நாள் : 07-02-2022 முதல் 12-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு
2. சீவக சிந்தாமணி
கரு பொருள்:
·
விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல்
·
இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை
வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
உட்பொருள்:
Ø இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்ட
அமைப்பின் நோக்கம் அறிதல்.
Ø இந்திய தேசிய இராணுவத்தில்
தமிழர் பங்கு அறிதல்
Ø சீவக சிந்தாமணி பற்றிய குறிப்பு
அறிதல்
Ø சீவக சிந்தாமணி காட்டும்
ஏமாங்கத நாட்டின் வளம் அறிதல்
கற்றல் விளைவுகள் :
Ø
விடுதலைப்
போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல்.
Ø
இலக்கியங்கள்
காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப்
பெறுதல்
Ø
நேதாஜியின்
வீரச்செயல்களை போற்றுதல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø நமது இந்திய இராணுவப்
படையில் உங்களது தெரிந்த யாராவது இருக்கிறார்களா? நமது இந்திய இராணுவப் படையில் சேர்வதற்கான
தகுதிகள் யாவை? என்பன போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை அறிமுகம் செய்தல்
Ø உங்கள் ஊரில் காணப்படும் சுற்றுலாப்
பகுதிகள் யாவை? அங்கு சென்றுள்ளீர்களா? என்பன போன்ற வினாக்கள கேட்டு வினாக்கள் கேட்டு
பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள்
சுருக்கம்:
இந்திய
தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு
·
மோகன் சிங் என்பவர் தலைமையில் 1942 பிப்ரவரி 15 ஆம் நாள் இந்திய தேசிய
இராணுவம் ( ஐ.என்.ஏ ) என்ற படை உருவாக்கப்பட்டது.
·
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க,
09-07-1943ஆம் தேதி பதவியேற்றார்.
·
இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும்,ஆத்மாவும் தமிழர்கள் தான் – தில்லான்.
( இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவர் )
·
தமிழகத்திலிருந்து பெரும்ப்டையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு
வலு சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன்,முத்துஇராமலிங்கனார்.
·
டோக்கியோ கேடட்ஸ் – வான்படைப்பிரிவு
·
இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர்
டாக்டர்.இலட்சுமி
·
மலேயாவில் உள்ள தமிழர்களி இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது
– சர்ச்சில்
·
மரணத்தைப் பெரியதாக தமிழர்கள் கருதவில்லை
·
விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மன
நிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றிற்கான விலை துன்பமும்,தியாகமும்
தான் - நேதாஜி
சீவக சிந்தாமணி
·
சீவக சிந்தாமணி நூற் குறிப்பு அறிதல்
·
சீவகனின் வரலாற்றை சுருக்கமாக அறிதல்
·
இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பது சீவக சிந்தாமணியின் மையக்
கருத்து.
·
ஏமாங்கத நாட்டின் வளத்தினை அறிதல்
ஆசிரியர் செயல்பாடு:
Ø இந்திய இராணுவத்தின் முக்கியத்துவத்தை
கூறுதல்.
Ø இந்திய தேசிய இராணுவம் உருவானதற்கு
நோக்கம் பற்றிக் கூறுதல்.
Ø இந்திய தேசிய இராணுவத்தில்
தமிழர்களின் பங்கு பற்றி விளக்குதல்.
Ø தேசத்தின் முக்கியத்துவத்தை
விளக்குதல்
Ø சீவகன் வரலாற்றை சுருக்கமாக
காணுதல்.
Ø சீவக சிந்தாமணியின் நூற்
குறிப்பு மற்றும் மையக் கருத்தினைப் பற்றி கூறுதல்
Ø ஏமாங்கத நாட்டின் வளத்தினை
விளக்குதல்
Ø மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
மாணவர் செயல்பாடு:
Ø இந்திய விடுதலைப் போரில்
இராணுவத்தின் முக்கியத்துவம் பற்றி அறிதல்
Ø இராணுவத்தின் முக்கியச் செயல்பாட்டினை
உணர்தல்.
Ø இந்திய இராணுவத்தில் தமிழர்களின்
பங்கினைப் போற்றுதல், அவர்களின் வீரத்தை மதித்தல்.
Ø சீவகசிந்தாமணி பற்றி அறிதல்
Ø சீவக சிந்தாமணி உணர்த்தும்
ஏமாங்கத நாட்டின் வளத்தைப் போற்றுதல்
Ø மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்.
கருத்துரு வரைபடம்
இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
சீவக சிந்தாமணி
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல்
குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக்
கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை
மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
Ø இந்திய தேசிய இராணுவம் பற்றி
அறிதல்
Ø இந்திய தேசிய இராணுவத்தில்
தமிழர்கள் பங்கினை அறிதல்
Ø எளியத் தொடர்களைப் படித்தல்
Ø மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
மதிப்பீடு:
Ø இந்திய தேசிய இராணுவம் யாருடைய தலைமையில்
உருவாக்கப்பட்டது?
Ø இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜி எப்போது
தலைமை ஏற்றார்?
Ø இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் படைக்கு
தலைவராக இருந்தவர் யார்?
Ø சீவக சிந்தாமணி நூலின் மையக்கருத்து _____________
Ø சீவக சிந்தாமணியின் பாட்டுடைத்தலைவன் யார்?
Ø சீவக சிந்தாமணியில் எந்த நாட்டின் வளம் சிறப்பித்துக்
கூறப்பட்டுள்ளது?
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள
மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி, வணக்கம் – தமிழ்விதை