SALEM DT - 12TH REVISION EXAM - QUESTION - TAMIL

  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். சேலம் மாவட்டத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு முன் ஆயத்த திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு.மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு 35 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் சேலம் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆயத்தத் திருப்புதல் தேர்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. நமது www.tamilvithai.com என்ற வலைதளத்தில் அந்த வினாத்தாள்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்கயுள்ள நிலையில் இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த தேர்வு பள்ளிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. கீழ்க்காணும் வகுப்புகளின் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் அந்தந்த வகுப்புகளுக்கான வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

சேலம் மாவட்ட ஆயத்த திருப்புதல் தேர்வு-2022

பொதுத்தமிழ்

12-ஆம் வகுப்பு                                                                                                  காலம்: 1.00 மணி.                                   மதிப்பெண்:35

பகுதி-I

I) ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் சேர்த்து எழுதுக.                                       5×1=5

1.”ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்”- பயின்று வரும் நூல்

அ)சிந்தாமணி                ஆ)கொன்றை வேந்தன்                இ)நன்னூல்                    ஈ)தமிழ்விடு தூது

2. காய்முன் நேர் வருவது

அ) நிறையொன்றா ஆசிரியத்தளை          ) நேரொன்றா ஆசிரியத்தளை

 )இயற்சீர் வெண்டளை                          ஈ) வெண்சீர் வெண்டளை

3. மாமயிலை-என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) உரிச்சொற்றொடர்                 ஆ)அடுக்குத்தொடர்        இ) பெயரெச்சம்               ஈ) வினைத்தொகை

4.பொருத்துக.

அ) ஆமந்திரிகை – 1) பட்டத்து யானை

ஆ) அரசு உவா  – 2) மூங்கில்

இ) கழஞ்சு      – 3) இடக்கை வாத்தியம்

ஈ) கழை        – 4) எடை அளவு

அ) 3412 ஆ) 2143 இ) 1234 ஈ) 3142

5. திண்ணியர் என்பதன் பொருள்

அ) அறிவுடையவர்                      ஆ)மன உறுதியுடையவர் இ) தீக்காய்வார்             ஈ) அறிவினார்.

பகுதி-II

பிரிவு-1

II) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.                                                                  2×2=4

6.அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

7.கலிவிழா, ஒலிவிழா – விளக்கம் தருக.

8. யாழின் வகைகளை எழுதுக.

பிரிவு-2

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                                                     3×2=6

9. பகுபத உறுப்பிலக்கணம் தருக. பேசுவார்

10.தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.                     

அ) நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது

ஆ) இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.

11.பொருள் வேறுபாடு அறிந்து ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ)உழை-உளை                        ஆ) தின்மை-திண்மை

12. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

அ)நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.

ஆ)புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது.

பகுதி-III

IV) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.                                                                   2×4=8

13. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

14. மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் எவ்வாறு வைக்கப்பட்டது?

15. தொழில்  உவமையணியைச் சான்றுடன் விளக்குக

16. பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.  யானைக்கும் அடி சறுக்கும் (அல்லது) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

பகுதி-IV

V) நெடுவினா                                                                                                                            1×6=6

17.பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுது.

(அல்லது)

மகா நடிகரை கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக

பகுதி-V

18. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக.                                                                      4+2=6

) விண்வேறு; விண்வெளியில்….. எனத் தொடங்கும் இதில் வெற்றி பெற' பாடல்

ஆ)நோய்’ - என முடியும் குறளை எழுதுக

பனிரெண்டாம் வகுப்பு 

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post