மெல்லக் கற்போருக்கான கடிதம்
1. உங்கள் கிராமத்திற்கு
நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதுக
அனுப்புநர்
செ.தமிழரசன்,
50, அன்னை இல்லம்,
காந்தி தெரு, பூம்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் –
625001.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை – 600 002.
ஐயா,
பொருள் : நூலக வசதி வேண்டுதல் – சார்பு
வணக்கம். எங்கள்
கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வாழ்கிறார்கள்.
பல மாணவர்கள் அரசு தேர்வுக்கு
படிக்கிறார்கள்;
ஆனால் நூலகம் இல்லை. எனவே எங்கள் கிராமத்தில் ஒரு கிளை
நூலகம் அமைக்க பணிவுடன்
வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள்
உண்மையுள்ள,
செ.தமிழரசன்.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை – 600 002.
