SALEM DT - 2ND UNIT TEST MODEL QUESTION - TAMIL - PDF

 

சேலம் மாவட்டத்தில் பத்து முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பொதுத் தேர்வு அச்சத்தினைப் போக்கும் வகையில் அலகுத்தேர்வுகள் 23-11-22 முதல் நடத்தப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான அலகுத் தேர்வு - 1     25-11-22 அன்று நடைபெற்றது. அதற்கான வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்பை நமது வலையொளியில் பதிவேற்றம் செய்தோம். அதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு அலகுத் தேர்வு- 2க்கான தேர்வு  05-12-2022 அன்று நடைபெற உள்ளது. அதற்கான மாதிரி வினாத்தாள் நமது தமிழ்விதை வளைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்து  பயன்படுத்திக் கொள்ளவும்.

மாதிரி அலகுத் தேர்வு - 2

வகுப்பு : 10                                                                                               அலகு : இயல் 4,5

பாடம்    : தமிழ்                                                                                        மொத்த மதிப்பெண் : 50

பகுதி - I

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                                                     8×1= 8

1. பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்                     ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியும்             ஈ) வானத்தையும் பேரொலியையும்

2 அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

அ) அருமை + துணை                   ஆ) அரு + துணை இ) அருமை + இணை                   ஈ) அரு + இணை

3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா             ஆ) சீலா             இ) குலா             ஈ) இலா

4. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ___________ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ______

அ) அமைச்சர், மன்னன்     ஆ) அமைச்சர், இறைவன்  இ) இறைவன், மன்னன்               ஈ) மன்னன்,இறைவன்

5. சதம் என்றால் ____________என்பது பொருள்

அ) பத்து                         ஆ) எட்டு                         இ) நூறு                         ஈ) ஆயிரம்

பாடலைப் படித்து பின் வரும் வினாக்களுக்கு விடையளி

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி

உரு அறிவாரா    ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “

6. ஊழ் ஊழ் – இலக்கணக் குறிப்பு

அ. இரட்டைக் கிளவி                     ஆ. பண்புத் தொகை         இ. அடுக்குத் தொடர்          ஈ. வினைத் தொகை

7. பாடலின் ஆசிரியர்

அ. கீரந்தையார்               ஆ. பூதஞ்சேந்தனார்                     இ. நப்பூதனார்                 ஈ. குலசேகராழ்வார்

8. பாடலில் உணர்த்தப்படும் கருத்து

அ. தத்துவக் கருத்து          ஆ. அறிவியல் செய்தி                     இ. நிலையாமை  ஈ. அரசியல் அறம்

பகுதி – 2  பிரிவு - 1

II) பின்வரும் வினாக்களில் எவையேனும் ஐந்து விடையளி:-                                                                                        5×2=10

9. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

10. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

11. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

  இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம்

  இருக்கிறதா?இல்லையா?

  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

12.. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

13. கலைச்சொல் தருக :- Cosmic rays , Thesis

14. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க

அ. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ______யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)

காட்டு விலங்குகளைச் _______தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ___________திருத்த உதவுகிறது.( சுட்டல்,சுடுதல் )

.15. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

 

பிரிவு - 2

III) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:- வினா எண் : 18 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.                   3×3=9

16. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

17. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

18.” புண்ணிய புலவீர் “– எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம் பாடலை அடிமாறாமல் எழுதுக.

19. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

20. தொடர்களில் உள்ள எழுவாயை செழுமைச் செய்க

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.                         2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

பகுதி – 3  பிரிவு - 1

IV)  பின்வரும் வினாக்களுக்கு விடையளி                                                                                                        2×5=10

21.. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக 

( அல்லது )

இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

22. விண்வெளியும்,கல்பனா சாவ்லாவும் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. ( அல்லது )

கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

பகுதி – 3  பிரிவு - 2

படிவம் நிரப்புக:-                                                                                                                    1×5=5

23. 151, வடக்கு ரதத் தெரு, மேலமாசி, மதுரை என்னும் முகவரியில் வசித்து வரும் கந்தசாமியின் மகன் தமிழினியாள் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர விரும்பிகிறார். தேர்வர் தம்மை தமிழினியாளாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

பகுதி – 4

V) பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க                                                                                          2×4=8

24. பள்ளியிலும்,வீட்டிலும் நீ நடந்துக் கொள்ளும் செயல்பாட்டினை பட்டியலிடுக      ( அல்லது )

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



25. பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் – குறித்த செயல் திட்ட வரைவு ஒன்று உருவாக்குக ( அல்லது )

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடைத்தருக:-

  பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

CLICK HERE TO GET INTO PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post