பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 2
நெடு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------
நெடுவினாக்கள்
1. காற்று மாசுபாட்டைத் தடுக்கும்
வழிமுறைகளை விவரித்து எழுதுக..
குறிப்புச் சட்டம் முன்னுரை காற்று மாசுபாடு மரங்கள் நடுதல் பொதுப்போக்குவரத்து நெகிழி கட்டுப்பாடு விழிப்புணர்வு
ஏற்படுத்துதல் முடிவுரை |
முன்னுரை :
ஐம்பூதங்களில் ஒன்று காற்று. காற்று இல்லையேல் உலகம் இல்லை. அக்காற்று
மாசுபாட்டைத் தடுக்கும்
வழிமுறைகள் குறித்து விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.
காற்று மாசுபாடு :
v காற்று
மாசுபாடு என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஒரு பெரும் ஆபத்தாகும்.
v
இது மனிதர்களின்
ஆரோக்கியத்திற்கும், உயிரினங்களுக்கும் தீங்கு
ஏற்படுத்தும்.
மரங்கள் நடுதல் :
v மரங்கள்
அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.
v அதிக
மரங்கள் நடுவதன் மூலம் காற்றின் தூய்மையை பராமரிக்கலாம்.
பொதுப்போக்குவரத்து :
v மக்கள்
பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
v மின்சார
வாகனங்களை மிகுதியாகப் பயன்படுத்துங்கள்.
நெகிழி கட்டுப்பாடு :
v தீயால் எரிக்கப்படும் நெகிழி மற்றும் வேதியியல் கழிவுகள் காற்றை மிகவும்
மாசுபடுத்துகின்றன.
v
புதைவடிவ எரிபொருள்களைத்
தவிருங்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்துதல் :
v மக்களுக்குள் காற்று மாசுபாட்டின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது
மிக முக்கியம்.
v பள்ளிகள், கல்லூரிகள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மாசுபாடு
குறைக்கும் நடவடிக்கைகளை அனைவருக்கும் எடுத்துரைக்க
வேண்டும்.
முடிவுரை :
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து
விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.
2. “ பிரும்மம் “ கதை உணர்த்தும்
பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பை
விவரிக்க.
குறிப்புச் சட்டம்
முன்னுரை காலி இடமும் குடும்ப
உறுப்பினர்களின் விருப்பமும் அடுக்குத் தொடர் ஒலிக் குறிப்பு முடிவுரை |
முன்னுரை :
இயற்கைக்கு நாம் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடன்களில் மரம் வளர்த்தலும்
ஒன்றாகும். குடும்ப உறுப்பினர்கள் நட்டுவைத்த மரம் அவர்களின் வாழ்வில்
பின்னிப்பிணைந்த விதத்தை இக்கட்டுரையில் காண்போம்.
காலி இடமும், குடும்ப உறுப்பினர்கள் விருப்பமும் :
·
புதிய வீட்டில் குடிப்போனக்
குடும்பத்திற்கு வீட்டின் முன்னால் கொஞ்ச காலி இடம் இருந்தது.
·
பாட்டி – பசு வாங்கி
கட்டி வளர்க்கலாம்
·
அம்மா – காய்கறி செடி
வளர்க்கலாம்
·
தங்கை செளந்திரா
– பூச்செடிகள் நடலாம்.
என தங்களின் விருப்பத்தை யோசனையாகக் கூறினார்கள்
முருங்கைச் செடி :
·
அப்பா – இரண்டு நாள்
கழித்து முருங்கை நடலாம் என்றார்.
·
முருங்கைக் கீரை
– கபத்தைக் கரைக்கும் ; கால்சியம் நிறைந்தது.
·
அப்பாவுக்கும் எல்லோருக்கும்
முருங்கைப் பிடிக்கும்.
·
அப்பாவின் நண்பர்
மகன் முருங்கைக் கொம்பு ஒடித்துக் கொண்டு வந்தார்.
·
அந்த காலி இடத்தில்
நடுப்பாங்காக அப்பா நட்டார். அம்மா துணை செய்தார்.
வளரும் முருங்கை :
· முருங்கை பட்டையின் பல்வேறு இடங்களில் பச்சைப் புள்ளியாக தளிர் விட்டிருந்தது.
· வெளியேறத் துடிக்கும் உயிரின் உருவம் பார்க்கப் பரவசம் தந்தது.
முருங்கையின் உறவு :
·
முருங்கைக் கீரையைப்
போட்டு நெய் உருக்கினால் நெய் வாசனையாக இருக்கும்.
·
சைக்கிளை எடுத்துக்
கொண்டு வேலைக்கு செல்லும் போது அது கையை அசைக்கும்.
·
மத்தியான காலத்தில்
ஈசிச்சேரைப் போட்டுக் கொண்டு அதன் அருகில் அமர்வேன்.
·
புத்தகங்கள் படிப்பதும்,
எழுதுவதும் அதன் அடியில், அதன் ஆதரவில் தான்.
பறவைகளின் இல்லம் :
·
முருங்கை பறவைகளுக்கு
இல்லமானது.
·
பறவையின் நாதம் எங்களுக்கு
இசை
·
முருங்கை கிளையில்
பறவைகளும், காய்களும் பார்க்கையில் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும்
தாத்தாவைப் போலத் தோன்றும்.
வீழ்ந்த முருங்கை :
·
ஒரு நாள் பலத்த காற்றுடன்
வானம் மழையைப் பொழிந்தது.
·
மதிய உணவுக்கு வீட்டுக்கு
சென்றேன்.
·
வீட்டின் முன்னால்
ஒரு பெருங்கூட்டம்.
·
தெருவை அடைத்துக்
கொண்டு வீழ்ந்து கிடந்தது முருங்கை.
·
மரம் இருந்த இடம் சூன்யமாயிற்று.
·
மறுநாள் காலையில்
தான் அது இல்லாமையின் தாக்கம் ஏற்பட்டது.
முடிவுரை :
·
கொஞ்ச நாள் போயிருக்கும்.
·
துண்டாய் நின்றிருந்த
மரத்திலிருந்து ஓர் இடத்தில் சின்னதாய் கிளைந்திருந்தது.
·
உயிர் தான்.
·
பிற உயிர்களையும்
தம் உயிர் போல் நேசிக்கும் பண்பினை இக்கதை அழகாக எடுத்துரைக்கிறது.
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
- கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை
செய்க.
காற்றைப் பாராட்டுதல் :
கவிஞர் காற்றினை பலவாறாக பாராட்டியுள்ளார்.
·
பாதி மலர் போல் வரும்
மெல்லியக் காற்று.
·
காலைப் பொழுதின் குளிர்க்காற்று
·
மெல்ல நடந்து வரும்
இளந்தென்றல்
·
தமிழ்ப் போல் சிறப்புடன்
வாழ்வாயாக
மோனை நயம்:
செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.
மலர்ந்தும் மலராத
வளரும் வண்ணமே
எதுகை நயம்:
செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.
மலர்ந்தும் மலராத
சந்த நயம்:
இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.
இயைபு நயம்:
இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல்
இயைபு நயம்.
வண்ணமே அன்னமே
முரண் நயம்:
முரண்பாடாக அமைவது முரண்.
மலர்ந்தும் × மலராத விடிந்தும் × விடியாத
பொருள் நயம்:
காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.