10TH - TAMIL - MARCH - WEEK 3 - QUESTION PAPER

 

மாதம் : மார்ச்                                                      வாரம் : மூன்றாம் வாரம்   

வகுப்பு : 10                                                              இயல் : 06

பாடம் : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                        3× 1= 3

1. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரைக்குமான சிறுபொழுது_______________

) எற்பாடு                             ) நண்பகல்           ) வைகறை           ) யாமம்

2. ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா என கூறுபவர்____________

) ஓளவையார்      ) பாரதியார்       ) கம்பர்                 )  திருவள்ளுவர்

3.திருவழுந்துர் என்பது எந்த நாட்டின் பகுதியாக இருந்தது?

) சோழ நாடு                       ) சேர நாடு          )  பாண்டிய நாடு  ) பல்லவ நாடு

II). அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                    5× 2= 10

1. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?

2. பெரும்பொழுதுகள் யாவை?

3. தொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக,

அ. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது ( தனிச் சொற்றொடராக மாற்றுக,)

ஆ. இன்னாசிரியர் புத்தகங்களை  வரிசைப்படுத்தினார்.அவற்றை புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். ( தொடர் சொற்றொடராக மாற்றுக )

4. பொருத்தமான விடையை எழுதுக.

அ. காலை ஒளியினில் மலரிதழ் ______; சோலைப் பூவினில் வண்டினம் _______

ஆ. வாழ்க்கையில் _____ மீண்டும் வெல்லும்,இதை தத்துவமாய் ______ கூத்து சொல்லும்

5. கலைச்சொல் அறிக:-     அ. MYTH                 ஆ. ARTIFACTS

III) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                               3× 3= 9

1. திணைகளுக்கான பொழுதுகளை அட்டவணைப்படுத்துக.

2.வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக

3. சரயு ஆறு எவ்வாறு பாய்வதாக கம்பர் விவரிக்கிறார்?

IV). மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                 1× 3= 3

1. இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியை கம்பர் வர்ணிக்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

V) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                              3× 5= 15

1. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

2. ஈரோடு மாவட்த்தில் பாரதி நகர், காந்தி தெரு ,கதவிலக்க எண் 50 இல் வசிக்கும் இளமாறனின் மகன் வசந்த பாலன்  பத்தாம் வகுப்பு முடித்து அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி  ஆங்கில வழிப் பாடப்பிரிவினைத் தேர்ந்தெடுத்துப் பயில விரும்புகிறார். தேர்வர் தம்மை வசந்த பாலனாக நினைத்துக் கொண்டு உரிய படிவம் நிரப்புக.                                                

3. திருக்குறளில் பொருள் செயல்வகை அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளை தொகுத்து எழுதுக.

CLICK HERE TO PDF

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post