SALEM DT - 10TH REVISION - QUESTION - TAMIL

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். சேலம் மாவட்டத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு முன் ஆயத்த திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு.மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு 35 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் சேலம் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆயத்தத் திருப்புதல் தேர்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. நமது www.tamilvithai.com என்ற வலைதளத்தில் அந்த வினாத்தாள்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்கயுள்ள நிலையில் இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த தேர்வு பள்ளிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. கீழ்க்காணும் வகுப்புகளின் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் அந்தந்த வகுப்புகளுக்கான வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

சேலம் மாவட்ட ஆயத்த திருப்புதல் தேர்வு-2022

தமிழ்

10-ஆம் வகுப்பு                                                                                                  காலம்: 1.00 மணி.                                   மதிப்பெண்:35

பகுதி-I

I) ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் சேர்த்து எழுதுக.                                       6×1=6

1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

) குலசேகராழ்வாரிடம் இறைவன்           ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்          

) மருத்துவரிடம் நோயாளி        ) நோயாளியிடம் மருத்துவர்

2. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

) அருமை + துணை                 ) அரு + துணை                      ) அருமை + இணை      ஈ) அரு + இணை

3.விதைக்கு தேவை எரு எனில்,கதைக்குத் தேவை ___________.                                                     

அ) கற்றல்                             ஆ) கரு                         இ) சோறு                ஈ) எழுத்து                        

4. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது _______________.              

அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்                  ஆ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்     

இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்       ஈ) கொண்டுக் கூட்டுப் பொருள்கோள்

5.குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்_______________

)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்                      ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்      

) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்                ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

6. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

    தியற்கை அறிந்து _________

அ) பொருள்                   ஆ) செயல்                      இ) விடல்                       ஈ) உலகு

பகுதி-2

II) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக. (13வது வினா கட்டாய வினா)                            5×2=10

7. மருத்துவத்தில் மருந்துடன் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

8. . “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.                                          

9. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

10. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!

மின்சாரம் இருக்கிறதா?இல்லையாமேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

11. உறங்குகின்ற கும்பகன்னஎழுந்திராய் எழுந்திராய்

   காலதூதர் கையிலேஉறங்குவாய் உறங்குவாய்

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

12.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்

13. “ உலகு “ – என முடியும் திருக்குறளை எழுதுக.

14. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துக் கொண்டு தொடர்களை முழுமை செய்க.

அ)  காட்டு விலங்குகளைச் ____ சுடுதல் ____தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் _______ சுட்டல் ____திருத்த உதவுகிறது.(  சுட்டல்,சுடுதல் )

ஆ) பசுமையான ____ காட்சி ___ஐக்____ காணுதல் ______ கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)

பகுதி-3

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                                                     3×3=9

( 18 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும் )

15. மாளாத காதல் நோயாளன் போல்என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

16. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.-இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

17.“ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

18. ‘ வாளால் அறுத்து ….’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை எழுதுக.

( அல்லது )

‘ அருளைப் பெருக்கி…..’ எனத் தொடங்கும் நீதி வெண்பா பாடலை எழுதுக.

19. .  வள்ளுவம், சிறந்த அமைச்சருக்கு கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

பகுதி-4

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                               2×5=10

20. கம்பராமாயணம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக

( அல்லது )

வினா வகை,விடை வகைகளை – விளக்குக

21. ‘ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் ‘ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

( அல்லது )

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வினைக் கட்டுரையாக்குக.

பத்தாம் வகுப்பு

CLICK HERE


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post