8TH - KALVI TV - 28-01-2022 - TAMIL - ONDREY KULAM

      https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           2 8- 01- 2022           

வகுப்பு                    எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் -7 - ஒன்றே குலம்

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1.திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

அ) 3000         ஆ) 4000        இ) 5000         ஈ)  6000  

 

2. திருமந்திரத்தை இயற்றியவர்____________

அ) அப்பர்       ஆ) சுந்தரர்            இ) மாணிக்க வாசகர்      ஈ) திருமூலர்

 

3)  திருமுறைகள் மொத்தம் எத்தனை?

அ) 10          ஆ) 11          இ)           12      ஈ) 13

 

4) நாயன்மார்கள் மொத்தம் எத்தனைப் பேர்?

அ) 108            ஆ) 63          இ) 64           ஈ) 72


5 ) பதினெண் சித்தர்கள் என்பதில் உள்ள எண்ணுபெயரின் தமிழெண் _______________

அ) ௧௮    ஆ) ௧௨       இ) ௧௧    ஈ) ௧௪


6 ) திருமூலர் எவ்வாறு கருதப்படுகிறார்?

அ) தொண்டருக்கு தொண்டராக     ஆ) ஆழ்வார்களிலும்,நாயன்மார்களுள் ஒருவராகவும்      இ) நாயன்மார்களுள் ஒருவராகவும், சித்தர்களுள் ஒருவராகவும்                   ஈ) பசிப்பிணிப் போக்கும் மருத்துவராக

7 ) திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?

அ) 10                      ஆ) 11                     இ) 5   ஈ) 6

8 ) அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _______________ க்கண்டு அஞ்ச மாட்டார்கள்

அ) புலனை                 ஆ) அறனை          இ) நமனை               ஈ) பலனை


9 ) ஒன்றே ____________ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்

அ) குலம்                   ஆ) குளம்                 இ) குணம்              ஈ) குடம்


10 ) நமனில்லை – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________________

அ) நம் + இல்லை        ஆ) நமது + இல்லை                இ) நமன் + நில்லை                 ஈ) நமன் + இல்லை


11 ) நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்________________

அ)  நம்பரங்கு          ஆ) நம்மார்க்கு                       இ) நம்பர்க்கங்கு                    ஈ) நம்பங்கு 


12 ) நாணமே – என்பதன் பொருள் யாது?

அ) ஈடேறுங்கள்                       ஆ) அடியார்                            இ) எமன்                  ஈ) கூசாமல்

 

13 ) சித்தம் - என்பதன் பொருள் ________________

அ) கூசாமல்                     ஆ) வழங்கினால்                   இ) உள்ளம்                   ஈ) எமன்


14 ) நம்பர் – என்பதன் பொருள்____________

அ) கூசாமல்                     ஆ) வழங்கினால்                   இ) அடியார்                  ஈ) எமன் 


15 ) படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் – இவ்வடிகளில் காணப்படும் மோனைச் சொற்கள்______________

அ) படமாட,பகவற்கு                ஆ) கோயில்,ஈயில்                  இ) படமாட , ஒன்று                 ஈ) கோயில், பகவற்கு


16 ) மனிதர்களிடையே ______________ ஆல் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறு.

அ) செல்வத்தால்                      ஆ) கல்வியால்                       இ) பிறப்பால்                            ஈ) வளர்ச்சியால்


17 ) உலக மக்கள் யாவரையும் எவ்வாறு கருத வேண்டும்?

அ) நண்பனாக                          ஆ) உடன் பிறந்தவராக          இ) எதிரியாக                         ஈ) துரோகியாக 


18 ) இறைவனுக்கு காணிக்கை எவ்வாறு செலுத்த வேண்டும் என திருமூலர் கருதினார்?

அ) நடைப்பாதையாக செல்லுதல்                ஆ) அபிசேஷகம் செய்தல்         இ) மக்களுக்கு கொடுத்தல்     ஈ) உண்டியலில் செலுத்துதல்


19 ) உலகை காக்கும் இறைவன் ______________

அ) மதத்திற்கு மதம் வேறுபட்டவர்            ஆ) சமயத்திற்கு சமயம் வேறுபட்டவர்       இ) செல்வந்தர்களுக்கு உரிய                 

ஈ) ஒருவனே 


20 ) எது இறைத் தொண்டாக கருதப்படுகிறது?

அ) பால் அபிசேஷகம் செய்தல்         ஆ) குடமுழக்கு செய்தல்          இ) அடுத்தவர் பசியைப் போக்குவது                     

ஈ)  கடவுள் சிலைகள் செய்வது

இணைய வழித் தேர்வு

பணித்தாள் - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post