எட்டா வகுப்பு - தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025-26
இயல் - 6
கட்டுரை
கட்டுரை எழுதுக
நாட்டின் வளர்ச்சியில் இளைஞரின் பங்கு
குறிப்புச்
சட்டம் |
முன்னுரை |
இளைஞரின் சிறப்புகள் |
நாட்டு வளர்ச்சி |
இளைஞர்களின் பங்கு |
முடிவுரை |
முன்னுரை:
இனிவரும் காலம் இளைஞர்கள் காலம். எனவே இளைஞர்கள் நம்
நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள
ஆயத்தமாகி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின்
பங்குக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
இளைஞர்களின் சிறப்புகள்:
விவேகானந்தர் என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த
நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார். டாக்டர் அப்துல் கலாம்
அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில்தான் நம் நாட்டின்
எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.
நாட்டு வளர்ச்சி:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம், தொழில்துறை
முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஒரு நாட்டினுடைய
வளர்ச்சி என்பது அந்த
நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம்.
இளைஞர்களின் பங்கு:
எண்ணற்ற தொழில்துறைகளில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கி
வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இளைஞர்கள்
எண்ணற்ற புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம்
பொருளாதார முன்னேற்றம் அடைந்து நாட்டின் வளர்ச்சி மேலோங்கி
நிற்கிறது.
முடிவுரை:
"ஒரு நாட்டின் முதுசெலும்பு அந்த நாட்டு இளைஞர்கள்" என்றார்
மகாத்னா காந்தி, அது முற்றிலும் உண்மையே! நாட்டின் வளர்ச்சிக்கு
முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே! என்பதை
கண்கூடாகப் பார்க்க முடிகிறது.