பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 2
குறு வினாக்கள்
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி
1. நமக்கு உயிர் காற்று
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – இது போன்று உலகக்
காற்று நாள்
விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
- மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம்
- மரம் நடுவோம்; காற்றை பெறுவோம்
2. ‘ எழுது என்றாள் ‘ என்பது விரைவு காரணமாக. ‘ எழுது எழுது என்றாள்’ என
அடுக்குத்
தொடரானது,’ சிரித்துப் பேசினார் ‘ என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
உவப்பின் காரணமாக , “ சிரித்து சிரித்துப் பேசினார் “
என அடுக்குத் தொடராகும்.
3. கட்டுரை படித்த – இச்சொற்களுக்கு
இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித்
தொடரை விரித்து எழுதுக.
கட்டுரையைப் படித்த மாணவன்.
4.மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும்
நிகழ்வுகளை எழுதுக.
மேகங்களின் துணிச்சல் : முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கிறது.
மேகங்களின் கருணை : தாகங்கள் தீர்க்கிறது.
5. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு
பெயர் சூட்டியுள்ளனர்?
- கிழக்கு – கொண்டல்
- மேற்கு - கோடை
- வடக்கு – வாடை
- தெற்கு – தென்றல்