பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
குறு வினாக்கள்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
Ø வருக, வணக்கம்
Ø வாருங்கள்.
Ø அமருங்கள், நலமா?
Ø நீர் அருந்துங்கள்
2. ‘ தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக்
குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி ‘ என்பது
இலக்கியச்
செய்தி.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத
ஒன்றா? உங்கள் கருத்தைக்
குறிப்பிடுக.
Ø
விருந்தோம்பலுக்கு
செல்வம் இன்றையாமையாதது இல்லை.
Ø
விருந்து கொடுக்க
வேண்டும் என்ற மனநிலை இருந்தால் போதும்
3. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
சிலம்பு,கிண்கிணி |
காலில் அணிவன |
அரைஞாண் |
இடையில் அணிவது |
சுட்டி |
நெற்றியில் அணிவது |
குண்டலம், குழை |
காதில் அணிவன |
சூழி |
தலையில் அணிவது |
4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர்
குறிப்பிட்டுள்ளார். – அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.
கல்வியும் செல்வமும் |
கல்வி செல்வம் |
விருந்தும் ஈகையும் |
விருந்து ஈகை |
5. தண்ணீர் குடி , தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின்
வகையைக்
கண்டறிந்து விரித்து எழுதுக
தண்ணீர் குடி |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
முகில் தண்ணீரைக் குடித்தான் |
தயிர்க்குடம் |
இரண்டாம் வேற்றுமை உருபும் உடன் தொக்கத் தொகையும் |
அமுதா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள் |