மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.
மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின் இணைய வழி தேர்வு எழுதவும்.
நன்றி,வணக்கம்
இயல் -6
நிலா முற்றம்
இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில்
குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்
1. கம்பராமாயணம்
2. அகப்பொருள் இலக்கணம்
3. திருக்குறள்
( திருக்குறள் ஒரு மதிப்பெண் வினாக்கள் தனியாக பதிவேற்றம் செய்யப்படும் )
ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறைக்கப்பட்டப் பாடத்தின் அடிப்படையில் இயல் 6 இல் மூன்று பாடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆயினும் இந்த இலக்கணப் பகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பகுதியினை நன்கு படித்து புரிந்து சிந்தித்து பின் பதில் அளிக்கவும். இங்கு கொடுக்கப்படும் வினாக்கள் ஒரு பயிற்சிக்கான வினாக்கள் மட்டுமே. தற்சமயம் திருப்புதல் தேர்வு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அந்த திருப்புதல் தேர்வுக்கு இந்த வினாக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியினை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து பின் இந்த வினாக்களுக்கு விடையளிக்கவும். மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் உச்சப்பட்ச மதிப்பெண்ணை நீங்கள் அடையாளம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் நன்றாக பயிற்சி பெறவும். தங்களின் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளவும். இதனை ஏன் PDF ஆக கொடுக்கப்படவில்லையென்றால் இதனைப் பார்த்து எழுதும் போது இந்த வினாக்கள் உங்கள் மனதில் பதியும் என்பதால் கொடுக்கப்படவில்லை. நீங்கள் எழுதும் போதும் வினாவினையும், விடையினையும் சொல்லிக் கொண்டு எழுதுங்கள். இதனால் எழுத்துப் பிழை வருவது குறையும். தேர்வு நேரங்களில் மதிப்பெண் அதிகம் பெற உறுதுணையாக இருக்கும். எனவே மாணவர்கள் எந்த ஒரு பயிற்சித்தாளினையும் எழுதும் போது இந்த முறையைப் பின்பற்றினால் உங்களுக்கு ஏற்படும் எழுத்துப் பிழை பெருமளவு குறையும். வாழ்த்துகள் மாணவர்களே..... வாருங்கள் வினா வங்கிக்கு சென்று வாசிப்போம்,எழுதுவோம். கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டு இணைய வழித் தேர்வினை எழுதி மதிப்பெண் பெற்றிடுவோம்.
1) குளிர்காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
2) கோசல
நாட்டில் குறையில்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோலாட்சி புரிவதால் ஈ) அங்கு வறுமை
இல்லாததால்
3) ஆறு ஒரு ஓவியமாக விரிந்து, உயிரெனக் காட்சியளிப்பதாக உணர்வது-----
-
அ) ஓவியக்கலை ஆ) அழகுணர்ச்சி இ) மெய்யுணரச்சி ஈ) நுண்கலை
4) கொடிவேலி
உடைய கமுகந்தோட்டங்கள்,நெல்வயல்களில் பரவி பாய்வது
அ) காவேரி ஆறு ஆ) சரயு ஆறு இ) பாலாறு ஈ) வைகை ஆறு
5) கீழ்கண்டவற்றுள்
கொடிவகையைச் சார்ந்தது எது?
அ) செண்பகம் ஆ) கமுகு இ) குருக்கத்தி ஈ)
கொன்றை
6) ஓசை
தரும் இன்பம் உவமை இல்லா இன்பமடா - எனப் பாடியவர்
அ)பாரதிதாசன் ஆ)பாரதியார் இ)கவிமணி ஈ)நாமக்கல் கவிஞர்
7) கம்பன்
இசைத்த கவி எல்லாம் நான் என்று பெருமைப் படுபவர்
அ)பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி ஈ)நாமக்கல் கவிஞர்
8)மையோ?
மரகதமோ? மறிகடலோ? மழை
முகிலோ? - இவ்வடியில் இடம்பெறும் நயம்
அ)எதுகை நயம் ஆ)மோனை நயம் இ)இயைபு நயம் ஈ)முரண் நயம்
9)”ஏழைமை
வேடன் இறந்திலன்” என்று எனை ஏசாரோ?
