10 TH - KALVITV - 27-01-2022 - TAMIL - JEYAGANTHAM

       https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           27- 01- 2022           

வகுப்பு                    பத்தாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் -8 - ஜெயகாந்தம்

காணொளி


பணித்தாள்

1.சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது-------------------------------------------------
அ)அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல் 
ஆ)அறிவியல் முன்னேற்றம்
இ)பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் 
ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 

2.கலையின் கணவனாகவும், சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது   __________________
அ)தம்வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ)சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ)அறத்தைக் கூறுவதற்காக எழுதினார் 
ஈ)அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

3) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தனின்  புதினம்   _________
அ)கங்கை எங்கே போகிறாள்?
ஆ)யாருக்காக அழுதாள்
இ)சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ)இமயத்துக்கு அப்பால்

4) வியாசர் பாரதத்தை எழுதியதன் காரணமாக ஜெயகாந்தன் கூறுவது----

அ)இறைவனின் வேண்டுகோளின் படி 

ஆ)தர்மார்த்தங்களை உபதேசிக்க 

இ)இலக்கிய ஆர்வத்தால்     

ஈ)சமூகப்பணிக்காக

5 )தொகைச் சொல்லை விரித்து எழுதுக: நாற்பொருள்

அ)அரிசி,பருப்பு,தானியம்,பழங்கள்    

ஆ)அறம்,பொருள்,இன்பம்,வீடு

 இ)நகை,அழுகை,வெகுளி,மருட்கை  

 ஈ) சினம்,சிரிப்பு,துன்பம்,இன்பம்

6 )ஓரிரு பாயிரம் தோற்றி மும்மையினொன்றாய்   

        நாற்பொருள் பயத்தலொடு எழுமதந்தழுவி- இவ்வடிகளில் கூறப்பட்டது---------------------------------------

அ)இலக்கணம்     ஆ)நூல் வரலாறு      இ)நூலின் இயல்பு      ஈ)ஆசிரியன் வரலாறு 

7 ) வடிவத்தை வளமாக்குவது என ஜெயகாந்தன் குறிப்பிடுவது--------------------

அ)மொழிநடை  ஆ)அர்த்தம்   இ)சொல்வளம்   ஈ) மொழி ஆளுமை 

8 )துவேஷம் என்ற சொல்லின் பொருள்-------------------------------

அ)நடிப்பு   ஆ)திறமை   இ)ஆற்றல்  ஈ)பகை அல்லது வெறுப்பு 

9 )தேவன் வருவாரா? என்பது ஜெயகாந்தனின்----------------------

அ)சிறுகதை தொகுப்பு  ஆ)குறும் புதினம்   இ)கவிதை  ஈ)நாடகம் 

10 )பொருந்தாத சொல்லைக் கண்டறிக------------------------------------

அ)கை விலங்கு  ஆ)பிரளயம்  இ)கருணையினால் அல்ல  ஈ)சுந்தர காண்டம் 

11 )பிரெஞ்சு மொழியில் வெளிவந்த காந்தியின் வாழ்க்கை வரலாறு-----------

அ)சத்தியாகிரகம் ஆ)எனது போராட்டம் இ)வாழ்விக்கவந்த காந்தி ஈ) போர்பந்தர் 

12 ) முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு------------------------

அ)மூன்சி லைப் ஆ)ஒரு கதாசிரியனின் கதை  

இ)எழுத்தாளன்  ஈ)எழுதுகிறேன் 

13 )திரைப்படமாக எடுக்கப்பட்ட ஜெயகாந்தனின் படைப்பு--------------------------

அ)யாருக்காக அழுதான்         ஆ)யுக சந்தி  

இ)குருபீடம்             ஈ)பிரம்ம உபதேசம் 

14 )ஒரு தேசத்தின்  ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம் என்று கூறியவர்

அ) அசோகமித்திரன்  ஆ) அகிலன்   இ) ஜெயகாந்தன்  ஈ) செல்லப்பன் 

15 )எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை

        கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்இவ்வடிகளில் ஜெயகாந்தன் குறிப்பிடுவது யாருடைய பாடல்?

அ)கண்ணதாசன் ஆ)மருதகாசி இ)ஆலங்குடி சோமு ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

16 )தன்னைப் பெரிதும் பாதிப்பதாக ஜெயகாந்தன் குறிப்பிடுவது-----------

அ)மனித வாழ்வின் பிரச்சினைகள் ஆ)அரசியல் குறுக்கீடு இ)வறுமை  ஈ)சமூகம் 

17 )தர்க்கத்திற்கு அப்பால் இது சிறுகதை  எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?----------------------------------------------

அ)குருபீடம்  ஆ)யுக சந்தி  இ)ஒரு பிடி சோறு  ஈ)உண்மை சுடும் 

18 )சிறுகதை மன்னன் என்று புகழப்பட்டவர்---------------------------

அ)கு,ப.ரா  ஆ)சுந்தர ராமசாமி   இ)ஜெயகாந்தன்  ஈ)புதுமைப்பித்தன் 

19 )குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஜெயகாந்தனின் படைப்பு----------------அ)தர்க்கத்திற்கு அப்பால் ஆ)இமயத்துக்கு அப்பால் இ)யுக சந்தி ஈ) உன்னைப்போல் ஒருவன் 

20 )ஜெயகாந்தனின் இமயத்துக்கு அப்பால் என்ற நூலுக்குக் கிடைத்த விருது----------------------------------------

அ)சோவியத் நாட்டு விருது          ஆ)சாகித்திய அகாதமி   

இ)ஞானபீட விருது                     ஈ) புலிட்சர் விருது 

இணைய வழித் தேர்வு


பணித்தாள் - PDF

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post