பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 4
குறு வினாக்கள்
குறு வினா 
இவ்வடிகளில்
கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?
v  கழிந்த பெரும் கேள்வியினான் – குசேல பாண்டியன்
v  காதல் மிகு கேண்மையினான் – இடைக்காடனார்
2. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
v 
புதிய
சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
v பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம்
 போன்றவற்றை அறியமுடிகிறது.
v 
கருத்துப்
பகிர்வை தருகிறது.
v 
3. அமர்ந்தான் – பகுபத
உறுப்பிலக்கணம் தருக. 
அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்
v அமர் – பகுதி
                          
v  த்(ந்) – சந்தி 
v ந் – ஆனது விகாரம்
                  
v  த் – இறந்த கால இடைநிலை
v  ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி 
4. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை
நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர்
கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
v உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால
 வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக்
கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப்
பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
v சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப்
 பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.                   
