இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
குறைக்கப்பட்ட
தமிழ்
பாடத்திற்கான
வழிகாட்டி
மெல்ல கற்போர்
சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 4
நான்காம் தமிழ்
அ) பலவுள் தெரிக:-
1. “
உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி
ஈ) நோயாளியிடம் மருத்துவர்
2. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி,திணை
வழுவமைதி ஆ) இட வழுவமைதி, மரபு
வழுவமைதி இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
ஆ) குறு வினா
1. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்
மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு
எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
உறுதித்தன்மை
நோக்கி சொல்லப்பட்டதால் கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
மருத்துவர்
கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.
3. “
சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக்
கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக்
கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.
ஈ) சிறு வினா
1. மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
மருத்துவர்
கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே
எதிர்பார்த்து வாழ்கிறேன்.
2. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள
வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக
குட்டி |
மரபு
வழுவமைதி |
இலச்சுமி
கூப்பிடுகிறாள் |
திணை
வழுவமைதி |
இதோ
சென்றுவிட்டேன் |
கால
வழுவமைதி |
என்னடா
விளையாட வேண்டுமா? |
திணை
வழுவமைதி |
நீயும்
இவனும் விளையாடுங்கள் |
திணை
வழுவமைதி |
நீரைக்
குடித்தாள் |
திணை
வழுவமைதி |
அவனை |
திணை
வழுவமைதி |
மொழியை ஆள்வோம் - 1
அ) மொழிபெயர்க்க:-
Malar: Devi,switch off the lights
when you leave the room
Devi : Yeah! We have to save
electricity
Malar : Our nation spends a lot of
electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our
country may launch artificial moons to light our night time sky!
Malar: I have read some other
countries are going to launch these types of illumination satellites near
future.
Devi: Superb news! If we launch
artificial moons,they can assist in disaster relief by beaming light on areas
that lost power!
மலர்: தேவி,அறையை விட்டு
வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.
தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை
சேமிக்க வேண்டும்.
மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச் செலவிடுகிறது.
தேவி: யாருக்குத் தெரியும்? நம்நாடு எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவுகளையும் செலுத்தலாம்.
மலர்: நான் படித்திருக்கிறேன். வருங்காலத்தில் சில நாடுகள் இதைப் போன்ற செயற்கைக் கோள்களை ஏவ
இருக்கின்றனர் எனப் படித்து இருக்கிறே
தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவுகளை ஏவினால்,இயற்கைப் பேரழிவின் போது மிந்தடை
ஏற்படக்கூடிய இடங்களில் ஒளியைப் ஏற்படுத்தித் தர இயலும்.
2. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:-
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது
கேட்குமா?
காகத்திற்குக் காது உண்டா? அதற்கு காதுக்
கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.
பறவைகளுக்குப் பார்த்தல்,கேட்டல் உணர்வு
நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு
குறைவாகவும், நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.
ஆ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-
அ) இயற்கை – செயற்கை |
இயற்கைக் காடுகளில் செல்ல செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன. |
ஆ) கொடு - கோடு |
கொடுப்பதற்குக் கோடு இடக் கூடாது |
இ) கொள் - கோள் |
கோள்களை அறிந்து கொள் என ஆசிரியர் கூறினார். |
ஈ) சிறு - சீறு |
சிறு பூனையும் சீறும் |
உ) தான் - தாம் |
தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும் |
ஊ) விதி - வீதி |
விதி அவனை வீதியில் கொண்டு வந்து சேர்த்தது. |
மொழியை ஆள்வோம் - 2
அ) பத்தியைப் படித்துப் பதில் தருக:-
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப்
பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
மீண்டும் மீண்டும்
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பெய்மழை
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
நீருக்கும் ஆற்றல் உண்டு.
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு
2. நயம் பாராட்டுக:-
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? -
பாரதியார்
திரண்ட கருத்து:
Ø நிலவையும்,நட்சத்திரங்களையும்
வரிசையாக வைப்போம்.
Ø அமுத குழம்பினைக் குடிப்போம்.
Ø பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்.
Ø பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையைக் கேட்போம்.
மையக் கருத்து:
Ø
நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த
பலாவினை சுவைத்து இன்பம் பெறுவோம்.
மோனை:
முதலெழுத்து ஒன்றி வருவது மோனை
நிலாவையும் – நேர்ப்பட
எதுகை :
முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது
எதுகை.
நிலாவையும் - குலாவும்
இயைபு :
செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருவது.
வெறிபடைத்தோம் - மகிழ்ந்திடுவோம்
அணி நயம்:
இப்பாடலில் மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால்
இதில் உருவக அணி வந்துள்ளது.
தலைப்பு:
இயற்கை இன்பம்
மொழியோடு விளையாடு
அ) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-
1. நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____கற்றல்___
2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை_____கரு__
3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______சோறு____ ஆகும்.
4.குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து _____எழுத்து____
5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________பூவில்________
2. குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:-
குறிப்பு – எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர் |
மீண்ட இன்பம் |
கொடுத்துச் சிவந்த |
கொடுக்காது கருத்த |
மறைத்துக் காட்டு |
விரித்து மூடு |
அருகில் அமர்க |
தொலைவில் நிற்க |
பெரியவரின் அமைதி |
சிறியவரின் கூச்சல் |
புயலுக்குப் பின் |
மழைக்கு முன் |