ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு போதிக்கும் தமிழ் ஆசிரியர்கள் எதிர் வரும் பொதுத் தேர்வில் தமது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். உங்களின் முயற்சிக்கு தமிழ் விதை எப்போதும் ஒரு ஊன்றுகோலாக உதவி புரியும். தற்போது மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சி பெற ஏதுவாக காட்சியைக் கண்டு கவினுற எழுதுக என்ற பகுதிக்கான அனைத்து பாடங்களுக்குமான படங்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தத்தம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சியினை மேற்கொள்ளவும் என அன்போடு வேண்டுகிறேன்.
எந்த படம் கொடுத்தாலும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எந்த பாடங்கள் கொடுத்தாலும் இந்த கவிதையை எழுத வையுங்கள். ( இது தமிழ்விதையின் ஒரு முயற்சி,ஆசிரியர்கள் வேறு மாதிரியான கவிதை வடிவம் வைத்திருந்தால் அதனை பகிரும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)