7TH-TAMIL-TERM2-NOTES OF LESSON -UNIT-2- THAMIZH OLIR EDANGAL

 

மாதம்               :        நவம்பர்,டிசம்பர்

வகுப்பு                :        ஏழாம் வகுப்பு     

பருவம்               :        இரண்டாம் பருவம் – இயல்-2

 பாடம்              :       தமிழ்       

பாடத்தலைப்பு   :       தமிழ் ஒளிர் இடங்கள்

                                                                        

அறிமுகம்                    :

Ø   நீங்கள் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள் பற்றிக் கூறுக

கற்பித்தல் துணைக் கருவிகள்           :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                       :

Ø  தமிழக சுற்றுலா இடங்களையும் அவை வெளிப்படுத்தும் கலை, பண்பாடுக் கூறுகளையும் படித்தறிதல்

ஆசிரியர் குறிப்பு            :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  விரிவானப் பகுதியினை வாசிக்க வைத்தல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து வாசிக்க வைத்தல்

Ø  சுற்றுலாத் தலங்கள் பற்றிக் கூறல்

Ø  சுற்றுலாத் தலங்களின் தன்மைக் குறித்து கூறல்

கருத்து வரைபடம்          :                தமிழ் ஒளிர் இடங்கள்

விளக்கம்    :        ( தொகுத்தல் )

தமிழ் ஒளிர் இடங்கள்

Ø  இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன

Ø  தமிழ் பல்கலைகழகம் – தஞ்சாவூர்

o   தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது.

Ø  உ.வே.சா – நூலகம் – சென்னை

o   1942 – இல் தொடக்கம்

o   2128 ஓலைச்சுவடிகளும், 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

Ø  கீழ்திசை நூலகம்  - சென்னை

o   1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Ø  கன்னிமாரா நூலகம் – சென்னை

o   1896 இல் தொடங்கப்பட்டது.

o   தமிழ்நாட்டின் மைய நூலகம்

Ø  வள்ளுவர் கோட்டம் – சென்னை

o   திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

o   இதன் கட்டுமானப் பணிகள் கி.பி.(பொ.ஆ.) 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன.

Ø  திருவள்ளுவர் சிலை – கன்னியாகுமரி

o   திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

o   திருவள்ளுவர் சிலை மொத்தம் ஏழாயிரம் டன் எடை கொண்டது

Ø  உலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை

o   கி.பி. (பொ.ஆ.) 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெ ற்ற உலகத்த மிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Ø  சிற்பக் கலைக்கூடம் – பூம்புகார்

o   கி.பி.(பொ.ஆ.) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

காணொளிகள்               :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

o  சுற்றுலாத்தலங்களை அறிதல்

o  சுற்றுலாத் தலங்களின் பயன்பாடு அறிதல்

o  சுற்றுலாத்தலங்களின் அவசியம் மற்றும் தொன்மையை அறிதல்

மதிப்பீடு                       :

                          LOT :

Ø  நீ அறிந்த சுற்றுலாத் தலங்கள் யாவை?

Ø  பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது?

MOT

Ø  தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தின் சிறப்புப் பற்றிக் கூறுக

Ø  கன்னிமாரா நூலகம் பற்றி கூறுக

HOT:

Ø  சுற்றுலாத் தலங்கள் மூலம் நீங்கள் எவற்றையெல்லாம் தெரிந்து கொள்வீர்கள்?

Ø  நீங்கள் கண்டு களித்த இடங்களைப் பற்றிக் கூறுக.

குறைதீர் கற்றல்            :

Ø  மதிப்பீட்டின் அடிப்படையில் பாடத்தின் கடினப் பகுதியினை எளிமையாக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதல்

வலுவூட்டல்         :

Ø  பாடப்பகுதியினை மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.

கற்றல் விளைவுகள்         :

Ø  T702 – ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும் அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும் அறிதல்

தொடர் பணி          :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

_____________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post