6TH-TAMIL-FIRST MID TERM - MODEL QUESTION - 2023 - PDF

 

ஆறாம் வகுப்பு

முதல் இடைத்  தேர்வு வினாத்தாள்

பாடம்    : தமிழ்                                                                            மொத்த மதிப்பெண் : 30

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                        4×1=4

1. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி   ஆ) கோபம்    இ) வருத்தம் ஈ) அசதி

2.  ஒருவருக்குச் சிறந்த அணி

அ) மாலை  ஆ) காதணி  இ) இன்சொல்  ஈ) வன்சொல்

3. கதிரவனின் மற்றொரு பெயர் ------

அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்

4. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.

அ) துருவப்பகுதி ஆ) இமயமலை இ) இந்தியா ஈ) தமிழ்நாடு

II) . பொருத்துக:-                                                                                                     3×1=3

5 முத்துச்சுடர்போல - மாடங்கள்

6. தூய நிறத்தில் - தென்றல்

7. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-                                                 3×2=6

( வினா எண் : 11 கட்டாய வினா )                                         

8. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

9. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

10. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?

11. இனிய எனத் தொடங்கும் குறளை எழுதுக

12. சார்பெழுத்துகள் எத்தனை? அவையாவை?

IV) எவையேனும் இரண்டு வினாவுக்கு விடையளி.                                               3×2=6

( வினா எண் : 15 கட்டாய வினா )                                                         

13. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக..

14. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?

15. தமிழ்க்கும் எனத் தொடங்கும் இன்பத் தமிழ் பாடலை எழுதுக

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கும் விடையளி:-                                                 3×2=6

16. பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக

17. தமிழ் மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?

18. பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக

19. தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?

VI) எவையேனும் ஒரு   வினாவிற்கு விடையளி:-                                                           5×1=5

20. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பல பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

 1. பழமொழியின் சிறப்பு சொல்வது

அ) விரிவாகச் ஆ) சுருங்கச்  இ) பழைமையைச்  ஈ) பல மொழிகளில்

2. நோயற்ற வாழ்வைத் தருவது  ______

3. உடல்நலமே ________  அடிப்படை

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக:-

21. விடுப்பு வேண்டி உன் வகுப்பாசிரியருக்கு விண்ணப்பம் வரைக.

 

 


JOIN OUR GROUPS:

WHATSAPP :            https://chat.whatsapp.com/FQTE7owwv618swxkBlTONp

 

TELE GRAM :            https://t.me/thamizhvithai

ஆக்கம் : தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post