்..  தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.

VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                                        2×5=10

24.அ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை

          மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

(அல்லது)

ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

 

25. அ) “ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் “ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக

(அல்லது)

ஆ)‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

  • காலாண்டுத் தேர்வு
  • அரையாண்டுத் தேர்வு
  • மூன்று திருப்புதல்த் தேர்வு
  • மூன்று அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்
  • மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள்
  • படிவங்கள்









Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post