9TH-TAMIL-THREE-MARKS-ALL UNITS -QUESTIONS-26-PDF


 

இளந்தமிழ்

ஒன்பதாம் வகுப்பு

சிறு வினாக்கள் – வினாக்கள் தொகுப்பு

இயல் – 1                                                                                          அமுதென்று பேர்

சிறு வினா

1. தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.

2.  திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

4. ‘ புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்’–உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

இயல் – 2                                                                                            உயிருக்கு வேர்

சிறுவினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

3. சோழர்காலக் குமிழித்தாம்பு  எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

4. வானவில்லை ஒப்பிட்டுப் பெரிய புராணம் கூறும் செய்தியை விளக்குக.

இயல் – 3                                                                                                உள்ளத்தின் சீர்

சிறுவினா

1. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

2. திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.

3. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்களுடன் ஒப்பிடுக.

4. தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?

5. அளவையாகு பெயர்களின் வகைகளை விளக்குக.

இயல் – 3                                                                                                      திருக்குறள்

) சிறுவினா – கூடுதல் வினாக்கள்

1.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

   இகழ்வார்ப் பொறுத்தல் தலை – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

2. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

   கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

3. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

   மிகைநாடி மிக்க கொளல் - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

    கருமமே கட்டளைக் கல் - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இயல் – 4                                                                             எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

சிறுவினா

1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

2. “ சமைப்பது தாழ்வா ? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்”.

அ) இன்பம் சமைப்பவர் யார்?

ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

3. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

4. நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

இயல் – 5                                                                                          கலை பல வளர்தல்

சிறுவினா

 1. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

3. எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் விளக்குக.

 4. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக

5. இராவண காவியத்தின் வழியே மருத நிலத்தின் அழகைப் புலவர் குழந்தை எங்ஙனம் காட்சிப்படுத்துகிறார்?

இயல் – 5                                                                                                      திருக்குறள்

ஆ) சிறுவினா – கூடுதல் வினாக்கள்

1. ஏகதேச உருவக அணி என்றால் என்ன?

2. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

   ஐந்து சால்பு ஊன்றிய தூண் – இக்குறள் ஏகதேச உருவக அணிக்கு எவ்வாறு பொருந்துகிறது?

3. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)

   ஆழி எனப்படு வார் - இக்குறள் ஏகதேச உருவக அணிக்கு எவ்வாறு பொருந்துகிறது?

உழுவார் உலகத்தார்க்கு  ஆணியஃ தாற்றாது

    எழுவாரை எல்லாம் பொறுத்து - இக்குறள் ஏகதேச உருவக அணிக்கு எவ்வாறு பொருந்துகிறது?

இயல் – 6                                                                                                 வாழிய நிலனே

சிறுவினா

1. குறிப்பு வரைக - டோக்கியோ கேடட்ஸ்

2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்க ளின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக

3. ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் எப்படி பரவியுள்ளது என்பதைத் திருத்தக்க தேவர் எங்ஙனம் கூறுகின்றார்?

4. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?

இயல் – 7                                                                                           என் தலை கடனே

சிறுவினா

1. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.

2. நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?

3.'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?


CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post