6th |Tamil 3rd Term Unit 1| BHARATHAM ANRAIYA NATTRANGAL| Notes & Lesson Plan (2025)

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       மூன்றாம் பருவம்

மாதம்               :       ஜனவரி

வாரம்               :        முதல் வாரம்

வகுப்பு             :       ஆறாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       பாரதம் அன்றைய நாற்றங்கால்


அறிமுகம்             :

·       நீங்கள் சுற்றுலா  சென்று வந்த இடங்கள் குறித்து கூறுக.

·       தமிழ்நாட்டில் உன்னை கவர்ந்த இடம் பற்றிய செய்திக் கூறுக

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·       காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்               :

·       இந்திய நாட்டின் சிறப்புகளை உணர்தல்.

·       இந்திய வளங்களைக் கண்டு பெருமை அடைதல்

ஆசிரியர் குறிப்பு    :

·       பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

·       நாட்டின் இயற்கை வளங்களை பேணுதல்

·        நாட்டின் வளங்களைப் பாதுகாத்தல்

·        நாட்டின் வளங்களை, இந்திய தாய்க்கு ஒப்பிடல்

·       பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்துரு வரைபடம்                 :

பாரதம் அன்றைய நாற்றங்கால்

விளக்கம்  :

பாரதம் அன்றைய நாற்றங்கால்

·       ஆசிரியர் : தாராபாரதி

·        நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு.

·       திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது

·       கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

·       புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன.

·       அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது

·       அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

·       பாடப்பகுதியினை வாசித்தல்

·       சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

·        நாட்டின் இயற்கை வளங்களை அறிதல்

·       இயற்கை வளங்களை பாதுகாத்தல்

·       பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

·       பாடலின் நயங்களை அறிதல்

மதிப்பீடு      :

·       தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______

·       பாடலில் இடம் பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் கூறுக.

·       நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை யாவை?

கற்றல் விளைவுகள்                  :

பாரதம் அன்றைய நாற்றங்கால்

·       T607 மற்றவர்களின் மொழிகள் உணவுப் பழக்கங்கள் வாழ்க்கை நிலை அவற்றில் காணப்படும் வேற்றுமைகள் அவை தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றி பேசுதல் .

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  நாடு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் எழுதி வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post