இவ்வடியில் வேடன் என்பவன்------
அ)இராமன் ஆ)இலக்குவன் இ)துரியோதனன்
ஈ)குகன்
10) நீர்நிலைகள்
எழுப்பும் திரைச்சீலைகள் என்று கம்பர் குறிப்பிடுவது
அ)மீன்கள் ஆ)அலைகள் இ)தாவரங்கள்
ஈ)கதிரொளி
11) வண்டுகளின்
ரீங்காரத்திற்கு கூறப்பட்ட உண்மை
அ)மகரயாழ் ஆ)விளரியாழ் இ)முல்லை
யாழ் ஈ)பாலையாழ்
12)கம்பர்
இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி……….எனப் பெயரிட்டார்
அ) பெரியபுராணம் ஆ)இராமாவதாரம் இ) இராமாயணம் ஈ)இராம காதை
13) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்று
எது?
அ. பால காண்டம் ஆ. அயோத்தியா காண்டம் இ. புகார் காண்டம் ஈ.
கிட்கிந்தா காண்டம்
14)கம்பராமாயணம்---------
காண்டங்களை உடையது
அ) நான்கு ஆ)
ஏழு இ) எட்டு ஈ)ஆறு
15)கம்பர்
பிறந்த ஊர்
அ)மயிலாடுதுறை ஆ)திருவாரூர்
இ)தேரழுந்தூர்
ஈ)திருக்கோவிலூர்
16)கம்பரை
ஆதரித்தவர்
அ)சீதக்காதி ஆ)குமண
வள்ளல் இ)சடையப்ப
வள்ளல் ஈ)பாண்டித்துரை
17) பொருள்
என்பது----------
அ)ஆயுதம் ஆ)ஒழுக்க முறை இ)கடையில் இருப்பது ஈ)பயன்படுத்துவது
18) தமிழர்
வாழ்வியலை--------- , ------------ என வகுத்தார்கள்
அ)அகம், புறம் ஆ)இன்பம், துன்பம்
இ)உயர்வு, தாழ்வு ஈ)நிகழ்வு, எதிர்வு
19) அன்புடைய
தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது
அ) குடும்பம் ஆ) புறத்திணை இ) அகத்திணை ஈ) இல்லறம்
20)நிலமும்
பொழுதும்----------- எனப்படும்.
அ)உரிப்பொருள் ஆ)கருப்பொருள்
இ)திறைப்பொருள் ஈ)முதற்பொருள்
21)பொழுதின்
இரு வகைகள்---------,-----------
அ)சிறுபொழுது,பெரும் பொழுது ஆ)காலை,மாலைஇ)இரவு,பகல் ஈ)அந்தி,சந்தி
22)ஓராண்டின்
ஆறு கூறுகளை---------- எனவும், நாளின் ஆறு கூறுகளை--------
எனவும் அழைப்பர்
அ)சிறுபொழுது,பெரும்பொழுது
ஆ)பெரும்பொழுது,சிறுபொழுது
இ)மாதம், வாரம் ஈ) வாரம்,மாதம்
23) வயலும்
வயல் சார்ந்த இடமும்---------
அ)குறிஞ்சி ஆ)முல்லை இ)மருதம் ஈ)நெய்தல்
24) பொருத்துக
அ) கார்காலம் - 1. மாசி, பங்குனி
ஆ) குளிர்காலம் - 2 .மார்கழி, தை
இ) முன்பனிக்காலம் - 3. ஐப்பசி,
கார்த்திகை
ஈ) பின்பனிக்காலம்
- 4. ஆவணி, புரட்டாசி
அ)4 3 2 1 ஆ) 3 4 1 2 இ)4 2 3 1 ஈ)3 4 2 1
25) சித்திரை,
வைகாசி ஆகிய மாதங்கள்
இரண்டும்---------- காலத்துக்குரியன
அ)குளிர்காலம் ஆ)முன்பனிக்காலம்
இ)முதுவேனில் ஈ)இளவேனில்
