மாதம் : நவம்பர்.
டிசம்பர்
வகுப்பு : ஏழாம்
வகுப்பு
பருவம் : இரண்டாம்
பருவம் – இயல்-2
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பேசும் ஓவியங்கள்
அறிமுகம் :
Ø ஓவியங்களின் பல்வேறு
வகைப்பட்ட படங்களை மடிக்கணினி வாயிலாக காண்பித்து அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக் கருவிகள் :
Ø
கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø ஓவியக் கலையின் மேன்மையும்,
அது மனித வாழ்வோடு இணைந்துள்ள நுட்பத்தையும்
உணர்ந்து போற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø உரையாடல் வடிவில்
அமைந்துள்ள பாடப்பகுதியினை மாணவர்களை பங்கேற்க வைத்து நடிக்க வைத்தல்
Ø ஓவியங்களின் தன்மையைக்
கூறல்
Ø ஓவியங்கள் எவ்வாறு
மனித வாழ்வியலோடு இணைந்துள்ளது என்பதனை நடைமுறை உதாரணங்களைக் கூறி ஒப்பிடல்
நினைவு வரைபடம் :
பேசும் ஓவியங்கள்

விளக்கம் : (
தொகுத்தல் )
பேசும்
ஓவியங்கள்
Ø ஒரு
கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக
நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும்
Ø ஓவியக்கலை
நுண்கலைகளுல் ஒன்று
Ø குகை
ஓவியல் – கோட்டோவியம்
Ø சுவர்
ஓவியம் - தஞ்சைப் பெரியகோயிலில் சுவர் ஓவியங்கள் ஏராளமாகக் காண முடியும்.
Ø துணி
ஓவியம் - துணியை எழினி,
திரைச்சீலை, கிழி, படாம் என பல பெயர்களில்
அழைக்கப்படும்.
o தற்காலத்தில்
துணி ஓவியம் “ கலம்காரி ஓவியங்கள் “ என தமிழகத்திலும், ஆந்திராவிலும் வரையப்படுகிறது.
Ø ஓலைசுவடி
ஓவியம் – கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சாகவும் வரையப்பட்டது.
Ø செப்பேட்டு
ஓவியம் – வரைகோடு ஓவியம்
Ø தந்த
ஓவியம், கண்ணாடி ஓவியம், தாள் ஓவியம், கருத்துப்பட ஓவியம், நவீன ஓவியம்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர்
செயல்பாடு :
o ஆசிரியர்
குறிப்பு பற்றி அறிதல்
o புதிய
சொற்களை அடையாளம் கண்டு பொருள் அறிதல்
o பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
o ஓவியங்களை
தன்மையை அறிதல்
o பங்கேற்று
நடித்தல்
o நிறுத்தற்
குறி ஏற்றாற் போல் உணர்வுடன் பேசுதல்
o ஓவியங்களை
நடைமுறை வாழ்வில் எவ்விதம் பயன்படுகிறது என்பதனை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø ஓவியம்
என்பது யாது?
Ø கோட்டோவியம்
என்பதனை பிரித்துக் கூறுக
MOT
Ø கலம்காரி
ஓவியங்கள் என்பது யாது?
Ø செப்பேடுகளில்
எவ்வாறு ஓவியம் வரையப்பட்டது?
HOT:
Ø கண்ணாடிகளில்
எவ்வாறு ஓவியம் வரைய இயலும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
Ø தந்த
ஓவியங்கள் கேரளாவில் மட்டும் அதிகம் காணப்படுவதேன்?
குறைதீர் கற்றல் :
Ø மதிப்பீட்டின்
அடிப்படையில் பாடத்தின் கடினப் பகுதியினை எளிமையாக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து
குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதல்
வலுவூட்டல் :
Ø பாடப்பகுதியினை
மீண்டும் கற்பித்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்றல் விளைவுகள் :
Ø 702
– ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப்
புரிந்துகொள்ள முயற்சி செய்தலும் அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும்
ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும்
அறிதல்.
தொடர் பணி :
Ø பாட
நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø உனக்கு
பிடித்த ஓவியம் ஒன்றை வரைந்து வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
