www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : பிப்ரவரி
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : யசோதர காவியம்
அறிமுகம் :
Ø நீங்கள் யாருக்கெல்லாம் உதவி செய்துள்ளீர்கள்? எப்படிப்பட்ட உதவி செய்துள்ளீர்கள் என்பதனைக் கூறுக.
Ø உங்களுக்கு யாரேனும் உதவி செய்துள்ளார்களா?
கற்பித்தல் துணைக்கருவிகள் :
· காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்.
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்
Ø சங்க இலக்கியம் காட்டும் அறத்தைப் பின்பற்றுதல்
Ø நூல்கள் வாசித்தல் அவசியம் உணர்த்துதல்
Ø பயன் தரும் செயல்களை செய்ய அறிவுறுத்தல்
Ø நன்னெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உணர்தல்.
கருத்துரு வரைபடம் :
யசோதர காவியம்
விளக்கம் :
( தொகுத்தல் )
யசோதர காவியம்
Ø நம்முடைய செயல் பயந்தரக்கூடிய செயலாக இருக்க வேண்டும்.
Ø சினத்தை நீக்க வேண்டும்.
Ø மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்
Ø நன்னெறிகளைக் காத்தல் வேண்டும்.
Ø ஐஞ்சிறுகாப்பியங்களுல் ஒன்று யசோதர காவியம்
Ø சமண முனிவரால் இயற்றப்பட்டது.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பிழையின்றி வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை காணுதல்
Ø புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
Ø நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø நம்முடைய செயல்கள் நம்மை தரும் செயலாக இருக்க வேன்டுமென உணர்தல்
Ø தீய பண்புகளை நீக்க வேண்டுமானால் கோபத்தை நீக்க வேண்டும்
Ø மெய்யறிவு நூல்களை அறிதல்
Ø வாழ்வில் அறச்சிந்தனைகளை போற்றுதல்
மதிப்பீடு :
· ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று _________
· யாசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
· யாசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிடுக.
கற்றல் விளைவுகள் :
யசோதர காவியம்
T941 – சிறுகாப்பிய மொழிநடையில் அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல், படைக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல்
மதிப்பீட்டின் அடிப்படையில் கடினப் பகுதியைக் கண்டறிந்து எளிமைப்படுத்தி
தகுந்த துணைக்கருவி உதவியுடன் குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
வலுவூட்டல் :
பாடப்பகுதியினை மீண்டும் ஒரு முறை கற்பித்து பாடப் பொருளை மாணவர்களுக்கு
வலுவூட்டுதல்.
தொடர் பணி :
Ø மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø யசோதர காவியம் கூறும் கருத்துகளை மையப்படுத்தி சிறுகதை எழுதி வருக.
______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை

