பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 2
மொழியை ஆள்வோம்
இளந்தமிழ் வழிகாட்டி
-----------------------------------------------------------------------------------------------------------------------
மொழியை ஆள்வோம்
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) இயற்கை – செயற்கை |
இயற்கைக்கு செயற்கை
என எழுதினாள். |
ஆ) கொடு - கோடு |
கொடுப்பதற்குக் கோடு
இடக் கூடாது |
இ) கொள் - கோள் |
கோள்களை அறிந்து கொள்
என ஆசிரியர் கூறினார். |
ஈ) சிறு - சீறு |
சிறு பூனையும் சீறும் |
உ) தான் - தாம் |
தான் என்று இருக்காமல்
தாம் என இருக்க வேண்டும் |
ஊ) விதி - வீதி |
விதி அவனை வீதியில்
கொண்டு வந்து சேர்த்தது. |
( எளிமையாக : _______ என்பதற்கு __________ என
எழுதினான் )
தமிழில் மொழிபெயர்த்துத்
தலைப்பிடுக:-
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The
milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in
percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze.
The breeze gently blows everywhere and makes everything pleasant.
விடை
காலைப் பொழுது
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற
எழுகின்றான். அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக்
கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை
எல்லா
இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி
செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப் பற்றிய
அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக்
காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்;
ஆல மலர்;பலா மலர்.
மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது
என்று உறுதியாக அறிய இயலாதுள்ள
நிலையில் இருக்கும்
மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள்
இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே
பொதிந்திருக்கும்
மலர்கள்: அத்தி,ஆலம், கொழிஞ்சி, பலா.
பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில்
இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை
கொண்டு மலரில் சில
எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப்
பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
இலுப்பைப் பூக்கள்
இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும்.
பாதிரிப் பூ குடிநீருக்குத்
தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி
அதிலிருந்து ஒரு வகை
அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
1. மலரில் சில எளியவை
ஆகக் காரணங்கள் யாவை?
விடை: பயன்பாடு, நாற்றம்,மக்களது விருப்பில்
இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன
2. அரும்பாகி மொட்டாகி
பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
விடை: அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல்
உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.
3. பத்தியில் இடம்பெற்றுள்ள
தொகாநிலைத் தொடர்கள் நான்கினை எழுதுக
விடை: 1. கண்ணிற்கு காட்சி
2. மக்களது விருப்பில்
3. மரத்தின் மீதேறி
4. மணத்தை ஏற்றும்
வாழ்த்து மடல் எழுதுக.
மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப்
போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
சேலம்
03-03-2025
அன்புள்ள நண்பனுக்கு,
நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில
அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள்
பெற வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
அ அ அ அ அ அ அ .
உறைமேல் முகவரி;
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி தெரு, சேலம்.
பத்தியைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க
பாரதியின் வசன நடை – சிட்டுக் குருவி
சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள் ; சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து ;
அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு ; கருமையும் வெண்மையும்
கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு ; சிறிய தோகை ; துளித்துளிக் கால்கள் ; இத்தனையும் சேர்த்து
ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து
கொண்டு........
என் வீட்டில் இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று
ஆண் மற்றொன்று பெண்.