26)பிற்பகல்
2 மணி முதல் 6 மணி வரை உள்ள
சிறுபொழுது
அ)வைகறை ஆ)எற்பாடு இ)மாலை ஈ)யாமம்
27)ஆறு
பெரும் பொழுதுகளையும் உடைய திணைகள்
அ)குறிஞ்சி ,மருதம்
ஆ)மருதம் ,பாலை இ)மருதம்,நெய்தல் ஈ)பாலை,குறிஞ்சி
28)நெய்தல்
நிலத்திற்குரிய சிறுபொழுது
அ)எற்பாடு ஆ)காலை இ)மாலை
ஈ)வைகறை
29)குறிஞ்சி
நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள்
அ)ஆறும் ஆ)குளிர்காலம்,முன்பனிக்காலம்
இ)கார்காலம் ஈ)இளவேனில்,முதுவேனில்
30)குறிஞ்சி,மருதம்,நெய்தல் ஆகிய
நிலங்களின் தெய்வங்கள் முறையே
அ)வருணன்,இந்திரன்,முருகன் ஆ)இந்திரன்,முருகன்,கொற்றவை
இ)முருகன்,திருமால்,கொற்றவை ஈ)முருகன்,இந்திரன்,வருணன்
31)முல்லை
நிலத்துக்குரிய உணவு
அ)மலைநெல்,தினை
ஆ)வரகு,சாமை
இ)செந்நெல்,வெண்ணெல் ஈ)மீன்
32. வேறுபட்ட ஒன்றைக் காண்க:- குறிஞ்சி
அ. முருகன் ஆ.
மலைநெல் இ. அகில் ஈ. காட்டாறு
33. பாலை நிலத்திற்குரிய பறை ________
அ. தொண்டகம் ஆ. ஏறுகோட்பறை இ. துடி ஈ. மணமுழா
34. கிழங்கு அகழ்தல் – எந்த திணைக்குரியத் தொழில்------------
அ. நெய்தல் ஆ.
முல்லை இ. குறிஞ்சி ஈ. மருதம்
35. மூதூரில் காட்டாறு ஓடியது – இதில் மூதூர்
மற்றும் காட்டாறு ஆகியவை எந்நிலத்திற்குரியது_____
அ. மருதம்,
முல்லை ஆ. நெய்தல்,பாலை இ. குறிஞ்சி, முல்லை ஈ.
மருதம்,பாலை
36. கவிதையில் _________ பொருளை இக்கருப்பொருள்
பின்னணியில் அமைத்துப் பாடுவது நம் மரபு.
அ. முதற் பொருள் ஆ. சொல்பொருள் இ. உரிப்பொருள் ஈ. கருப்பொருளை
37. யாமப் பொழுது என்பது _______
அ. மாலை 6 முதல் இரவு 10 வரை ஆ. இரவு 2 முதல் காலை 6 வரை
இ. காலை 10 முதல் 2 மணி வரை ஈ. இரவு 10 முதல் இரவு 2 வரை
38. கம்பர் எழுதிய நூல்களில் ஒன்று வேறுபட்டுள்ளது.
அ. சரசுவதி அந்தாதி ஆ. ஐந்திணை ஐம்பது இ. ஏரெழுபது ஈ. சிலைஎழுபது
39. தவறான ஒன்றைக் கண்டுப்பிடி:-
அ. கல்வியிற் பெரியவர் கம்பர் ஆ. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடும்
இ. விருத்தம் எனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் ஈ. பாட்டுக்கொரு புலவன் கம்பன்
40. அகத்திணைகள் மொத்தம் __________
அ. 5 ஆ.6 இ. 7 ஈ.8
41. அன்பின் ஐந்திணைகள் மொத்தம் ________
அ. 5 ஆ.6 இ. 7 ஈ.8
42. அன்பின் ஐந்திணைகளில் வேறுபட்டது எது?
அ. குறிஞ்சி ஆ. கைக்கிளை இ. முல்லை ஈ.
பாலை