10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-2- BIG QUESTION

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 2

நெடு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

----------------------------------------------------------------------------------------------------------------------------

நெடுவினாக்கள்

1.  காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக..

குறிப்புச் சட்டம்

முன்னுரை

காற்று மாசுபாடு

மரங்கள் நடுதல்

பொதுப்போக்குவரத்து

நெகிழி கட்டுப்பாடு

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

முடிவுரை


முன்னுரை :


                ஐம்பூதங்களில் ஒன்று காற்று. காற்று இல்லையேல் உலகம் இல்லை. அக்காற்று

             மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.


காற்று மாசுபாடு :


v  காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஒரு பெரும் ஆபத்தாகும்.



v  இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும், உயிரினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும்.



மரங்கள் நடுதல் :


            v மரங்கள் அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.


            v அதிக மரங்கள் நடுவதன் மூலம் காற்றின் தூய்மையை பராமரிக்கலாம்.


பொதுப்போக்குவரத்து :


v  மக்கள் பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.



v  மின்சார வாகனங்களை மிகுதியாகப் பயன்படுத்துங்கள்.



நெகிழி கட்டுப்பாடு :


v  தீயால் எரிக்கப்படும் நெகிழி மற்றும் வேதியியல் கழிவுகள் காற்றை மிகவும்

 மாசுபடுத்துகின்றன.


v  புதைவடிவ எரிபொருள்களைத் தவிருங்கள்


விழிப்புணர்வு ஏற்படுத்துதல் :


v  மக்களுக்குள் காற்று மாசுபாட்டின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது

   மிக முக்கியம்.


v  பள்ளிகள், கல்லூரிகள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மாசுபாடு


 

 குறைக்கும் நடவடிக்கைகளை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.


முடிவுரை :

        காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.


 

2. “ பிரும்மம் “ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பை

    விவரிக்க.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

காலி இடமும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பமும்

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை


முன்னுரை :


        இயற்கைக்கு நாம் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடன்களில் மரம் வளர்த்தலும் 

        ஒன்றாகும். குடும்ப உறுப்பினர்கள் நட்டுவைத்த மரம் அவர்களின் வாழ்வில் 

        பின்னிப்பிணைந்த விதத்தை இக்கட்டுரையில் காண்போம்.

 

காலி இடமும், குடும்ப உறுப்பினர்கள் விருப்பமும் :

·         புதிய வீட்டில் குடிப்போனக் குடும்பத்திற்கு வீட்டின் முன்னால் கொஞ்ச காலி இடம் இருந்தது.

·         பாட்டி – பசு வாங்கி கட்டி வளர்க்கலாம்

·         அம்மா – காய்கறி செடி வளர்க்கலாம்

·         தங்கை செளந்திரா – பூச்செடிகள் நடலாம்.

என தங்களின் விருப்பத்தை யோசனையாகக் கூறினார்கள்


முருங்கைச் செடி :


·         அப்பா – இரண்டு நாள் கழித்து முருங்கை நடலாம் என்றார்.

·         முருங்கைக் கீரை – கபத்தைக் கரைக்கும் ; கால்சியம் நிறைந்தது.

·         அப்பாவுக்கும் எல்லோருக்கும் முருங்கைப் பிடிக்கும்.

·         அப்பாவின் நண்பர் மகன் முருங்கைக் கொம்பு ஒடித்துக் கொண்டு வந்தார்.

·         அந்த காலி இடத்தில் நடுப்பாங்காக அப்பா நட்டார். அம்மா துணை செய்தார்.


வளரும் முருங்கை :


·         முருங்கை பட்டையின் பல்வேறு இடங்களில் பச்சைப் புள்ளியாக தளிர் விட்டிருந்தது.

·         வெளியேறத் துடிக்கும் உயிரின் உருவம் பார்க்கப் பரவசம் தந்தது.


முருங்கையின் உறவு :


·         முருங்கைக் கீரையைப் போட்டு நெய் உருக்கினால் நெய் வாசனையாக இருக்கும்.

·         சைக்கிளை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்லும் போது அது கையை அசைக்கும்.

·         மத்தியான காலத்தில் ஈசிச்சேரைப் போட்டுக் கொண்டு அதன் அருகில் அமர்வேன்.

·         புத்தகங்கள் படிப்பதும், எழுதுவதும் அதன் அடியில், அதன் ஆதரவில் தான்.


பறவைகளின் இல்லம் :


·         முருங்கை பறவைகளுக்கு இல்லமானது.

·         பறவையின் நாதம் எங்களுக்கு இசை

·         முருங்கை கிளையில் பறவைகளும், காய்களும் பார்க்கையில் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் தாத்தாவைப் போலத் தோன்றும்.


வீழ்ந்த முருங்கை :


·         ஒரு நாள் பலத்த காற்றுடன் வானம் மழையைப் பொழிந்தது.

·         மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றேன்.

·         வீட்டின் முன்னால் ஒரு பெருங்கூட்டம்.

·         தெருவை அடைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்தது முருங்கை.

·         மரம் இருந்த இடம்  சூன்யமாயிற்று.

·         மறுநாள் காலையில் தான் அது இல்லாமையின் தாக்கம் ஏற்பட்டது.

முடிவுரை :


·         கொஞ்ச நாள் போயிருக்கும்.

·         துண்டாய் நின்றிருந்த மரத்திலிருந்து  ஓர் இடத்தில் சின்னதாய் கிளைந்திருந்தது.

·         உயிர் தான்.

·         பிற உயிர்களையும் தம் உயிர் போல் நேசிக்கும் பண்பினை இக்கதை அழகாக எடுத்துரைக்கிறது.


3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல


        வளரும் விழி வண்ணமேவந்து


  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக


        விளைந்த கலை அன்னமே


  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி


        நடந்த இளந்தென்றலேவளர்


  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு


        பொலிந்த தமிழ் மன்றமே


  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.


காற்றைப் பாராட்டுதல் :


                கவிஞர் காற்றினை பலவாறாக பாராட்டியுள்ளார்.

·           பாதி மலர் போல் வரும் மெல்லியக் காற்று.

·           காலைப் பொழுதின் குளிர்க்காற்று

·           மெல்ல நடந்து வரும் இளந்தென்றல்

·           தமிழ்ப் போல் சிறப்புடன் வாழ்வாயாக


மோனை நயம்:

       

            செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.


                    லர்ந்தும்    லராத         

        

ளரும்      ண்ணமே


எதுகை நயம்:

      

                செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

                  

                  ர்ந்தும்    ராத


சந்த நயம்:


        இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.


இயைபு நயம்:

      

          இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

               

           வண்ணமே          அன்னமே


முரண் நயம்:


        முரண்பாடாக அமைவது முரண்.


                   மலர்ந்தும் × மலராத                    விடிந்தும்  × விடியாத


பொருள் நயம்:


          காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post