SALEM DT - 11TH REVISION QUESTIONS - TAMIL

  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். சேலம் மாவட்டத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு முன் ஆயத்த திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு.மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு 35 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் சேலம் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆயத்தத் திருப்புதல் தேர்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. நமது www.tamilvithai.com என்ற வலைதளத்தில் அந்த வினாத்தாள்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்கயுள்ள நிலையில் இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த தேர்வு பள்ளிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. கீழ்க்காணும் வகுப்புகளின் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் அந்தந்த வகுப்புகளுக்கான வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

              ஆயத்த திருப்புதல் தேர்வு-2022

            பொதுத்தமிழ்

11-ஆம் வகுப்பு                                                      காலம்: 1.00 மணி.                                   மதிப்பெண்:35

பகுதி-I ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் சேர்த்து எழுதுக.                                                5×1=5

1. “வான் பொய்த்தது“ – என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள்  அ) வானம் இடிந்தது ஆ) மழை பெய்யவில்லை இ) மின்னல் வெட்டியது ஈ) வானம் என்பது பொய்யானது.

2.ஒப்புரவு என்பதன் பொருள் _________  அ) அடக்கமுடையது        ஆ) பண்புடையது இ) ஊருக்கு உதவுவது ஈ) செல்வமுடையது

3.பொருத்துக.                                                      அ) யானை டாக்டர்  – 1) இந்திரன்                                  ஆ) யுகத்தின் பாடல்  – 2) சி.சு.செல்லப்பா                            இ) பேச்சு மொழியும் கவிதை மொழியும்      – 3) சு.வில்வரத்தினம்   ஈ) வாடிவாசல்        – 4) ஜெய மோகன்                           அ) 4312 ஆ) 1243 இ) 4321 ஈ) 2413

4.தவறான இணையைத் தேர்வு செய்க.               அ)மொழி+ஆளுமை உயிர்+உயிர்  ஆ) தமிழ்+உணர்வு மெய் + உயிர் இ)கடல் + அலை உயிர் + மெய்  ஈ) மண் + வளம் மெய் + மெய்

5. அகிற்புகை என்பதன் இலக்கணக்குறிப்பு                         அ) பண்புத்தொகை        ஆ) உவமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) ஆறாம் வேற்றுமைத்தொகை

பகுதி-II – பிரிவு-1 எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.                                                                  2×2=4

6.இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

7.வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்                  மாடம் எங்கும் அகிற்புகை நாறும் அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?                                                 8. “கோட்டை“ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

பிரிவு-2 எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக3×2=6

9 புணர்ச்சி விதி தருக. செங்கயல்

10. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக                     அ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது           ஆ) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.

11.மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?

12.பொருள் வேறுபாடு அறிந்து ஒரே தொடரில் அமைத்து எழுதுக. அ)வலி-வளி-வழி ஆ) குரை-குறை

13. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.                   அ) கால்நடை ஆ) வைகை

 பகுதி-III எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. 2×4=8

14. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?

15.‘மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது‘ என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

16.சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக.

17. தமிழாக்கம் தருக 1)Culture does not make people. People make culture. 2)Look deep into nature and then you will understand everything better  3)The Pen is mightier than the Sword. 4)Work while you work and play while you play.

                 பகுதி-IV- நெடுவினா                             1×6=6

18. அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க (அல்லது)                                     ஆ) பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?

பகுதி-V 18. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக.            4+2=6

) உண்டால் அம்ம….. எனத் தொடங்கும்  புறநானூற்றுப் பாடல்

ஆ)நன்று’ - என முடியும் குறளை எழுதுக

 

பதினொன்றாம் வகுப்பு 

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post