10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-3 -MOZHIYAI ALVOM

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 3

மொழியை ஆள்வோம்

இளந்தமிழ் வழிகாட்டி 

-----------------------------------------------------------------------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க

1.       Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.


        மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூற விழைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.


பழமொழியை நிறைவு செய்க:-


1

உப்பில்லாப்

பண்டம் குப்பையிலே

2.

ஒரு பானை

சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3

உப்பிட்டவரை

உள்ளளவும் நினை

4

விருந்தும்

மருந்தும் மூன்று நாள்

5

அளவுக்கு

மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

 

பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.

பழைய சோறு

பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை

ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள்

நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு

மணத்தை, சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து  மென்றவள்

சொல்கிறேன்.பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு

முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்த காலையில் அதன் பெயர் பழைய சோறு

அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல்

குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால்,

வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு

வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம் ! நல்ல பழையது மாம்பழ வாசம்

வீசுமாம். பழைய சோறுஅது கிராமத்து உன்னதம்.


பழைய சோறு


Ø  இரவு முழுவதும் நீரில் ஊரிய புழுங்கலரிசி சோறு, காலையில் பழைய சோறாக இருக்கும். அதனை வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை.


Ø  சோற்றைப் பிழிந்து வடுமாங்காய்,உப்பு நார்த்தங்காய் அதனுடன் சேர்த்துக் கொள்வது இன்னொரு வகை


Ø  சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம். மாம்பழ வாசம் வீசும்.


Ø  பழைய சோறுஅது கிராமத்து உன்னதம்.


கதையாக்குக

மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது  மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.


          ஒரு வயதான முதியவரைப் போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய் விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விட்டு பணம் பெற்றுக் கொடுத்த அந்தத் தருணம் அந்த முதியவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல என் கண்களையும் கலங்க வைத்தது.


கடிதம் எழுதுக.

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும்

இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர், சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுத்தல்சார்பு

          வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் சாம்பார் சாதம் உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                                              இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                               தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                        அ அ அ அ அ.

இடம் : சேலம்        

நாள் : 04-03-2025

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001.

நயம் பாராட்டுக

        கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

          அத்தமிக்கும் போது அரிசிவரும்குத்தி

          உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

          இலையிலிட வெள்ளி எழும்                                 - காளமேகப் புலவர்

திரண்ட கருத்து:

கருத்து – 1

          கடல் சூழ்ந்த நாகப்பட்டிணத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலையில் அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் போட ஊரே அடங்கும். சமைத்துப் பரிமாறும் போது விடிந்து விடும். இது சத்திரமா? என குறிப்பு தருகிறது.

கருத்து-2

        நாகப்பட்டிணத்தில் காத்தான் சத்திரத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுவதால் இருட்டு வரை அரிசி இருக்கும். அரிசி குத்தி உலையிடுவதும், அன்னமிடுவதும் தொடர்ந்து கொண்டிருப்பது ஊராரின் பசியை அடக்கும். அன்னம் இலையிலிட வெள்ளி முளைக்கும்.

பொருள் நயம்:

அத்தமிக்கும் போது அரிசிவரும்குத்தி

உலையிலிட ஊரடங்கும்

இலையிலிட வெள்ளி எழும். ஆகியன ஆழமான பொருள் உடையன.

 சொல் நயம் :

        இரு பொருள் பட அழகான தமிழ்ச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

சந்த நயம் :

          இச்செய்யுள் இசையுடன் பாடுவதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

மோனை நயம் :

        முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

த்துக்கடல் -        காத்தான்             த்தமிக்கும் -        ரிசி

எதுகை நயம் :

         முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.

த்துகடல்    -        த்திரத்தில்           லையிலிட -        லையிலிட

முரண் நயம் :

        முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.  

 அத்தமிக்கும் × வெள்ளி எழும்.

இயைபு நயம் :

        பாடலில் கடைசி எழுத்தோ,சீரோ,அசையோ,ஓசையோ இயைந்து வருவது.

                    அரிசி வரும்வெள்ளி எழும்.

 

அணி நயம்:

        சொற்கள் பிரிவுபடாமல் நின்று இரு பொருளைத் தருவதால் இதில் செம்மொழிச் சிலேடை அணி பயின்று வந்துள்ளது.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post