www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : பிப்ரவரி
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல்-7
தலைப்பு : மகனுக்கு எழுதிய கடிதம்
அறிமுகம் :
Ø அஞ்சல் அட்டை, இன்லேண்ட் கடிதம் இவற்றைக் காண்பித்து மாணவர்களிடம் இதன் பயன்குறித்து கேட்டறிந்து அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
· காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள், அஞ்சல் அட்டை, இன்லேண்ட் கடிதம், சில வகை கடிதங்கள்.
நோக்கம் :
Ø கடித இலக்கியவகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்.
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்
Ø கடிதம் எழுதும் முறையைக் கூறல்
Ø கடிதம் எழுதும் படிநிலைகளைக் கூறல்
Ø நா.முத்துக்குமார் பற்றிக் கூறல்
Ø கடிதத்தில் கூறப்பட்டுள்ள மையக் கருத்தைக் கூறல்
கருத்துரு வரைபடம் :
மகனுக்கு எழுதிய கடிதம்
விளக்கம் :
( தொகுத்தல் )
மகனுக்கு எழுதிய கடிதம்
Ø கடிதம் எழுதும் பாங்கு
Ø நா. முத்துக்குமார் தனது மகனுக்கு எழுதிய கடிதம்
Ø உலகின் மிகப்பெரிய இன்பம் மெய் தீண்டல்.
Ø இந்த உலகில் இப்படி தான் அழ வேண்டும், சிரிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கிறது.
Ø கல்வியில் தேர்ச்சிக் கொள்.
Ø எங்கும், எதிலும் அன்பாய் இரு.
Ø உழைக்கத் தயங்காதே.
Ø உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.
Ø கிடைத்த வேலையை விட பிடித்த வேலையை செய்
Ø உறவுகளை விட மேலானது நட்பு.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பிழையின்றி வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை காணுதல்
Ø புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
Ø நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø கடிதம் எழுதும் முறை அறிதல்
Ø கடிதம் எழுதும் நோக்கம் அறிதல்
Ø கடித படிநிலைகளை அறிதல்
Ø தனது மகனுக்கு எழுதிய கடிதத்தின் கருத்தை உணர்தல்
Ø உலகினில் எப்படி வாழ வேண்டும் என்பதனை அறிந்து பின்பற்றுதல்
மதிப்பீடு :
· கடிதம் எழுதும் வகைகள் யாவை?
· உலக வாழ்வு குறித்து நா. முத்துக்குமார் கூறியது யாது?
· உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
கற்றல் விளைவுகள் :
மகனுக்கு எழுதிய கடிதம்
T942 - செப்பமான மொழிநடையைப் படித்துச் சுவைத்தல், பல்வேறு கடித உத்திகளையும் வடிவங்களையும் அறிந்து எழுதுதல்.
மதிப்பீட்டின் அடிப்படையில் கடினப் பகுதியைக் கண்டறிந்து எளிமைப்படுத்தி
தகுந்த துணைக்கருவி உதவியுடன் குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
வலுவூட்டல் :
பாடப்பகுதியினை மீண்டும் ஒரு முறை கற்பித்து பாடப் பொருளை மாணவர்களுக்கு
வலுவூட்டுதல்.
தொடர் பணி :
Ø மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø உன் உறவினருக்கு ஒரு கடிதம் எழுதி வருக
______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை

